being created

தேஜாஸ்ரீ இங்கவலெ: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 20: Line 20:


குக்கூ காட்டுப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
குக்கூ காட்டுப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.
[[File:Thejaa11.jpeg|thumb|தேஜாஸ்ரீ இங்கவாள் பள்ளி மாணவர்களுடன்]]
===== பழங்குடிக் குழந்தைகளின் இசை =====
===== பழங்குடிக் குழந்தைகளின் இசை =====
"Music from the Heart of Tamil Nadu’s Forests" என்ற திட்டத்தின் மூலம் குக்கூ மற்றும் சாகாஜோ சங் இணைந்து பழங்குடி குழந்தைகளுக்கான இசைப் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் திட்டமாக ஈரோடு மாவட்டம் சோளகனையிலுள்ள பழங்குடி குழந்தைகள் மத்தியில் பயிற்சி அளிக்கிறார். அவர்களின் மொழி, இசை வழியாக அவர்களே எழுதியும், இசையமைத்தும் ஒரு இசைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியை மேற்கொள்கிறார். ஐந்து உண்மையான இசைக்கோர்வைகளையும், ஒரு பிரம்மாண்ட சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவையும் பதிவு செய்து அந்த இசையை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தில் உள்ளார்.
"Music from the Heart of Tamil Nadu’s Forests" என்ற திட்டத்தின் மூலம் குக்கூ மற்றும் சாகாஜோ சங் இணைந்து பழங்குடி குழந்தைகளுக்கான இசைப் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் திட்டமாக ஈரோடு மாவட்டம் சோளகனையிலுள்ள பழங்குடி குழந்தைகள் மத்தியில் பயிற்சி அளிக்கிறார். அவர்களின் மொழி, இசை வழியாக அவர்களே எழுதியும், இசையமைத்தும் ஒரு இசைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியை மேற்கொள்கிறார். ஐந்து உண்மையான இசைக்கோர்வைகளையும், ஒரு பிரம்மாண்ட சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவையும் பதிவு செய்து அந்த இசையை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தில் உள்ளார்.

Revision as of 07:47, 19 February 2025

தேஜாஸ்ரீ இங்கவாள்

தேஜாஸ்ரீ இங்கவாள் (Tejashree Ingawale) (பிறப்பு: ஜூன் 27, 1988) ஓவியர், நாட்டார் மற்றும் பக்தி இசைப் பாடகர், இசைப் பயிற்றுனர், சமூகச் செயல்பாட்டாளர். இசை, கலை, அன்பு ஆகியவற்றின் வெளிப்பாட்டின் மூலமே மனிதன் விடுதலையடைய முடியும் என்று நம்புபவர். இதன்மூலம் மனித மனங்களை குணப்படுத்தும் வழிமுறைகளை முன்னெடுப்பவர். இந்திய நாட்டார், பாரம்பரிய இசையில் தென்படும் பக்தி-யோக மரபுகள், மொழி, ஞானம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

தேஜாஸ்ரீ இங்கவாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனேயில் ரத்னகுமார் இங்கவாள், சுரேகா இங்கவாள் இணையருக்கு ஜூன் 27, 1988-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நிலேஷ், தனஸ்ரீ. பூனே கல்லூரியில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். மும்பையின் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணி செய்தார். பணியைத் துறந்து சமூக செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

லிட்டில் மனு ஆர்ட்

கலை மற்று இசை பயிற்சிப் பட்டறைகளை மும்பையின் சேரி, பழங்குடி, சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒருங்கிணைத்தார். வாழ்வுக்கான ஏக்கம் இருந்தும் அதைப் பற்றிக் கொள்வதற்கான நம்பிக்கை குறைவான இடங்களில் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தார். குழந்தைகளின் கள்ளமின்மையை தக்க வைப்பதற்கான வேலையையும், தங்களை எந்தவித பயமும் இல்லாமல் வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகமாக கலையை அவர்களிடம் அறிமுகப்படுத்த ‘Little Manu Art’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். இதன்வழியாக வாழ்வதற்கான முதல் அடி குணமடைதல் என்பதை தானே உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். மனிதர்கள் குணமடையாத காயங்களால் வாழ்வதற்கு சிரமப்படுவதைக் களைந்து எந்தத் தடையுமில்லாமல் தங்களை வெளிப்படுத்துவதற்கு தேவையான வெளியை கலை, இசை, அன்பு மூலமாக ஏற்படுத்துவதை தன் வாழ்வில் நோக்கமாக அதன்பின் ஏற்றுக் கொண்டார்.

