under review

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added and Edited: Image Added: Link Created: Proof Checked)
 
(Corrected year suffix text;)
Line 62: Line 62:


== மதிப்பீடு ==
== மதிப்பீடு ==
அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம் நூல், எண்ணூர்ப் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தைப் பற்றியும், அங்கு வழங்கப்படும் புனித சூசையப்பரின் அருளாசியைப் பற்றியும் பேசுகிறது. 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூலாகவும், கிறித்தவக் கலம்பக நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.
அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம் நூல், எண்ணூர்ப் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தைப் பற்றியும், அங்கு வழங்கப்படும் புனித சூசையப்பரின் அருளாசியைப் பற்றியும் பேசுகிறது. 20-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூலாகவும், கிறித்தவக் கலம்பக நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 21:14, 12 October 2025

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம்

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம் (பதிப்பு: 1914) கிறித்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் ஏ.எஸ். ஜெகராவு முதலியார்.

வெளியீடு

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம் நூலை, சென்னை மெர்க்குரி அச்சகம், 1914- அச்சிட்டு வெளியிட்டது. இதன் ஆசிரியர் வித்துவான் ஏ.எஸ். ஜெகராவு முதலியார். அச்சிட்டுப் பதிப்பித்தவர், ஆ. சூசை அண்ணாதுரை

நூல் அமைப்பு

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம் நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து கலம்பக இலக்கிய அமைப்பின் படி 102 பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

அர்ச் சூசையப்பர் கலம்பகம், ஒரு கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல். இது, திரு எண்ணூர்ப் பகுதியில் உள்ள அர்ச். சூசையப்பர் ஆலயத்தைப் பற்றியும், சூசையப்பரைப் பற்றியும் கூறும் ஒரு கலம்பக இலக்கியம். இந்நூலில் அர்ச். சூசையப்பரின் பெருமையும், அவர் மீது பாடப்பட்ட பாடல்களும் உள்ளன

கிறிஸ்தவத்தில் புனித சூசையப்பர் (St. Joseph) மரியாளின் கணவரும், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையுமாக கருதப்படுகிறார்.

பாடல்

எனக்கே பெருங்கருணை செய்வா னெழுந்தான்

றனக்கே யடிமை தமியேன் - மனக்கேழ்

திருவரங்கொ ளெண்ணூர் திருவடியான் யார்க்குந்

தருவரங்கொ ளெண்ணூர்த் தலம்


படிகோடி யாக வினையான் மெலிந்து

படர்கோடி நின்ற பரிசால்

இடிகோடி யாக விடுமாரி பெய்த

இயலா னழித்த விறையோன்

மிடிகோடி யாக உருவாகி வந்து விளையாடு மார்பி னெழிலான்

கடிகோடி யாக முகமாற வெண்ணூர் கனிவா யுறைந்த னனரோ


நுண்ணிய நூல்பல கற்றுந் தெளிந்தும் நுவன்றுமென்ன?

மண்ணிய லாட்சியுங் கீர்த்தியும் பேரு மதிப்புமென்ன?

தண்ணிய செந்தமிழ்ப் பாமாலை மேவித் தழைக்கு மெண்ணூர்ப்

புண்ணிய னின்னரு ளில்லாதபோது பொருளல்லவே


பொருளை விரித்தானும் இருளை யிரித்தானும்

பூவின் கரத்தானுந் தேவினுரத்தானும்

மருளை யுதைத்தானும் அருளை விதைத்தானும்

மன்னர் குலத்தானும் நன்னர் புலத்தானும்

அருளை நிறைத்தானுங் கருணை வரத்தானும்

அடவி நடந்தானும் புடவி கடந்தானும்

பரமபதத்தானுஞ் சிரமவிதத்தானும்

பண்ணூர் தடத்தானும் எண்ணூரிடத்தானே

மதிப்பீடு

அர்ச் சூசையப்பர் கலம்பகம் என்னும் திரு எண்ணூர்க் கலம்பகம் நூல், எண்ணூர்ப் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தைப் பற்றியும், அங்கு வழங்கப்படும் புனித சூசையப்பரின் அருளாசியைப் பற்றியும் பேசுகிறது. 20-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூலாகவும், கிறித்தவக் கலம்பக நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.