கொத்தமங்கலம் சீனு: Difference between revisions
(Para Added, Image Added, External Link Created) |
(Interlink Created; உசாத்துணை சரிபார்ப்பு முயற்சி; spelling mistakes corrected; Final Check) |
||
Line 9: | Line 9: | ||
உறவினர் ஒருவர் மூலம் [[சங்கரதாஸ் சுவாமிகள்]] நடத்தி வந்த ‘பாய்ஸ் கம்பெனி’யில் (மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பால சபா) சேர்ந்தார் சீனிவாசன். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், பின் ‘ஞான சௌந்தரி’, ‘சத்தியவான் சாவித்திரி’, போன்ற நாடகங்களில் ‘ஸ்திரீ பார்ட்’ ஆக நடித்தார். தொடர்ந்து ‘வள்ளி திருமணம்’, ‘பவளக் கொடி’, ‘அரிச்சந்திர மயான காண்டம்’ போன்ற நாடகங்களில் ‘ராஜபார்ட்’ வேடங்களில் நடித்தார். | உறவினர் ஒருவர் மூலம் [[சங்கரதாஸ் சுவாமிகள்]] நடத்தி வந்த ‘பாய்ஸ் கம்பெனி’யில் (மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பால சபா) சேர்ந்தார் சீனிவாசன். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், பின் ‘ஞான சௌந்தரி’, ‘சத்தியவான் சாவித்திரி’, போன்ற நாடகங்களில் ‘ஸ்திரீ பார்ட்’ ஆக நடித்தார். தொடர்ந்து ‘வள்ளி திருமணம்’, ‘பவளக் கொடி’, ‘அரிச்சந்திர மயான காண்டம்’ போன்ற நாடகங்களில் ‘ராஜபார்ட்’ வேடங்களில் நடித்தார். | ||
== இசை வாழ்க்கை == | == இசை வாழ்க்கை == | ||
[[கொத்தமங்கலம் சுப்பு]]வின் தொடர்பால் செட்டிநாட்டுப் பகுதியில் நடந்த நாடகங்களில் நடித்தார் சீனிவாசன். சுப்பு வசித்த கொத்தமங்கலத்திலேயே தானும் தன் குடும்பத்துடன் தங்கினார். சீனுவிற்கு நல்ல குரல் வளம் இருந்ததால் அவரது பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், நாடகம் இல்லாத நாட்களில் மேடைக் கச்சேரிகள் செய்து வந்தார். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இசை கற்பித்தார். | [[கொத்தமங்கலம் சுப்பு]]வின் தொடர்பால் செட்டிநாட்டுப் பகுதியில் நடந்த நாடகங்களில் நடித்தார் சீனிவாசன். சுப்பு வசித்த கொத்தமங்கலத்திலேயே தானும் தன் குடும்பத்துடன் தங்கினார். நாளடைவில் ’கொத்தமங்கலம்’ சுப்பு போல், சீனிவாசனும், ‘கொத்தமங்கலம்’ சீனு என்று அழைக்கப்பட்டார். சீனுவிற்கு நல்ல குரல் வளம் இருந்ததால் அவரது பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், நாடகம் இல்லாத நாட்களில் மேடைக் கச்சேரிகள் செய்து வந்தார். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இசை கற்பித்தார். | ||
நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார் சீனு. அங்கு சரஸ்வதி பாயின் கதாகாலேஷபம் நடைபெற இருந்தது. ஆனால், பின்பாட்டு பாடுவதற்கான நபர் வராததால், விழா அமைப்பாளர்கள் கொத்தமங்கலம் சீனுவைப் பின்பாட்டுப் பாடுமாறு கேட்டுக் கொண்டனர். சரஸ்வதி பாய் சிறந்த வித்வம்சி என்பதால் சீனு ஒப்புக் கொண்டார். சரஸ்வதி பாய் கதை சொல்ல, சீனு பின்பாட்டுப் பாடினார். சீனுவின் குரலால் கவரப்பட்ட சரஸ்வதி பாய், தனது கதையைப் பெருமளவு குறைத்து அதைப் பாடல்களாகப் பாடும் வாய்ப்பைச் சீனுவுக்கு வழங்கினார். | நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார் சீனு. அங்கு சரஸ்வதி பாயின் கதாகாலேஷபம் நடைபெற இருந்தது. ஆனால், பின்பாட்டு பாடுவதற்கான நபர் வராததால், விழா அமைப்பாளர்கள் கொத்தமங்கலம் சீனுவைப் பின்பாட்டுப் பாடுமாறு கேட்டுக் கொண்டனர். சரஸ்வதி பாய் சிறந்த வித்வம்சி என்பதால் சீனு ஒப்புக் கொண்டார். சரஸ்வதி பாய் கதை சொல்ல, சீனு பின்பாட்டுப் பாடினார். சீனுவின் குரலால் கவரப்பட்ட சரஸ்வதி பாய், தனது கதையைப் பெருமளவு குறைத்து அதைப் பாடல்களாகப் பாடும் வாய்ப்பைச் சீனுவுக்கு வழங்கினார். | ||
