பி.யூ. சின்னப்பா: Difference between revisions
Line 6: | Line 6: | ||
1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மகன் ராஜாபகதூர். திரையுலகின் மூலம் பெரும்பணம் சம்பாதித்த பி.யூ. சின்னப்பா புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். புதுக்கோட்டை சமஸ்தானம் இவர் வீடு வாங்கத் தடை விதிக்கும் வரை இது தொடர்ந்தது. | 1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மகன் ராஜாபகதூர். திரையுலகின் மூலம் பெரும்பணம் சம்பாதித்த பி.யூ. சின்னப்பா புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். புதுக்கோட்டை சமஸ்தானம் இவர் வீடு வாங்கத் தடை விதிக்கும் வரை இது தொடர்ந்தது. | ||
== நாடக வாழ்க்கை == | == நாடக வாழ்க்கை == | ||
சின்னப்பாவின் தந்தை நாடக நடிகர். அவருடன் இணைந்து | சின்னப்பாவின் தந்தை நாடக நடிகர். அவருடன் இணைந்து ஐந்து வயதிலேயே பாடக் கற்றுக் கொண்டார். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தம் 8வது வயதில் [[சங்கரதாஸ் ஸ்வாமிகள்]] பெயரில் பழனியப்பிள்ளை நடத்தி வந்த ”தத்துவ மீன லோசனிவித்வ பால சபாவில்” சேர்ந்தார். இக்கம்பனியில் டி.கே.எஸ். சகோதரர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்ததால் பி.யூ. சின்னப்பாவிற்கு எளிய வேடங்களே கிடைத்தன. பி.யூ. சின்னப்பா தத்துவ மீன லோசனிவித்வ பால சபாவிலிருந்து விலகி மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில், தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டிருக்கிறார். அவருடைய சிபாரிசில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் உரிமையாளர் சச்சிதானந்தம் பிள்ளையும் பி.யூ. சின்னப்பாவின் ”சதி அனுசுயா” பாடலைக் கேட்டு வியந்து முக்கிய வேடங்களில் நடிக்க வைத்தார். பி.யூ. சின்னப்பாவை 15 ரூபாய் சம்பளத்தில் அங்கு இருந்தார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். | ||
பி.யூ. சின்னப்பா தனது 19வது வயதில் நாடகக் கம்பனியிலிருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதர், போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரம் தூக்குவதில் இவருக்கு பல விருதுகள் கிடைத்தன. எஸ்.ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். | பி.யூ. சின்னப்பா தனது 19வது வயதில் நாடகக் கம்பனியிலிருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதர், போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரம் தூக்குவதில் இவருக்கு பல விருதுகள் கிடைத்தன. எஸ்.ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். | ||
Line 15: | Line 15: | ||
* பி. ஜி. வெங்கடேசன் | * பி. ஜி. வெங்கடேசன் | ||
* எம்.கே. ராதா | * எம்.கே. ராதா | ||
* பொன்னுசாமி | |||
* அழகேசன் | |||
* காளி என்.ரத்தினம் | |||
== திரை வாழ்க்கை == | == திரை வாழ்க்கை == | ||
நாடக சபாவிலிருந்து விலகி குஸ்தி சண்டைப்பயிற்சி வகுப்புகள் நடத்தினார். பி.யூ. சின்னப்பாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ஜூபிடர் பிக்சர்கள் தங்களின் “சந்திரகாந்தா” படத்தில் வாய்ப்பு கொடுத்தனர். சந்திரகாந்தா திரைப்படம் மூலம் பி.யூ. சின்னப்பா திரை உலகிற்கு அறிமுகமானார். ஜூபிடர் பிக்சர்களின் ’சவுக்கடி’ திரைப்படத்தில் சுண்டூர் இளவரசனாக சின்னசாமி என்ற பெயரிலேயே அவர் நடித்தார். தொடர்ந்து 1938இல் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் பி.யூ. சின்னப்பாவை 1940இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர் பி.யூ. சின்னப்பா. | நாடக சபாவிலிருந்து விலகி குஸ்தி சண்டைப்பயிற்சி வகுப்புகள் நடத்தினார். பி.யூ. சின்னப்பாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ஜூபிடர் பிக்சர்கள் தங்களின் “சந்திரகாந்தா” படத்தில் வாய்ப்பு கொடுத்தனர். சந்திரகாந்தா திரைப்படம் மூலம் பி.யூ. சின்னப்பா திரை உலகிற்கு அறிமுகமானார். ஜூபிடர் பிக்சர்களின் ’சவுக்கடி’ திரைப்படத்தில் சுண்டூர் இளவரசனாக சின்னசாமி என்ற பெயரிலேயே அவர் நடித்தார். தொடர்ந்து 1938இல் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் பி.யூ. சின்னப்பாவை 1940இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர் பி.யூ. சின்னப்பா. |
Revision as of 10:29, 11 September 2022
பி.யூ. சின்னப்பா (மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951) தமிழ் நாடக, திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர்.
