under review

இரண்டாம் ஜாமங்களின் கதை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 29: Line 29:
*[https://www.tamilonline.com/thendral/article.aspx?aid=927 இரண்டாம் ஜாமங்களின் கதை-தென்றல் இதழ் டிசம்பர் 2005]
*[https://www.tamilonline.com/thendral/article.aspx?aid=927 இரண்டாம் ஜாமங்களின் கதை-தென்றல் இதழ் டிசம்பர் 2005]
*[https://www.mathavaraj.com/2010/12/12.html?m=1 இரண்டாம் ஜாமங்களின் கதை-தீராத பக்கங்கள்-மாதவராஜ்]
*[https://www.mathavaraj.com/2010/12/12.html?m=1 இரண்டாம் ஜாமங்களின் கதை-தீராத பக்கங்கள்-மாதவராஜ்]
{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:02, 25 July 2025

minnangadi

இரண்டாம் ஜாமங்களின் கதை (2003) சல்மா எழுதிய நாவல். இஸ்லாமியச் சமூகப் பெண்களின் அகவுலகை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்தே சித்தரித்து அச்சமூகத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெண் எதிர்கொள்ள வேண்டியிருந்த பிரச்சனைகள், மன அழுத்தங்கள், ஏமாற்றங்கள், கழிவிரக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் எதிர்வினைகளையும் சொல்லும் நாவல். 'இரண்டாம் சாமங்களின் கதை'- யின் ஆங்கில மொழியாக்கம் ஆசியப் படைப்புகளுக்கான புக்கர் விருதின் தேர்வுப்பட்டியலில் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படைப்பு.

ஆசிரியர்

இரண்டாம் ஜாமங்களின் கதை எழுத்தாளர் சல்மா (ருக்கையா பேகம்) 2003-ல் எழுதிய நாவல். சல்மா தமிழ்க் கவிஞர் , நாவலாசிரியர், அரசியல்வாதி.

கதைச்சுருக்கம்

இந்த நாவலில் வழமையான கதைப் பின்னலில்லை. மதுரைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்ட தூரத்தில் உள்ள கிராமத்தில் எண்பதுகளின் முன்பகுதியில் வசிக்கும் ஆறு இஸ்லாமியக் குடும்பங்களும், பள்ளிவாசலும் கதையின் பின்னணியாக உள்ளன. கதை நடக்கும் காலகட்டம் ஒரு ஈத் பண்டிகையில் துவங்கி அடுத்த வருடப் பண்டிகைக்குமுன் முடிந்துவிடுகிறது. ஆறு குடும்பங்களின் கதைகள் சிறுமி ராபியாவின் வழியாக விரிகின்றன. சமூகத்துக்காகப் பூசிக் கொண்ட பூச்சுகளையெல்லாம் கழுவித் துடைத்துவிட்ட பின், அடிப்படையாக ஒரு மனித உயிராக மட்டும் பெண்கள் இருக்கும் இரண்டாம் ஜாமத்தில்தான் உண்மைப் பெண்களின் கதை எழுதப் படுகிறது என்பதே நாவலின் பெயர்க்காரணம். ஆண்கள் உள்நாட்டில் வியாபாரிகளாகவோ அல்லது பொருளீட்ட அயல்நாடு சென்றவர்களாகவோ இருக்கிறார்கள். கரீம், காதர் சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார்கள். குடும்பத்தின் முடிவுகள் ஆண்களாலேயே எடுக்கப்படுகின்றன. அறுபது எழுபதுகளில் வீட்டை விட்டு அதிகம் வெளிவராத இஸ்லாமிய சமூகப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள், அவர்களின் ஆசைகள் ,சமூகக் கட்டுப்பாடுகள், உடலியல் துன்பங்கள் மற்றும் அவர்கள் மீதான சுரண்டல்களையும் பேசுகிறது. பெண்களின் முறையற்ற உறவுகள் மிகக்கொடூரமான தண்டனையைப் பெறுகின்றன.

நாவலின் பெரும்பான்மை பெண்களின் அக உலகச் சித்தரிப்பாகவே அமைகிறது. தனித்த இஸ்லாமிய வாழ்வியல் கலாச்சார அடையாளங்களைக் கொண்டதாக ரமலான் மாதத்து இஸ்லாமிய தெருக்களும், வீடுகளும் அடையும் பெரும் கொண்டாட்ட மன நிலை நாவலில் பதிவு பெற்றுள்ளது. ஆண்களற்ற சுதந்திரமானவெளியில் கிடந்த பெண் மனதின் உரையாடல் தடைகளற்று சுதந்திரமாக வெளிப்படுகிறது.

கதை மாந்தர்

  • காதர்,மனைவி றைமா, மகள் வஹிதா,
  • காதரின் சகோதரன் கரீம், மனைவி சொஹ்ரா, மகள் ராபியா
  • ஆமினா-சொஹ்ராவின் தாய்,
  • ஃபிர்தௌஸ் -சொஹ்ராவின் சகோதரி
  • மும்தாஜ்-சுலைமான், சுலைமானின் தாய், சகோதரிகள்
  • நஃபிசா,அகமது
  • ஃபாத்திமா- காதர், கரீம் வீட்டில் உதவி செய்யும் பெண்

இலக்கிய இடம்

"பெண்களின் பேச்சுகளுக்கிடையே எதார்த்தமாக பாலியல் ஊடாடுகிறது.ஆணின் பாலியல், உடல், அதிகாரம், அமைப்பு சட்டகங்கள் போன்றவை கேள்விக்குட்படுத்தப்படுகிறன. இந்நாவலில் நாயகர்கள் / நாயகிகள் / வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக் கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல்பாக இந்த யதார்த்தவகைப் பிரதியில் விரவிக் கிடக்கின்றன.ஒரே நேரத்தில் மானுடவியல் ஆவணமாக, வரலாற்றுப் பதிவாக, படைப்புக் குணம் நிரம்பிய புனைவாக விளங்குகிற இந்தப் பிரதி இதுவரை பூடகப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் மற்றும் முஸ்லீம்களின் உலகுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது. அறியாமை ஏற்படுத்திய இடைவெளியைக் கற்பிதங்களால் நிரப்பிக்கொண்டிருந்த நாம் இந்தப் பிரதியின் ஒளியில் சுயபரிசோதனை செய்துகொள்கிறோம்" என்று து. இரவிக்குமார் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் ஜாமங்களின் கதை இஸ்லாமியச் சமூகப் பெண்களின் அகவுலகை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்தே எழுதிய படைப்பு . திருமண உறவின் மூலம் ஏற்படுத்தப்படும் இறுக்கம், உடலியல் சார்ந்த துன்பங்கள், மறுக்கப்படும் காமம், அவளைச் சுற்றி நிகழும் சுரண்டல்கள் பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்ற பேசாப் பொருள்களைப் பேசுகிறது. சமூகத்துக்காகப் பூசிக் கொண்ட பூச்சுகளையெல்லாம் கழுவித் துடைத்துவிட்ட பின், அடிப்படையாக ஒரு மனித உயிராக மட்டும் இருக்கும் இரண்டாம் ஜாமத்தில்தான் உண்மைப் பெண்களின் கதை எழுதப் படுகிறது என்பதே நாவலின் பெயர்க்காரணம். இரண்டாம் ஜாமங்களின் கதை ஆங்கிலம், மராத்தி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உசாத்துணை


✅Finalised Page