===== முதல் இசைத் தட்டு ===== | ===== முதல் இசைத் தட்டு ===== | ||
ஏவி.மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் கம்பெனி மூலம் இசைத்தட்டு ஒன்றை வெளியிட விரும்பினார். அதற்காக அவர் சரஸ்வதி பாயை அணுகினார். சரஸ்வதி பாய், சீனுவைப் பரிந்துரைத்தார். | ஏவி. மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் கம்பெனி மூலம் இசைத்தட்டு ஒன்றை வெளியிட விரும்பினார். அதற்காக அவர் சரஸ்வதி பாயை அணுகினார். சரஸ்வதி பாய், சீனுவைப் பரிந்துரைத்தார். | ||
சீனுவைச் சென்னைக்கு வரவழைத்தார் ஏவி.எம். சீனுவைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவரது திறமையை உடன் உணர்ந்து கொண்டவர், சீனுவைப் பாடச் சொல்லி, ஓடியன் இசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டார். 1932-ல் சீனுவின் 22-வது வயதில் அந்த இசைத் தட்டு வெளியானது. அது முதல் கொத்தமங்கலம் சீனு நாடறிந்தவரானார். தொடர்ந்து கொத்தமங்கலம் சீனு பாடி பல இசைத்தட்டுகள் வெளிவந்தன. | சீனுவைச் சென்னைக்கு வரவழைத்தார் ஏவி.எம். சீனுவைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவரது திறமையை உடன் உணர்ந்து கொண்டவர், சீனுவைப் பாடச் சொல்லி, ஓடியன் இசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டார். 1932-ல் சீனுவின் 22-வது வயதில் அந்த இசைத் தட்டு வெளியானது. அது முதல் கொத்தமங்கலம் சீனு நாடறிந்தவரானார். தொடர்ந்து கொத்தமங்கலம் சீனு பாடி பல இசைத்தட்டுகள் வெளிவந்தன. | ||
== திருமண வாழ்க்கை == | == திருமண வாழ்க்கை == | ||
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் பரிந்துரையின் பேரில், இசைக் கலைஞர் திண்ணியம் வெங்கட்ராம ஐயரின் மகளான | ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் பரிந்துரையின் பேரில், இசைக் கலைஞர் திண்ணியம் வெங்கட்ராம ஐயரின் மகளான ஆனந்தவள்ளியுடன் சீனுவுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அவர்களுக்கு ஐந்து மகன்கள், நான்கு மகள்கள் என ஒன்பது குழந்தைகள். | ||
[[File:02-saranfadara old movie cheenu.jpg|thumb|சாரங்கதரா - 1934]] | [[File:02-saranfadara old movie cheenu.jpg|thumb|சாரங்கதரா - 1934]] | ||
== திரைப்பட வாழ்க்கை == | == திரைப்பட வாழ்க்கை == | ||
Line 25: | Line 25: | ||
[[File:Seenu films.jpg|thumb|கொத்தமங்கலம் சீனு திரைப்படங்கள்]] | [[File:Seenu films.jpg|thumb|கொத்தமங்கலம் சீனு திரைப்படங்கள்]] | ||
[[File:04-Cheenu Movies.jpg|thumb|சாந்த சக்குபாய் - சோகா மேளா]] | [[File:04-Cheenu Movies.jpg|thumb|சாந்த சக்குபாய் - சோகா மேளா]] | ||
தொடர்ந்து கிருஷ்ணப் பிடாரன் (1942), பக்த நாரதர் (1942), சோகாமேளர் (1942), தாசி அபரஞ்சி (1944), சகடயோகம் (1946), துளசி பிருந்தா (1946) எனப் பல படங்கள் தொடர்ந்து வெளியாகின. | தொடர்ந்து கிருஷ்ணப் பிடாரன் (1942), பக்த நாரதர் (1942), சோகாமேளர் (1942), தாசி அபரஞ்சி (1944), சகடயோகம் (1946), துளசி பிருந்தா (1946) எனப் பல படங்கள் தொடர்ந்து வெளியாகின. அவை அனைத்துமே புராண மற்றும் பக்திப் படங்கள். 1947-ல் வெளியான ’துளசி ஜலந்தர்’ திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவுடன் இணைந்து பி. யு. சின்னப்பா நடித்தார். | ||
