ஆண்பால் கிளவி(பெருந்திணை): Difference between revisions
(; Added info on Finalised date) |
mNo edit summary |
||
| Line 12: | Line 12: | ||
கயல்கூடு வாள்முகத்தாள் கண்ணிய நெஞ்சம் | கயல்கூடு வாள்முகத்தாள் கண்ணிய நெஞ்சம் | ||
முயல் கூடு முன்னதாக் காணின் - உயற்கூடும் | முயல் கூடு முன்னதாக் காணின் - உயற்கூடும் | ||
காணா மரபில் கடும் பகலும் | காணா மரபில் கடும் பகலும் கங்குலும் | ||
நாணாளும் மேயா நகை (332) | நாணாளும் மேயா நகை (332) | ||
</poem>பொருள்: இரண்டு கயல்களையே கண்களாகக் கொண்ட தலைவியைத் தழுவக் கருதிய எனக்குப் பகலிலும் இரவிலும் மகிழ்ச்சி இல்லாமல் போனது. ஒருவேளை (தலைவியின் முகம் போன்ற) நிலவைக் கண்டால் நான் பிழைத்திருக்கக் கூடும். | </poem>பொருள்: இரண்டு கயல்களையே கண்களாகக் கொண்ட தலைவியைத் தழுவக் கருதிய எனக்குப் பகலிலும் இரவிலும் மகிழ்ச்சி இல்லாமல் போனது. ஒருவேளை (தலைவியின் முகம் போன்ற) நிலவைக் கண்டால் நான் பிழைத்திருக்கக் கூடும். | ||
Latest revision as of 20:03, 23 December 2025
ஆண்பால் கிளவி புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவன் வேட்கை மிகுந்து சொல்லுதல்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வேட்கை மிகும் ஆசை எல்லை கடந்துவிடக் காதல் ஏக்கமுற்று மயங்கியிருக்கும் தலைவன் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
தாம் உறு காமம் தலை பரிந்து ஏங்கி
ஏமற்று இருந்த இறைவன் உரைத்தன்று(கொளு 17.8)
வெண்பா
கயல்கூடு வாள்முகத்தாள் கண்ணிய நெஞ்சம்
முயல் கூடு முன்னதாக் காணின் - உயற்கூடும்
காணா மரபில் கடும் பகலும் கங்குலும்
நாணாளும் மேயா நகை (332)
பொருள்: இரண்டு கயல்களையே கண்களாகக் கொண்ட தலைவியைத் தழுவக் கருதிய எனக்குப் பகலிலும் இரவிலும் மகிழ்ச்சி இல்லாமல் போனது. ஒருவேளை (தலைவியின் முகம் போன்ற) நிலவைக் கண்டால் நான் பிழைத்திருக்கக் கூடும்.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:32:36 IST