கோபால நேசரத்தினம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கோபால நேசரத்தினம் (1927) இலங்கை எழுத்தாளர் ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை எழுதிய சமூகசீர்திருத்த நாவல். சைவப்பிரச்சார நோக்கம் கொண்டது. == எழுத்து, பிரசுரம் == இந்துசாதனம் என்னும் இதழ...")
 
No edit summary
Line 11: Line 11:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* http://conf.jfn.ac.lk/iccm/wp-content/uploads/2018/10/02-HS-final-pages.pdf
* [https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/4213-2017-10-23-23-52-33 வ.ந.கிரிதரன் பதிவு]
* https://noolaham.net/project/86/8600/8600.pdf
* https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jun18/35327-2018-06-19-04-58-56

Revision as of 10:31, 3 February 2022

கோபால நேசரத்தினம் (1927) இலங்கை எழுத்தாளர் ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை எழுதிய சமூகசீர்திருத்த நாவல். சைவப்பிரச்சார நோக்கம் கொண்டது.

எழுத்து, பிரசுரம்

இந்துசாதனம் என்னும் இதழில் 1921ல் முதல் தொடராக வெளிவந்த நாவல் இது. 1927ல் நாவலாக வெளிவந்தது. யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை வெளியீடு.

கதைச்சுருக்கம்

கணவனை இழந்த வள்ளியம்மை தன் மகன் கோபாலனை ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் ஆங்கிலக்கல்விக்காகச் சேர்க்கிறாள். அங்கே குட்டித்தம்பி போதகர் என்பவர் அவனை மதம் மாற்றும் நோக்குடன் தன் மகள் நேசரத்தினத்தை அவனுடன் பழக விடுகிறார். ஆனால் கோபாலன் மதம் மாறாமல் நேசரத்தினத்தை மதம் மாற்றி சைவசமயத்துக்கு கொண்டுவந்து மணந்துகொள்கிறார். குட்டித்தம்பி போதகர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவரும் சைவராக மாறுகிறார்

இலக்கிய இடம்

தமிழில் கிறிஸ்தவ மதமாற்றம் மற்றும் மீண்டும் இந்துமதம் திரும்புதல் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவல். அக்கால யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக்கல்வி, கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் ஆகியவற்றின் நிலையை காட்டுகிறது.

உசாத்துணை