பிறரை வெகு அரிதாகவே புகழும் உடுமலை நாராயணகவி, கொத்தமங்கலம் சீனுவை, | பி.யு. சின்னப்பா, ஜி.ராமநாதன், அவரது சகோதரர் சுந்தர பாகவதர், பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி உள்ளிட்ட பலர் கொத்தமங்கலம் சீனுவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பிறரை வெகு அரிதாகவே புகழும் உடுமலை நாராயணகவி, கொத்தமங்கலம் சீனுவை, | ||
“''இளம் கோதைமார் மையல் கொண்டிடும் '' | “''இளம் கோதைமார் மையல் கொண்டிடும் '' | ||
Line 39: | Line 38: | ||
என்று புகழ்ந்து பாடியுள்ளார். | என்று புகழ்ந்து பாடியுள்ளார். | ||
== மீண்டும் நாடக வாழ்கை == | == மீண்டும் நாடக வாழ்கை == | ||
1947ல் நாடு விடுதலை பெற்றது. தொடர்ந்து திரைப்படங்களின் போக்கும் மாறத் தொடங்கியது. அதுவரை புராண, இதிகாசப் படங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைந்து சமூகக் கதை அம்சம் உள்ள படங்கள் அதிகம் வெளிவந்தன. சீனுவுக்கு வாய்ப்புகள் குறைந்தன. 1947-ல், சுகுண சரசா’ என்ற சமூகப் படத்தில் எம்.எஸ்.விஜயாளுடன் நடித்தார். அதே ஆண்டின் இறுதியில் ‘பொன்னருவி’, ‘ஏகம்பவாணன்’ மற்றும் ’மகாத்மா உதங்கர்’ ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பிறகு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. | 1947ல் நாடு விடுதலை பெற்றது. தொடர்ந்து திரைப்படங்களின் போக்கும் மாறத் தொடங்கியது. அதுவரை புராண, இதிகாசப் படங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைந்து சமூகக் கதை அம்சம் உள்ள படங்கள் அதிகம் வெளிவந்தன. சீனுவுக்கு வாய்ப்புகள் குறைந்தன. 1947-ல், சுகுண சரசா’ என்ற சமூகப் படத்தில் எம்.எஸ்.விஜயாளுடன் நடித்தார். அதே ஆண்டின் இறுதியில் ‘பொன்னருவி’, ‘ஏகம்பவாணன்’ மற்றும் ’மகாத்மா உதங்கர்’ ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பிறகு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. | ||
Line 45: | Line 43: | ||
வாய்ப்புகளுக்காக யாரிடமும் கெஞ்சுவதை விரும்பாத சீனு, மீண்டும் நாடக உலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், பவளக்கொடி போன்ற நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். | வாய்ப்புகளுக்காக யாரிடமும் கெஞ்சுவதை விரும்பாத சீனு, மீண்டும் நாடக உலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், பவளக்கொடி போன்ற நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். | ||
இந்நிலையில் பாடகர் திருச்சி லோகநாதனின் மூத்த சகோதரரான எம். எம். மாரியப்பா, சீனுவைச் சந்தித்தார். ’நாடக வேந்தர்’ என்று புகழப்பெற்ற அவர், தம்முடன் இணைந்து ’நந்தனார்’ நாடகத்தில் நடிக்குமாறு சீனுவை அழைத்தார். சீனுவும் ஒப்புக் கொண்டார். நந்தனாராக மாரியப்பாவும், வேதியராகச் சீனுவும் நடிக்க, திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகம் நடைபெற்றபோது, அமர இடம் இல்லாத பலர் நின்று கொண்டே நாடகம் பார்த்தனர். அந்த நாடகம் | இந்நிலையில் பாடகர் திருச்சி லோகநாதனின் மூத்த சகோதரரான எம். எம். மாரியப்பா, சீனுவைச் சந்தித்தார். ’நாடக வேந்தர்’ என்று புகழப்பெற்ற அவர், தம்முடன் இணைந்து ’நந்தனார்’ நாடகத்தில் நடிக்குமாறு சீனுவை அழைத்தார். சீனுவும் ஒப்புக் கொண்டார். நந்தனாராக மாரியப்பாவும், வேதியராகச் சீனுவும் நடிக்க, திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகம் நடைபெற்றபோது, அமர இடம் இல்லாத பலர் நின்று கொண்டே நாடகம் பார்த்தனர். அந்த நாடகம் கொத்தமங்கலம் சீனுவுக்கு மீண்டும் மறுவாழ்வு அளித்தது. | ||