பிறப்பு, கல்வி
பி.யூ. சின்னப்பாவின் இயற்பெயர் சின்னசாமி. இயற்பெயர் சின்னசாமி. மே 5, 1916இல் புதுக்கோட்டை சமத்தானத்தில் உலகநாத பிள்ளை, மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். பி.யூ. சின்னப்பா புதுக்கோட்டையில், நொண்டி வாத்தியார் பள்ளிக்கூடத்தில், நான்கைந்து ஆண்டுகள் படித்தார். பள்ளிக்கூடத்தை விட்டு விலகி சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவற்றையும் பழகினார். குடும்பப் பொருளாதாரச் சிக்கல் காரணமாக பி.யூ. சின்னப்பா நூல் கடையில் பணியில் சேர்ந்தார். அவ்வேலை பிடிக்காத்தால் நாடக நிறுவனமொன்றில் சேர்ந்தார்.
தனி வாழ்க்கை
1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மகன் ராஜாபகதூர். திரையுலகின் மூலம் பெரும்பணம் சம்பாதித்த பி.யூ. சின்னப்பா புதுக்கோட்டையில் வீடுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார். புதுக்கோட்டை சமஸ்தானம் இவர் வீடு வாங்கத் தடை விதிக்கும் வரை இது தொடர்ந்தது.
நாடக வாழ்க்கை
சின்னப்பாவின் தந்தை நாடக நடிகர். அவருடன் இணைந்து ஐந்து வயதிலேயே பாடக் கற்றுக் கொண்டார். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தம் 8வது வயதில் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பெயரில் பழனியப்பிள்ளை நடத்தி வந்த ”தத்துவ மீன லோசனிவித்வ பால சபாவில்” சேர்ந்தார். இக்கம்பனியில் டி.கே.எஸ். சகோதரர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்ததால் பி.யூ. சின்னப்பாவிற்கு எளிய வேடங்களே கிடைத்தன. பி.யூ. சின்னப்பா தத்துவ மீன லோசனிவித்வ பால சபாவிலிருந்து விலகி மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில், தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டிருக்கிறார். அவருடைய சிபாரிசில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் உரிமையாளர் சச்சிதானந்தம் பிள்ளையும் பி.யூ. சின்னப்பாவின் ”சதி அனுசுயா” பாடலைக் கேட்டு வியந்து முக்கிய வேடங்களில் நடிக்க வைத்தார். பி.யூ. சின்னப்பாவை 15 ரூபாய் சம்பளத்தில் அங்கு இருந்தார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.
பி.யூ. சின்னப்பா தனது 19வது வயதில் நாடகக் கம்பனியிலிருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதர், போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரம் தூக்குவதில் இவருக்கு பல விருதுகள் கிடைத்தன. எஸ்.ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.
சக நடிகர்கள்
- டி.கே.எஸ். சகோதரர்கள்
- எம்.ஜி. ராமச்சந்திரன்
- எம்.ஜி. சக்கரபாணி
- பி. ஜி. வெங்கடேசன்
- எம்.கே. ராதா
- பொன்னுசாமி
- அழகேசன்
- காளி என்.ரத்தினம்
திரை வாழ்க்கை
நாடக சபாவிலிருந்து விலகி குஸ்தி சண்டைப்பயிற்சி வகுப்புகள் நடத்தினார். பி.யூ. சின்னப்பாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ஜூபிடர் பிக்சர்கள் தங்களின் “சந்திரகாந்தா” படத்தில் வாய்ப்பு கொடுத்தனர். சந்திரகாந்தா திரைப்படம் மூலம் பி.யூ. சின்னப்பா திரை உலகிற்கு அறிமுகமானார். ஜூபிடர் பிக்சர்களின் ’சவுக்கடி’ திரைப்படத்தில் சுண்டூர் இளவரசனாக சின்னசாமி என்ற பெயரிலேயே அவர் நடித்தார். தொடர்ந்து 1938இல் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் பி.யூ. சின்னப்பாவை 1940இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர் பி.யூ. சின்னப்பா.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி.ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து ஆச்சரியப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய ”காதல் கனிரசமே..” பாடல் பிரபலமானது.
மறைவு
பி.யூ. சின்னப்பா தனது முப்பத்தியைந்தாவது வயதில் செப்டம்பர் 23, 1951இல் புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது. தன் இறுதிக்காலங்களில் இவர் வறுமையில் இருந்தார்.
நடித்த திரைப்படங்கள்
- ராஜமோகன் (1937)
- சந்திரகாந்தா (1937)
- அனாதைப் பெண் (1938)
- பஞ்சாப் கேசரி (1938)
- யயாதி (1938)
- மாத்ரு பூமி (1939)
- உத்தம புத்திரன் (1940)
- ஆர்யமாலா (1941)
- தயாளன் (1941)
- தர்மவீரன் (1941)
- கண்ணகி (1942)
- மனோன்மணி (1942)
- பிருத்விராஜன் (1942)
- குபேர குசேலா (1943)
- ஹரிச்சந்திரா (1944)
- ஜகதலப் பிரதாபன் (1944)
- மகாமாயா (1944)
- அர்த்தனாரி (1946)
- துளசி ஜலந்தர் (1947)
- பங்கஜவல்லி (1947)
- கிருஷ்ண பக்தி (1949)
- மங்கையர்க்கரசி (1949)
- ரத்னகுமார் (1949)
- சுதர்சன் (1951)
- வனசுந்தரி (1951)
உசாத்துணை
- நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி: சு. முருகானந்தம்
- பி.யூ.சின்னப்பா - வாழ்க்கை குறிப்பு: Lakshmanasruti