பிள்ளைப் பெயர்ச்சி: Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 21: | Line 21: | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213334-19625 கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213334-19625 கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 09:17, 30 May 2025
பிள்ளைப் பெயர்ச்சி கரந்தைத் திணையின் துறைகளில் ஒன்று. பிள்ளை எனப்படும் காரிப் பறவை சிலபோது போர்க்களத்தில் தீ நிமித்தம் காட்டும். அந்த தீநிமித்தங்களைக் கருதாமல்போரிட்டு வென்று ஆநிரையை மீட்பர் கரந்தையார். பிள்ளை விலக்கியும் (தடை செய்தும்) அதனை விலக்கியமையால் இத்துறை பிள்ளைப் பெயர்ச்சி எனப் பெயர் பெறுகின்றது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஆநிரையை மீட்கும் போரினைக் கரந்தை மறவன் ஒருவன் மேற்கொண்டான்; வெட்சி மறவர் புரியும் போரினைத் தாங்கினான். அப்போது, காரிப்புள் தீ நிமித்தம் காட்டியது. காட்டவும் அந்நிமித்தத்தைப் பொருட்டாகக் கொள்ளாமல் அதனைப் புறக்கணித்தான்; போரிட்டு நிரையை மீட்டான். மீட்ட அவனுக்குத் தார்மாலையணிந்த கரந்தை மன்னன் தண்ணளி செய்தான். தண்ணளி செய்ததை விளம்புவது பிள்ளைப் பெயர்ச்சி என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
போர் தாங்கிப் புள் விலங்கினோனைத்
தார் வேந்தன் தலை அளித்தன்று(கொளு 2.13)
வெண்பா
பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து (33)
பொருள்: மாறுபடும் பூசலிடத்தே புள்ளொலி தீ நிமித்தமாக ஒலித்து விலக்கவும், களத்தினின்றும் பெயராது, பகைவரை வருத்தும் துன்பத்தைச் செய்தவனாக, பகைவீரரை ஒருவீரன் வெட்டி வீழ்த்துதலைக் கண்டான் அவன் மன்னன். வளையாத கல்லினை - யொத்த தோளினனான அம்மன்னன், அங்ங்னம் போராடிய சினத்தையுடைய இளங் காளைக்கு அப்போதிலேயே, மருத நிலம் பலவும் அளித்து வரிசையளித்தும் பாராட்டினான். 'பிள்ளை பெயர்ப்பப் பெயராது ஆளெறிதலால் பிள்ளைப் பெயர்ச்சி ஆயிற்று.
உசாத்துணை
கரந்தைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page