தொடர்ந்தது தமிழ்நாடெங்கும் பயணம் செய்து அந்நாடகத்தில் நடித்தார். நாடக வாய்ப்பில்லாத காலங்களில் சென்னை சபாக்களில் கச்சேரிகள் செய்தும், வானொலியில் பாடியும் வந்தார். ஜி.ராமநாதன் உட்பட பலரது தனிப்பாடல்களைப் பாடி பல இசைத்தட்டுக்களை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆண்டாள் உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டு பாடினார். | தொடர்ந்தது தமிழ்நாடெங்கும் பயணம் செய்து அந்நாடகத்தில் நடித்தார். நாடக வாய்ப்பில்லாத காலங்களில் சென்னை சபாக்களில் கச்சேரிகள் செய்தும், வானொலியில் பாடியும் வந்தார் சீனு. ஜி.ராமநாதன் உட்பட பலரது தனிப்பாடல்களைப் பாடி பல இசைத்தட்டுக்களை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆண்டாள் உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டு பாடினார். | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
1985-ல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சீனுவுக்கு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது.நடிகர் சங்கம் ‘நடிப்புச் செல்வம்’ என்ற விருதை அளித்துச் சிறப்பித்தது. | 1985-ல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சீனுவுக்கு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது. நடிகர் சங்கம் ‘நடிப்புச் செல்வம்’ என்ற விருதை அளித்துச் சிறப்பித்தது. | ||
== மறைவு == | == மறைவு == | ||
கொத்தமங்கலம் சீனு, வயது மூப்பால், ஆகஸ்ட் 30, 2001 அன்று தமது | கொத்தமங்கலம் சீனு, வயது மூப்பால், ஆகஸ்ட் 30, 2001 அன்று தமது 91-ம் வயதில் காலமானார். | ||
== கொத்தமங்கலம் சீனு நடித்த திரைப்படங்களின் பட்டியல் == | == கொத்தமங்கலம் சீனு நடித்த திரைப்படங்களின் பட்டியல் == | ||
* சாரங்கதரா (1935) | * சாரங்கதரா (1935) | ||
Line 72: | Line 70: | ||
* துளசி ஜலந்தர் (1947) | * துளசி ஜலந்தர் (1947) | ||
[[File:Seenu songs.jpg|thumb|கொத்தமங்கலம் சீனு பாடல்]] | [[File:Seenu songs.jpg|thumb|கொத்தமங்கலம் சீனு பாடல்]] | ||
== கொத்தமங்கலம் சீனுவின் சில பாடல்கள் == | == கொத்தமங்கலம் சீனுவின் சில பாடல்கள் == | ||
* [https://www.youtube.com/watch?v=4gBnoUfgRp8&ab_channel=factorydisplayKamalCo சிவந்த பாதத்தைக் காண வேணுமென்று... (முத்துத் தாண்டவர்)] | * [https://www.youtube.com/watch?v=4gBnoUfgRp8&ab_channel=factorydisplayKamalCo சிவந்த பாதத்தைக் காண வேணுமென்று... (முத்துத் தாண்டவர்)] | ||
Line 82: | Line 79: | ||
* [https://www.youtube.com/watch?v=_g5DfPklA0U&ab_channel=uksharma3 மட அன்னம் என்னும் படி: ஏகம்பவாணன் படப் பாடல்] | * [https://www.youtube.com/watch?v=_g5DfPklA0U&ab_channel=uksharma3 மட அன்னம் என்னும் படி: ஏகம்பவாணன் படப் பாடல்] | ||
* [https://www.youtube.com/results?search_query=kothamangalam+seenu++songs மேலும் சில பாடல்கள்] | * [https://www.youtube.com/results?search_query=kothamangalam+seenu++songs மேலும் சில பாடல்கள்] | ||
== வரலாற்று இடம் == | == வரலாற்று இடம் == | ||
