காமநாதீஸ்வரர் ஆலயம்: Difference between revisions
Line 16: | Line 16: | ||
== தலமரம் == | == தலமரம் == | ||
காமநாதீஸ்வரர் ஆலயத்தின் மரம் மகிழம் | காமநாதீஸ்வரர் ஆலயத்தின் மரம் மகிழம் | ||
== கோயில் அமைப்பு == | |||
காமநாதீஸ்வரர் ஆலயம் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் விநாயகர் தக்ஷிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு, துர்க்கையும் வடபக்கமாக 63 நாயன்மார்களும் வீற்றிருக்கின்றன இங்குப் பிரம்மாவிற்கும் நடராஜருக்கும் தனித்தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. கருவறை சதுரவடிவமானது. வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் சன்னிதிக்கு முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. . கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. | |||
== அஷ்டபைரவர் == | |||
இந்த ஆலயத்தில் அஷ்டபைரவர்கள் என்னும் எட்டு பைரவர்கள் நிறுவப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது. | |||
(பார்க்க [[அஷ்ட பைரவர்]]) | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://tamil.hindustantimes.com/astrology/history-of-aragalur-kamanadheeshvarar-temple-131658317514526.html ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயம்] | * [https://tamil.hindustantimes.com/astrology/history-of-aragalur-kamanadheeshvarar-temple-131658317514526.html ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயம்] | ||
* [https://www.maalaimalar.com/devotional/temples/2022/02/02113513/3447147/Kamanada-Eswarar-Temple-Aragalur.vpf ஆறகளூர் காமநதீஸ்வரர் ஆலயம் மாலைமலர்] | * [https://www.maalaimalar.com/devotional/temples/2022/02/02113513/3447147/Kamanada-Eswarar-Temple-Aragalur.vpf ஆறகளூர் காமநதீஸ்வரர் ஆலயம் மாலைமலர்] |
Revision as of 17:38, 13 September 2022
காமநாதீஸ்வரர் ஆலயம் ( பொயு 11 ஆம் நூற்றாண்டு ) சேலம் மாவட்டத்தில் ஆறகளூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயில். இங்குள்ள மூலவரின் பெயர் காமநாதீஸ்வரர். காயநிர்மாலேஸ்வரர் கோயில் என்றும் இந்த ஆலயம் அழைக்கப்படுவதுண்டு.
இடம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ,சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் ஆறகளூர் என்னும் தொன்மையான சிற்றூரில் அமைந்துள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில். வசிஷ்டநதியின் கரையில் நிறுவப்பட்டது இந்த ஆலயம்
வரலாறு
பொயு 12 ஆம் நூற்றாண்டில் ஆறகளூர் சோழர்களின் ஆட்சிக்குக்கீழே மகதை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது.பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னர் மகதை நாட்டை ஆண்டு வந்தார். இவர் சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தளபதியாகவும், மகதையின் குறுநில மன்னராகவும் விளங்கினார்.இவர் காலத்தில்தான் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோயிலும், கரிவரதராஜ பெருமாள் கோயிலும் கட்டப்பட்டன.
தொன்மம்
இங்குள்ள சிவன் மன்மதனை எரித்த கோலத்தில் கோயில் கொண்டவர் என்றும் ஆகவே காமநாத ஈஸ்வரர் என்று பெயர் கொண்டார் என்றும் தொன்மம் உள்ளது. காயநிர்மாலேஸ்வரர் (உடலை அழித்தவர்) என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவண்ணாமலையில் அனல்வடிவில் கோயில் கொண்ட சிவனை இங்கே வாயு வடிவில் வசிஷ்டர் நிறுவியதாக தொன்மம் உள்ளது.
இப்பகுதியை ஆண்ட கெட்டிமுதலி எனும் குறுநிலமன்னனின் கனவில் தோன்றிய சிவன், தான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் இருப்பதாகவும், தனக்கு கோயில் எழுப்பும்படியும் கூறியதன்படி அவன் இந்த லிங்கத்தை தோண்டி எடுத்து கோயில் கட்டினான் என்று தொன்மம் உள்ளது
மூலவர்
இந்த கோயிலின் மூலவர் லிங்க வடிவில் அமைந்துள்ளார். இது வாயுத்தலம் எனப்படுகிறது. கருவறைக்கு வடபுற தச் சன்னதியில் பெரிய நாயகி அம்பாள் கோயில்கொண்டிருக்கிறார்.தாயாருக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு
தலமரம்
காமநாதீஸ்வரர் ஆலயத்தின் மரம் மகிழம்
கோயில் அமைப்பு
காமநாதீஸ்வரர் ஆலயம் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரமும், கருவறையில் ஆனந்த விமானமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் விநாயகர் தக்ஷிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு, துர்க்கையும் வடபக்கமாக 63 நாயன்மார்களும் வீற்றிருக்கின்றன இங்குப் பிரம்மாவிற்கும் நடராஜருக்கும் தனித்தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. கருவறை சதுரவடிவமானது. வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் சன்னிதிக்கு முன்பும் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. . கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன.
அஷ்டபைரவர்
இந்த ஆலயத்தில் அஷ்டபைரவர்கள் என்னும் எட்டு பைரவர்கள் நிறுவப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகச் சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது.
(பார்க்க அஷ்ட பைரவர்)