சாகாஜோ சங்

தேஜாஸ்ரீ இங்கவாள்

பாடகரான தன் தாத்தா இறந்தபின்னும் கனவில் அவருடைய அழைப்பின் வழியாக பல கேள்விகளை அடைந்து வீட்டைத் துறந்து ஏக்தாரி என்ற இசைக்கருவியுடன் இந்தியா முழுவதும் ஒன்றரை ஆண்டுகள் சுற்றினார். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் தன் மனம் போன போக்கில் பயணம் செய்தார். அங்கு கோயில்கள், ஆசிரமங்கள், எளிய கிராமங்களில் தங்கியும் இசை இசைத்து, பாடி அதில் கிடைத்த தட்சணை, உணவு வழியாக வாழ்ந்தார். தன் பயணத்தில் பகிர்கள், பால்கள் (Bauls), யோகிகள், சன்னியாசிகள், கின்னர்களைச் சந்தித்தார். அவர்களின் பாடல்கள், வாழ்வனுபவங்கள் வழியாக தன் வாழ்க்கைப் பயணத்துக்கான சாரத்தை எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதன்பின் நாட்டார் மற்றும் பக்திப் பாடல்களை மானுடத்திற்கு எடுத்துச் செல்வதை தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டார்.

இந்தியா முழுவதும் சென்று எந்த கட்டணமும் எதிர்பார்க்காமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பாடியுள்ளார். மக்கள் இவரை “சாகாஜோ” (the very essence of spontaneity) என்று அழைத்தனர். சாகாஜோ என்பவர் ஒரு பெண் சன்னியாசி. அவர் பெயரிலேயே ”Sahajo_Sang” என்ற அமைப்பை நிறுவினார். இசை, பயிற்சி, குணமடைதல், எல்லையற்ற அன்புக்கான வெளியான அமைப்பாக இதனை உருவகிக்கிறார்.

பல குருக்களிடமிருந்தி இந்தியாவின் நாட்டார் இசைகளைக் கற்றார். ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் ஒரு அம்சமான துருபத் இசையை ஒரு வருடம் பயின்றார். குறிப்பாக டாகர் (Dagar style) பாணியைக் கற்றார். பால்(Baul) பாரம்பரிய இசையையும் விரும்பிக் கற்றார்.

இசை பயிற்சிவகுப்புகள்

குக்கூ காட்டுப்பள்ளியுடன் இணைந்து ”Mystical Music Retreats – Voice of Many Lands” என்ற பெயரில் மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த வகுப்பில் நாட் யோகா, உடற்பயிற்சிகள், பக்தி இசைக்கான தத்துவம், நவீன வாழ்வுக்கான ஆன்மீகம் சார்ந்த வகுப்பு, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நாட்டார் பாடல்கள், கலை மற்றிம் இசைப் பயிற்சிகள், கபீர், மீராபாய், ரூமி, அக்கமாகாதேவி, குஸ்ரூ, துக்காராம், ஜனாபாய் ஆகியோரின் கவிதைகளின் ஆழ்ந்த பொருள் பற்றி பேசுதல், உடல், ஆன்மா, குரல் ஆகியவற்றிற்கிடையிலான பிணைப்பு பற்றி அறிதல் ஆகியவை இந்த பயிற்சி வகுப்பின் அங்கமாக இருந்தது.

குக்கூ காட்டுப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

தேஜாஸ்ரீ இங்கவாள் பள்ளி மாணவர்களுடன்
பழங்குடிக் குழந்தைகளின் இசை

"Music from the Heart of Tamil Nadu’s Forests" என்ற திட்டத்தின் மூலம் குக்கூ மற்றும் சாகாஜோ சங் இணைந்து பழங்குடி குழந்தைகளுக்கான இசைப் பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளார். முதல் திட்டமாக ஈரோடு மாவட்டம் சோளகனையிலுள்ள பழங்குடி குழந்தைகள் மத்தியில் பயிற்சி அளிக்கிறார். அவர்களின் மொழி, இசை வழியாக அவர்களே எழுதியும், இசையமைத்தும் ஒரு இசைப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியை மேற்கொள்கிறார். ஐந்து உண்மையான இசைக்கோர்வைகளையும், ஒரு பிரம்மாண்ட சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவையும் பதிவு செய்து அந்த இசையை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தில் உள்ளார்.

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.