1934- ஆண்டில் திரையுலகில் நுழைந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படங்கள் 14. அதே ஆண்டு திரையுலகில் கால்பதித்த கொத்தமங்கலம் சீனு நடித்த படங்கள் 20. 1936- திரையுலகில் நுழைந்த பி.யு சின்னப்பா நடித்த படங்கள் 25. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர் இருவருக்கும் சமமான திறமையை கொத்தமங்கலம் சீனு பெற்றிருந்தாலும், பி.யு.சின்னப்பா அடைந்த உயர்வையோ, எம்.கே.டி. பெற்ற புகழையோ சீனுவால் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் சீனு நடித்த பல படங்கள் மற்ற இருவர் நடித்த படங்களைப் போல் அதிகம் வெற்றி பெறாததும், ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன் போன்ற உறுதுணையான வெற்றிக் கூட்டணி அமையாததும் தான். | 1934-ம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த [[எம்.கே. தியாகராஜ பாகவதர்]] நடித்த திரைப்படங்கள் 14. அதே ஆண்டு திரையுலகில் கால்பதித்த கொத்தமங்கலம் சீனு நடித்த படங்கள் 20. 1936-ல், திரையுலகில் நுழைந்த பி.யு சின்னப்பா நடித்த படங்கள் 25. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர் இருவருக்கும் சமமான திறமையை கொத்தமங்கலம் சீனு பெற்றிருந்தாலும், பி.யு. சின்னப்பா அடைந்த உயர்வையோ, எம்.கே.டி. பெற்ற புகழையோ சீனுவால் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் சீனு நடித்த பல படங்கள் மற்ற இருவர் நடித்த படங்களைப் போல் அதிகம் வெற்றி பெறாததும், ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன் போன்ற உறுதுணையான வெற்றிக் கூட்டணி அமையாததும் தான். | ||
கொத்தமங்கலம் சீனு தனது கர்நாடக இசைப் பாடல்களாலும், திரையிசைப் பாடல்களாலும் நினைவு கூரப்படுகிறார். அவர் பாடிய கர்நாடக இசைப் பாடல்கள் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. | கொத்தமங்கலம் சீனு தனது கர்நாடக இசைப் பாடல்களாலும், திரையிசைப் பாடல்களாலும் நினைவு கூரப்படுகிறார். அவர் பாடிய கர்நாடக இசைப் பாடல்கள் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7329 முன்னோடி: கொத்தமங்கலம் சீனு: தமிழ் ஆன் லைன் தென்றல் இதழ்] | * [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7329 முன்னோடி: கொத்தமங்கலம் சீனு: தமிழ் ஆன் லைன் தென்றல் இதழ்] | ||
* [https://spicyonion.com/tamil/actor/kothamangalam-seenu-movies-list/ கொத்தமங்கலம் சீனு திரைப்படப் பட்டியல்] | * [https://spicyonion.com/tamil/actor/kothamangalam-seenu-movies-list/ கொத்தமங்கலம் சீனு திரைப்படப் பட்டியல்] | ||
* [https://antrukandamugam.wordpress.com/2015/11/27/kothamangalam-seenu/ கொத்தமங்கலம் சீனு: சகாதேவன் விஜயகுமார்] | * [https://antrukandamugam.wordpress.com/2015/11/27/kothamangalam-seenu/ கொத்தமங்கலம் சீனு: சகாதேவன் விஜயகுமார்] | ||
* திரை இசைச் சாதனையாளர்கள்,வாமனன், மணிவாசகர் பதிப்பக வெளியீடு<br /> | * திரை இசைச் சாதனையாளர்கள்,வாமனன், மணிவாசகர் பதிப்பக வெளியீடு<br /> | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Ready for review}} |
Revision as of 11:06, 8 September 2022
கொத்தமங்கலம் சீனு (கொத்தமங்கலம் சீனிவாசன்: 1910 - 2001) இசை, நாடகம், திரைப்படம் என மூன்று துறைகளிலும் செயல்பட்டவர். திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். பின் மீண்டும் நாடகம் மற்றும் இசைத்துறைக்குத் திரும்பி இறுதிவரை செயல்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
கொத்தமங்கலம் சீனு என்று அழைக்கப்பட்ட கொத்தமங்கலம் சீனிவாசன், மதுரையை அடுத்துள்ள வற்றாயிருப்பில், சுப்ரமண்ய ஐயர்-நாராயணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை முறையாக இசை கற்றவர். மகனையும் சுற்றுப்புறங்களில் நடக்கும் இசை, நாடகக் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அதன் மூலம் சீனிவாசனுக்கு இசையின் மீது ஆர்வம் வந்தது. வற்றாயிருப்பு சாமா ஐயங்காரிடம் முறையாக இசை பயின்று தேர்ச்சி பெற்றார்.
