under review

சஜு: Difference between revisions

From Tamil Wiki
(Corrected typo errors;)
(Corrected typo errors;)
 
Line 15: Line 15:


== ஆய்வுப் பணி==
== ஆய்வுப் பணி==
சஜு தன் செண்டை மேளம் சார்ந்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து ‘கொட்டடிக்காரன்' என்னும் புத்தகத்தை 2023-ல் வெளியிட்டார். மணவாளக்குறிச்சியில் தனது குலத்தெய்வமான ஆற்றுமாடன் தம்புரான் குறித்து சஜு எழுதிய நூல் 2025-ல் வெளிவந்தது. ஆற்றுமாடன் தம்புரான் வரலாறு நிகழ்வான ‘மண்ணாப்பேடி, புலைப்பேடி' ஒழிப்பு போராட்டத்தையும், வலியகேசி, சிறியகேசி என்ற நாட்டார் கதாபாத்திரங்களையும் கொண்டு அமையப் பெற்ற கதைப்பாடல்,  அது சார்ந்த வரலாறு, கோவில்கள் பற்றிய ஆய்வு நூல்.  
சஜு தன் செண்டை மேளம் சார்ந்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து 'கொட்டடிக்காரன்' என்னும் புத்தகத்தை 2023-ல் வெளியிட்டார். மணவாளக்குறிச்சியில் தனது குலத்தெய்வமான ஆற்றுமாடன் தம்புரான் குறித்து சஜு எழுதிய நூல் 2025-ல் வெளிவந்தது. ஆற்றுமாடன் தம்புரான் வரலாறு நிகழ்வான 'மண்ணாப்பேடி, புலைப்பேடி' ஒழிப்பு போராட்டத்தையும், வலியகேசி, சிறியகேசி என்ற நாட்டார் கதாபாத்திரங்களையும் கொண்டு அமையப் பெற்ற கதைப்பாடல்,  அது சார்ந்த வரலாறு, கோவில்கள் பற்றிய ஆய்வு நூல்.  


பார்க்க: [[ஆற்றுமாடன் தம்புரான்]]
பார்க்க: [[ஆற்றுமாடன் தம்புரான்]]

Latest revision as of 17:40, 22 November 2025

Saju (1).jpg

சஜு (பிறப்பு: பெப்ரவரி 22, 1998) நாட்டாரியல் ஆய்வாளர், கவிஞர். தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் மணவாளகுறிச்சி பகுதியில் நாட்டார் தெய்வம், கலைகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். நாட்டுப்புறத் தாளவாத்தியக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார்.

பிறப்பு, கல்வி

Saju1.jpeg

சஜு பெப்ரவரி 22, 1998 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் சகாதேவன், லதா தம்பதியருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர் ஒரு அக்கா (சஜிதா). சஜு ஆரம்பப் பள்ளியை கடியப்பட்டிணம் அரசு தொடப்பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டு வரை மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் செயிண்ட் சேவியர் கத்தோலிக் கல்லூரியில் கட்டுமானத் துறையில் (சிவில்) பொறியியல் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சஜு பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். பகுதி நேர கட்டிடக் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.

கலை வாழ்க்கை

சஜு தன் பத்தாம் வயதிலிருந்து கோவில்களில் செண்டை மேளம் வாசித்து வருகிறார்.

பள்ளிப் பருவத்தில் கவிதை வாசிப்பில் ஆர்வம் கொண்டார். கல்லூரி நாட்களில் இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டார். முதல் தொகுப்பு 'துமிதங்கள்' 2021-ல் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு 'நீரருந்தும் நதி' (2022).

ஆய்வுப் பணி

சஜு தன் செண்டை மேளம் சார்ந்த அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து 'கொட்டடிக்காரன்' என்னும் புத்தகத்தை 2023-ல் வெளியிட்டார். மணவாளக்குறிச்சியில் தனது குலத்தெய்வமான ஆற்றுமாடன் தம்புரான் குறித்து சஜு எழுதிய நூல் 2025-ல் வெளிவந்தது. ஆற்றுமாடன் தம்புரான் வரலாறு நிகழ்வான 'மண்ணாப்பேடி, புலைப்பேடி' ஒழிப்பு போராட்டத்தையும், வலியகேசி, சிறியகேசி என்ற நாட்டார் கதாபாத்திரங்களையும் கொண்டு அமையப் பெற்ற கதைப்பாடல், அது சார்ந்த வரலாறு, கோவில்கள் பற்றிய ஆய்வு நூல்.

பார்க்க: ஆற்றுமாடன் தம்புரான்

விருதுகள்

2025 ஆம் ஆண்டில் ரமேஷ் பிரேதன் நினைவாக வழங்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது

நூல்கள்

ஆய்வு நூல்கள்
  • கொட்டடிக்காரன் (2023)
  • ஆற்றுமாடன் தம்புரான் (2025)
கவிதை நூல்கள்
  • துமிதங்கள் (2021)
  • நீரருந்தும் நதி (2022)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:27:20 IST