being created

சுவாமி கமலாத்மானந்தர்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 2: Line 2:
{{being created}}
{{being created}}


'''சுவாமி கமலாத்மானந்தர்''' (ஜூன் 30, 1948) ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இவர் மகாகவி பாரதியாரையும் சுவாமி விவேகானந்தரையும் இணைத்து ஆய்வு செய்து நான்கு பெரும் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.    
'''சுவாமி கமலாத்மானந்தர்''' (ஜூன் 30, 1948) துறவி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இவர் மகாகவி பாரதியாரையும் சுவாமி விவேகானந்தரையும் இணைத்து ஆய்வு செய்து மொத்தம் 1500 பக்கங்களில் நான்கு பெரும் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார்.      


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948இல் காட்பாடியில் பிறந்து அரக்கோணத்தில் வளர்ந்தவர்.   
சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948இல் காட்பாடியில் பிறந்து, அரக்கோணத்தில் வளர்ந்தவர்.  இவருடைய தாயார் பெயர் சங்கரி அம்மாள். தந்தையார் பெயர் சி. வடிவேல். 1948-ஆம் ஆண்டு இவரது குடும்பம் அரக்கோணம் வந்துவிட்டது. அரக்கோணத்தில் இவர் எஸ்.எஸ்.எஸ்-சி. வரை கல்வி பயின்றார்.   


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
            பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் மீது பற்றுக்கொண்டு  ஆகஸ்ட் 8,1968இல் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் துறவியானார். செப்டம்பர் 01,2000இல் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவரானார்.   11முறை காசி யாத்திரையும் ஒருமுறை கைலாஷ் யாத்திரையும் (1998) ஒருமுறை அமர்நாத் யாத்திரையும் (2000)மேற்கொண்டார்.  
       சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், ஆகஸ்ட் 8, 1968இல் சிரவண பூர்ணிமா நாளன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்.  ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு ‘தயாள்’ என்று பெயர் வைத்தார்.  1969இல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார். இவர் அரக்கோணத்தில் 1970இல் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவா சங்கம் 2020-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது.  பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய Training Center -இல் பயிற்சி பெற்றார். இவர் 1976 மார்ச் 3-ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண  ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், ‘பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பிரம்மச்சரிய தீட்சைப் பெற்றதைத்  தொடர்ந்து, 1977இல் ஆண்டு ஜனவரி மாதம் இவரை ‘[https://littamilpedia.org/index.php/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம்]’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார்.


== பொது வாழ்க்கை ==
== பொது வாழ்க்கை ==

Revision as of 21:33, 4 February 2022

சுவாமி கமலாத்மானந்தர்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


சுவாமி கமலாத்மானந்தர் (ஜூன் 30, 1948) துறவி, ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர். இவர் மகாகவி பாரதியாரையும் சுவாமி விவேகானந்தரையும் இணைத்து ஆய்வு செய்து மொத்தம் 1500 பக்கங்களில் நான்கு பெரும் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார்.

பிறப்பு, கல்வி

சுவாமி கமலாத்மானந்தர் ஜூன் 30, 1948இல் காட்பாடியில் பிறந்து, அரக்கோணத்தில் வளர்ந்தவர். இவருடைய தாயார் பெயர் சங்கரி அம்மாள். தந்தையார் பெயர் சி. வடிவேல். 1948-ஆம் ஆண்டு இவரது குடும்பம் அரக்கோணம் வந்துவிட்டது. அரக்கோணத்தில் இவர் எஸ்.எஸ்.எஸ்-சி. வரை கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

       சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், ஆகஸ்ட் 8, 1968இல் சிரவண பூர்ணிமா நாளன்று பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்.  ஸ்ரீமத் சுவாமி கைலாசானந்தஜி மகராஜ் இவருக்கு ‘தயாள்’ என்று பெயர் வைத்தார். 1969இல் ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜிடம் பிரம்மச்சாரி தயாள் மந்திரதீட்சை பெற்றார். இவர் அரக்கோணத்தில் 1970இல் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா சங்கத்தை ஆரம்பித்தார். இந்தச் சேவா சங்கம் 2020-ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது. பிரம்மச்சாரி தயாள் 1974-1975 ஆகிய ஆண்டுகளில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளுக்குரிய Training Center -இல் பயிற்சி பெற்றார். இவர் 1976 மார்ச் 3-ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண  ஜயந்தியன்று பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். அப்போது, இவருக்கு ஸ்ரீமத் சுவாமி வீரேஸ்வரானந்தஜி மகராஜ் அவர்களால், ‘பிரம்மச்சாரி நிரஞ்ஜன சைதன்யா’ என்ற பெயர் வழங்கப்பட்டது. பிரம்மச்சரிய தீட்சைப் பெற்றதைத்  தொடர்ந்து, 1977இல் ஆண்டு ஜனவரி மாதம் இவரை ‘ஸ்ரீராமகிருஷ்ண  விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக ஸ்ரீமத் சுவாமி தபஸ்யானந்தஜி மகராஜ் நியமித்தார். இவர் டிசம்பர் 2000 வரை அந்தப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

பொது வாழ்க்கை

சுவாமி விவேகானந்தரின் புகழைப் பரப்புவதற்காகத் தமிழ் நாடு முழுவதிலும் ஏறத்தாழ 120 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலையை வைத்துள்ளார். ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்களின் மாநாட்டை தாமே முன்னின்று ஆறுமுறை நடத்தியுள்ளார். (மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, பொள்ளாச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர்).

இலக்கிய வாழ்க்கை

‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியராக 24 ஆண்டுகள் பணியாற்றினார். 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ‘தர்மச்சக்கரம்’ மாத இதழில் ஆன்மிகக் கதைகளை எழுதினார்.

ஆய்வு நூல்

இலக்கிய இடம்

பயண நூல்

நூல்கள்

விருதுகள்

உசாத்துணை

[[Category:Tamil Content]]