சீனிவாசன் வற்றாயிருப்பில் படித்து வந்தபோது தந்தை காலமானார். கல்வி தடைப்பட்டது. பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து மூன்றாவது ஃபாரம் படித்தார். ஆனால், குடும்பச் சூழலால் அதனைத் தொடர இயலவில்லை.
நாடக வாழ்க்கை
உறவினர் ஒருவர் மூலம் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்தி வந்த ‘பாய்ஸ் கம்பெனி’யில் (மதுரை தத்துவ மீனலோசனி வித்வ பால சபா) சேர்ந்தார் சீனிவாசன். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர், பின் ‘ஞான சௌந்தரி’, ‘சத்தியவான் சாவித்திரி’, போன்ற நாடகங்களில் ‘ஸ்திரீ பார்ட்’ ஆக நடித்தார். தொடர்ந்து ‘வள்ளி திருமணம்’, ‘பவளக் கொடி’, ‘அரிச்சந்திர மயான காண்டம்’ போன்ற நாடகங்களில் ‘ராஜபார்ட்’ வேடங்களில் நடித்தார்.
இசை வாழ்க்கை
கொத்தமங்கலம் சுப்புவின் தொடர்பால் செட்டிநாட்டுப் பகுதியில் நடந்த நாடகங்களில் நடித்தார் சீனிவாசன். சுப்பு வசித்த கொத்தமங்கலத்திலேயே தானும் தன் குடும்பத்துடன் தங்கினார். நாளடைவில் ’கொத்தமங்கலம்’ சுப்பு போல், சீனிவாசனும், ‘கொத்தமங்கலம்’ சீனு என்று அழைக்கப்பட்டார். சீனுவிற்கு நல்ல குரல் வளம் இருந்ததால் அவரது பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், நாடகம் இல்லாத நாட்களில் மேடைக் கச்சேரிகள் செய்து வந்தார். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இசை கற்பித்தார்.
நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக திருவனந்தபுரம் சென்றிருந்தார் சீனு. அங்கு சரஸ்வதி பாயின் கதாகாலேஷபம் நடைபெற இருந்தது. ஆனால், பின்பாட்டு பாடுவதற்கான நபர் வராததால், விழா அமைப்பாளர்கள் கொத்தமங்கலம் சீனுவைப் பின்பாட்டுப் பாடுமாறு கேட்டுக் கொண்டனர். சரஸ்வதி பாய் சிறந்த வித்வம்சி என்பதால் சீனு ஒப்புக் கொண்டார். சரஸ்வதி பாய் கதை சொல்ல, சீனு பின்பாட்டுப் பாடினார். சீனுவின் குரலால் கவரப்பட்ட சரஸ்வதி பாய், தனது கதையைப் பெருமளவு குறைத்து அதைப் பாடல்களாகப் பாடும் வாய்ப்பைச் சீனுவுக்கு வழங்கினார்.
முதல் இசைத் தட்டு
ஏவி. மெய்யப்பச் செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் கம்பெனி மூலம் இசைத்தட்டு ஒன்றை வெளியிட விரும்பினார். அதற்காக அவர் சரஸ்வதி பாயை அணுகினார். சரஸ்வதி பாய், சீனுவைப் பரிந்துரைத்தார்.
சீனுவைச் சென்னைக்கு வரவழைத்தார் ஏவி.எம். சீனுவைப் பாடச் சொல்லிக் கேட்டார். அவரது திறமையை உடன் உணர்ந்து கொண்டவர், சீனுவைப் பாடச் சொல்லி, ஓடியன் இசைத் தட்டில் பதிவு செய்து வெளியிட்டார். 1932-ல் சீனுவின் 22-வது வயதில் அந்த இசைத் தட்டு வெளியானது. அது முதல் கொத்தமங்கலம் சீனு நாடறிந்தவரானார். தொடர்ந்து கொத்தமங்கலம் சீனு பாடி பல இசைத்தட்டுகள் வெளிவந்தன.
திருமண வாழ்க்கை
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் பரிந்துரையின் பேரில், இசைக் கலைஞர் திண்ணியம் வெங்கட்ராம ஐயரின் மகளான ஆனந்தவள்ளியுடன் சீனுவுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அவர்களுக்கு ஐந்து மகன்கள், நான்கு மகள்கள் என ஒன்பது குழந்தைகள்.
