மதார்: Difference between revisions
(→கவிதைகள் ) |
|||
Line 23: | Line 23: | ||
==== கவிதைகள் ==== | ==== கவிதைகள் ==== | ||
* | * வெயில் பறந்தது (2021) | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* வெயில் பறந்தது (2021) | |||
( இத்தொகுப்புக்காக விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது 2021ல் வழங்கப்பட்டது) | ( இத்தொகுப்புக்காக விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது 2021ல் வழங்கப்பட்டது) |
Revision as of 11:55, 3 February 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
சா. முகமது மதார் முகைதீன்(எ) மதார் ,ஏப்ரல் 14, 1993 இல் பிறந்தவர். இவர் தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார். ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வருகிறார்.
பிறப்பு,கல்வி
மதார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பிறந்தவர். பெற்றோர் - சாகுல் ஹமீது- மும்தாஜ் சாய்பா.ஆறாம் வகுப்பு வரை அந்தோணியார் துவக்கப்பள்ளியிலும் ,ஏழாம் முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் படித்தார்.இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தூத்துக்குடியில் இளங்கலை இயந்திர பொறியியல் பட்டம் பெற்றவர்.
தனிவாழ்க்கை
திருமணமான ஆண்டு : 2021. மனைவி பெயர் : ஹஸ்மத் ரெஜிபா.குடும்பத்தினருடன் தற்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
இவரின் முதல் கவிதை 2005 பிற்பகுதியில் வெளியாகியது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் முன்னோடிகளாக தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி ஆகியோரை குறிப்பிடுகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு'வெயில் பறந்தது ' 2021ல் அழிசி பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியது.
இலக்கிய இடம்
ஒரு நல்ல கவிதையை வாசிப்பது என்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை அக்கவிதையில் தேடிக் கண்டடையும் முயற்சியல்ல. மாறாக, அக்கவிதையின் வரிகள் விரியும் திசை வழியாக புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி நம் மனத்தையும் கற்பனையையும் விரிவாக்கிக்கொள்வதாகும். அப்போதும் நம்மால் முழுதாக அறிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவத்துளி அக்கவிதையில் எப்போதும் எஞ்சியே இருக்கும். அடுத்தடுத்த வாசிப்புகள் வழியாக ஒவ்வொரு துளியாக நாம் அதைப் பருகமுடியும். ஆழ்ந்த கவனத்தைக் கோரும் அத்தகு கவிஞர்களின் வரிசையில் மதாரையும் இணைத்துக்கொள்ளலாம். ’வெயில் பறந்தது’ தொகுதி அவருக்கு நல்ல அடித்தளத்தை வழங்கியிருக்கிறது என்று எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
கவிதைகள்
- வெயில் பறந்தது (2021)
விருதுகள்
- வெயில் பறந்தது (2021)
( இத்தொகுப்புக்காக விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது 2021ல் வழங்கப்பட்டது)
https://www.jeyamohan.in/148168/
உசாத்துணை
https://www.jeyamohan.in/148316/
https://www.jeyamohan.in/147752/
https://bookday.in/veyil-paranthathu-book-review/