அருணாசல ஐயர்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்) |
(Added: Category:ஈழம்) |
||
| Line 17: | Line 17: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | [[Category:புலவர்]] | ||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 01:04, 21 December 2025
அருணாசல ஐயர் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) ஈழத்துப் புலவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
அருணாசல ஐயர் இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த அப்பாசாமி ஐயருக்குப் பிறந்தார். நல்லூர் வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளையிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
அருணாசல ஐயர் கவிபாடுவதில் சிறந்தவர். வட மொழியிலும் தென்மொழியிலும் புலமை மிக்கவர். வடமொழி நூல்கள் சிலவற்றிற்குத் தமிழுரை செய்தார்.
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:அருணாசல ஐயர், அப்பாசாமி ஐயர்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jun-2024, 04:52:01 IST