திரைப்பட வாழ்க்கை
லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 1934-ல் ‘சாரங்கதரா’ என்ற திரைப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது. எஸ்.ஜி.கிட்டப்பா அதனை முன்னரே நாடகமாக நடத்தி வெற்றி பெற்றிருந்தார். கிட்டப்பாவைப் போலவே பாடல், இசை, நடிப்பு என்று பன்முக ஆற்றல் பெற்றிருந்த சீனு, அப்படத்தின் கதாநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். படம் 1935-ல் வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து பட்டினத்தார் (1935), மீராபாய் (1936), விப்ரநாராயணா (1937), சாந்த சக்குபாய் (1939), திருமங்கை ஆழ்வார் (1940) எனப் பல படங்கள் வெளியாகின.
1940-ல், வெளியான ‘மணிமேகலை படத்தில் கே.பி. சுந்தராம்பாள் மணிமேகலையாக நடிக்க, சீனு உதயகுமாரனாக நடித்திருந்தார். அப்படம் பாடல்களுக்காகப் பெரிதும் பேசப்பட்டது. 1941-ல் இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் ‘கச்ச தேவயானி’ வெளியானது. அதில் கதாநாயகியாக நடித்த டி. ஆர். ராஜகுமாரி, தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் முதல் ‘கனவுக்கன்னி’ என்று பெயர் பெற்றார். உடன் இணைந்து நாயகனாக நடித்தவர் கொத்தமங்கலம் சீனு.
தொடர்ந்து கிருஷ்ணப் பிடாரன் (1942), பக்த நாரதர் (1942), சோகாமேளர் (1942), தாசி அபரஞ்சி (1944), சகடயோகம் (1946), துளசி பிருந்தா (1946) எனப் பல படங்கள் தொடர்ந்து வெளியாகின. அவை அனைத்துமே புராண மற்றும் பக்திப் படங்கள். 1947-ல் வெளியான ’துளசி ஜலந்தர்’ திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனுவுடன் இணைந்து பி. யு. சின்னப்பா நடித்தார்.
பி.யு. சின்னப்பா, ஜி.ராமநாதன், அவரது சகோதரர் சுந்தர பாகவதர், பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி உள்ளிட்ட பலர் கொத்தமங்கலம் சீனுவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பிறரை வெகு அரிதாகவே புகழும் உடுமலை நாராயணகவி, கொத்தமங்கலம் சீனுவை,
“இளம் கோதைமார் மையல் கொண்டிடும்
சிலை மாரன்
தரும் கொடைக்கு மேல் அதிகாரன்
திரு கொத்தமங்கலம் ஊரன்” -
என்று புகழ்ந்து பாடியுள்ளார்.
மீண்டும் நாடக வாழ்கை
1947ல் நாடு விடுதலை பெற்றது. தொடர்ந்து திரைப்படங்களின் போக்கும் மாறத் தொடங்கியது. அதுவரை புராண, இதிகாசப் படங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைந்து சமூகக் கதை அம்சம் உள்ள படங்கள் அதிகம் வெளிவந்தன. சீனுவுக்கு வாய்ப்புகள் குறைந்தன. 1947-ல், சுகுண சரசா’ என்ற சமூகப் படத்தில் எம்.எஸ்.விஜயாளுடன் நடித்தார். அதே ஆண்டின் இறுதியில் ‘பொன்னருவி’, ‘ஏகம்பவாணன்’ மற்றும் ’மகாத்மா உதங்கர்’ ஆகிய படங்கள் வெளியாகின. அதன் பிறகு அவர் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.
வாய்ப்புகளுக்காக யாரிடமும் கெஞ்சுவதை விரும்பாத சீனு, மீண்டும் நாடக உலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், பவளக்கொடி போன்ற நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் பாடகர் திருச்சி லோகநாதனின் மூத்த சகோதரரான எம். எம். மாரியப்பா, சீனுவைச் சந்தித்தார். ’நாடக வேந்தர்’ என்று புகழப்பெற்ற அவர், தம்முடன் இணைந்து ’நந்தனார்’ நாடகத்தில் நடிக்குமாறு சீனுவை அழைத்தார். சீனுவும் ஒப்புக் கொண்டார். நந்தனாராக மாரியப்பாவும், வேதியராகச் சீனுவும் நடிக்க, திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகம் நடைபெற்றபோது, அமர இடம் இல்லாத பலர் நின்று கொண்டே நாடகம் பார்த்தனர். அந்த நாடகம் கொத்தமங்கலம் சீனுவுக்கு மீண்டும் மறுவாழ்வு அளித்தது.
தொடர்ந்தது தமிழ்நாடெங்கும் பயணம் செய்து அந்நாடகத்தில் நடித்தார். நாடக வாய்ப்பில்லாத காலங்களில் சென்னை சபாக்களில் கச்சேரிகள் செய்தும், வானொலியில் பாடியும் வந்தார் சீனு. ஜி.ராமநாதன் உட்பட பலரது தனிப்பாடல்களைப் பாடி பல இசைத்தட்டுக்களை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆண்டாள் உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டு பாடினார்.
விருதுகள்
1985-ல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சீனுவுக்கு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்தது. நடிகர் சங்கம் ‘நடிப்புச் செல்வம்’ என்ற விருதை அளித்துச் சிறப்பித்தது.
மறைவு
கொத்தமங்கலம் சீனு, வயது மூப்பால், ஆகஸ்ட் 30, 2001 அன்று தமது 91-ம் வயதில் காலமானார்.
கொத்தமங்கலம் சீனு நடித்த திரைப்படங்களின் பட்டியல்
- சாரங்கதரா (1935)
- பட்டினத்தார் (1935)
- விப்ரநாராயணா (1938)
- நிரபராதி (1939)
- திருமங்கை ஆழ்வார் (1940)
- மணிமேகலை (1940)
- சூர்யபுத்ரி (1941)
- கச்சதேவயானி (1941)
- சோகாமேளர் (1942)
- பக்த நாரதர் (1942)
- கிருஷ்ணபிடாரன் (1942)
- தாசி அபரஞ்சி (1944)
- சகடயோகம் (1946)
- பொன்னருவி (1947)
- மிஸ் மாலினி (1947)
- ஏகம்பவாணன் (1947)
- மகாத்மா உதங்கர் (1947)
- துளசி ஜலந்தர் (1947)
கொத்தமங்கலம் சீனுவின் சில பாடல்கள்
- சிவந்த பாதத்தைக் காண வேணுமென்று... (முத்துத் தாண்டவர்)
- யார் அறிவார் யார் உன்னை... (அருணாசலக் கவிராயர்)
- என்ன பிழைப்பு உந்தன் பிழைப்பு ஐயா.. (மாரிமுத்தாப் பிள்ளை)
- மணிமேகலை திரைப்படப் பாடல்கள்
- ரங்கனைத் துதிப்பவர்க்கு இடரேது... (சாந்த சக்குபாய் படப் பாடல்)
- ஆறுமுகவேலன் வரும் நேரமிது (ஔவையார் படப் பாடல்)
- மட அன்னம் என்னும் படி: ஏகம்பவாணன் படப் பாடல்
- மேலும் சில பாடல்கள்
வரலாற்று இடம்
1934-ம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படங்கள் 14. அதே ஆண்டு திரையுலகில் கால்பதித்த கொத்தமங்கலம் சீனு நடித்த படங்கள் 20. 1936-ல், திரையுலகில் நுழைந்த பி.யு சின்னப்பா நடித்த படங்கள் 25. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர் இருவருக்கும் சமமான திறமையை கொத்தமங்கலம் சீனு பெற்றிருந்தாலும், பி.யு. சின்னப்பா அடைந்த உயர்வையோ, எம்.கே.டி. பெற்ற புகழையோ சீனுவால் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் சீனு நடித்த பல படங்கள் மற்ற இருவர் நடித்த படங்களைப் போல் அதிகம் வெற்றி பெறாததும், ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன் போன்ற உறுதுணையான வெற்றிக் கூட்டணி அமையாததும் தான்.
கொத்தமங்கலம் சீனு தனது கர்நாடக இசைப் பாடல்களாலும், திரையிசைப் பாடல்களாலும் நினைவு கூரப்படுகிறார். அவர் பாடிய கர்நாடக இசைப் பாடல்கள் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
உசாத்துணை
- முன்னோடி: கொத்தமங்கலம் சீனு: தமிழ் ஆன் லைன் தென்றல் இதழ்
- கொத்தமங்கலம் சீனு திரைப்படப் பட்டியல்
- கொத்தமங்கலம் சீனு: சகாதேவன் விஜயகுமார்
- திரை இசைச் சாதனையாளர்கள்,வாமனன், மணிவாசகர் பதிப்பக வெளியீடு
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.