under review

மகரிஷி: Difference between revisions

From Tamil Wiki
(spelling mistakes corrected. Final Check.)
No edit summary
Line 1: Line 1:
[[File:Maharishi young-new.jpg|thumb|எழுத்தாளர் மகரிஷி (இளம் வயதுப் படம்)]]
[[File:Maharishi young-new.jpg|thumb|எழுத்தாளர் மகரிஷி (இளம் வயதுப் படம்)]]
பொது வாசிப்புக்குரிய படைப்புகள் பலவற்றைத் தந்தவர் மகரிஷி. (டி.கே. பாலசுப்ரமணியம்; பிறப்பு: மே 1, 1932; இறப்பு: செப்டம்பர், 28, 2019) இந்து மதத்தின் மீது கொண்ட பற்றாலும், ஞானிகளின் மீது கொண்ட மதிப்பாலும் ‘மகரிஷி’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். மின்சாரவாரியத்தில் பணியாற்றியவர். இவரது படைப்புகள் சில, திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.
மகரிஷி. (டி.கே. பாலசுப்ரமணியம்; மே 1, 1932 - செப்டம்பர், 28, 2019) பொது வாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவர். இந்து மதத்தின் மீது கொண்ட பற்றாலும், ஞானிகளின் மீது கொண்ட மதிப்பாலும் ‘மகரிஷி’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். மின்சாரவாரியத்தில் பணியாற்றினார். இவரது படைப்புகள் சில, திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
மகரிஷி, தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், மே 1, 1932 அன்று டி.என்.கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பி.யூ.சி. பயின்றார்.  
மகரிஷி, தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், மே 1, 1932 அன்று டி.என்.கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பி.யூ.சி. பயின்றார்.  
Line 15: Line 15:


எழுதுவதற்கு வசதியாக, தனக்குக் கிடைத்த பதவி உயர்வுகளையெல்லாம் மறுத்துவிட்டு, இறுதி வரை ஒரே பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றார் மகரிஷி. நூற்றிற்கும் மேற்பட்ட நாவல்கள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தந்திருக்கிறார் மகரிஷி.
எழுதுவதற்கு வசதியாக, தனக்குக் கிடைத்த பதவி உயர்வுகளையெல்லாம் மறுத்துவிட்டு, இறுதி வரை ஒரே பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றார் மகரிஷி. நூற்றிற்கும் மேற்பட்ட நாவல்கள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தந்திருக்கிறார் மகரிஷி.
====== ஸ்படிகம் நாவல் மொழிபெயர்ப்பு ======
====== ஸ்படிகம் நாவல் மொழிபெயர்ப்பு ======
காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் மகரிஷியின் நாவல் ‘ஸ்படிகம்.' இது கல்கியில் காந்தியின் நூற்றாண்டையொட்டி அக்டோபர் 5, 1969 இதழில் வெளியானது. இதனை பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் “Pure As a Crystal" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரே, தெலுங்கிலும் அந்தக் குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் மகரிஷிக்குப் புகழைத் தேடித் தந்தது.
காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் மகரிஷியின் நாவல் ‘ஸ்படிகம்.' இது கல்கியில் காந்தியின் நூற்றாண்டையொட்டி அக்டோபர் 5, 1969 இதழில் வெளியானது. இதனை பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் “Pure As a Crystal" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரே, தெலுங்கிலும் அந்தக் குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் மகரிஷிக்குப் புகழைத் தேடித் தந்தது.
====== திரைப்படப் பங்களிப்புகள் ======
====== திரைப்படப் பங்களிப்புகள் ======
மகரிஷியின் முதல் படைப்பான “பனிமலை”, “என்ன தான் முடிவு?” என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாகி ஜனாதிபதிப் பரிசு பெற்றது. “பத்ரகாளி” திரைப்படத்தின் கதை மகரிஷியுனுடையதுதான். நடிகர் ரஜினிகாந்திற்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படமான “புவனா ஒரு கேள்விக்குறி”யும் இவருடையதே!. ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியைத் தேடிவந்த கடல்’ மகரிஷியின் கதைதான். ‘வட்டத்துக்குள் சதுரம்’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ போன்ற திரைப்படங்களும் மகரிஷி கதைகளின் திரை வடிவமே!
மகரிஷியின் முதல் படைப்பான “பனிமலை”, “என்ன தான் முடிவு?” என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாகி ஜனாதிபதியின்  பரிசு பெற்றது. “பத்ரகாளி” திரைப்படத்தின் மூலக்கதை மகரிஷியுடையது. நடிகர் ரஜினிகாந்திற்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படமான “புவனா ஒரு கேள்விக்குறி”,  ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியைத் தேடிவந்த கடல்’ . ‘வட்டத்துக்குள் சதுரம்’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ போன்ற திரைப்படங்களும் மகரிஷியின்  கதைகளின் திரை வடிவங்கள்.
====== வானொலி, தொலைக்காட்சிப் பங்களிப்புகள் ======
====== வானொலி, தொலைக்காட்சிப் பங்களிப்புகள் ======
மகரிஷியின் நாவலான ‘பூர்ணிமா’ தொலைக்காட்சித் தொடராக வெளியாகிப் புகழ்பெற்றது. ’அண்ணா’, ‘பட்டுக்குடை’, ‘செல்லியம்மன் திருவிழா’, ‘சத்தியசோதனை’ போன்றவை இவரது பிற தொலைக்காட்சித் தொடர்கள். ‘சூரியப் பாதை’, ’வீரசுந்ததிரம்’ போன்றவை மகரிஷியின் குறிப்பிடத்தகுந்த வானொலித் தொடர்கள்.
மகரிஷியின் நாவலான ‘பூர்ணிமா’ தொலைக்காட்சித் தொடராக வெளியாகிப் புகழ்பெற்றது. ’அண்ணா’, ‘பட்டுக்குடை’, ‘செல்லியம்மன் திருவிழா’, ‘சத்தியசோதனை’ போன்றவை இவரது பிற தொலைக்காட்சித் தொடர்கள். ‘சூரியப் பாதை’, ’வீரசுந்ததிரம்’ போன்றவை மகரிஷியின் குறிப்பிடத்தகுந்த வானொலித் தொடர்கள்.
Line 31: Line 30:
பொதுவாசிப்பிற்குரிய பல படைப்புகளைத் தந்தவர் மகரிஷி. மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது நாவல்கள் பலவற்றில் முன்வைத்தவர். மகரிஷி பற்றி, திருப்பூர் கிருஷ்ணன், “மகரிஷி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்னுமளவு அவரது எழுத்துக்களை அனைத்துப் பத்திரிகைகளும் விரும்பி வெளியிட்டன. அவர் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியான ஆன்மிகவாதியாகத் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிவந்தார் <ref>அமைதியான ஆன்மிகவாதியாக தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கியவர்! - Dhinasari Tamil</ref> ” என்று குறிப்பிடுகிறார்.  
பொதுவாசிப்பிற்குரிய பல படைப்புகளைத் தந்தவர் மகரிஷி. மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது நாவல்கள் பலவற்றில் முன்வைத்தவர். மகரிஷி பற்றி, திருப்பூர் கிருஷ்ணன், “மகரிஷி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்னுமளவு அவரது எழுத்துக்களை அனைத்துப் பத்திரிகைகளும் விரும்பி வெளியிட்டன. அவர் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியான ஆன்மிகவாதியாகத் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிவந்தார் <ref>அமைதியான ஆன்மிகவாதியாக தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கியவர்! - Dhinasari Tamil</ref> ” என்று குறிப்பிடுகிறார்.  


மகரிஷியின் இலக்கிய இடம் பற்றி ஜெயமோகன், “பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். அவருடைய கதைகள் குமுதம் இதழ் வழியாக வெளிவந்து பெருவாரியாக வாசகர்களைப்பெற்றன. பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன... நதியைத் தேடிவந்த கடல், வட்டத்திற்குள் ஒரு சதுரம் என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவை.  
மகரிஷியின் இலக்கிய இடம் பற்றி ஜெயமோகன், “பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். அவருடைய கதைகள் குமுதம் இதழ் வழியாக வெளிவந்து பெருவாரியாக வாசகர்களைப்பெற்றன. பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.. 'நதியைத் தேடிவந்த கடல்', 'வட்டத்திற்குள் ஒரு சதுரம்' என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவை.  


மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை. <ref>https://www.jeyamohan.in/126337/</ref>” என்று மதிப்பிடுகிறார்.  
மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை. <ref>https://www.jeyamohan.in/126337/</ref>” என்று மதிப்பிடுகிறார்.  

Revision as of 21:02, 5 August 2022

எழுத்தாளர் மகரிஷி (இளம் வயதுப் படம்)

மகரிஷி. (டி.கே. பாலசுப்ரமணியம்; மே 1, 1932 - செப்டம்பர், 28, 2019) பொது வாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவர். இந்து மதத்தின் மீது கொண்ட பற்றாலும், ஞானிகளின் மீது கொண்ட மதிப்பாலும் ‘மகரிஷி’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். மின்சாரவாரியத்தில் பணியாற்றினார். இவரது படைப்புகள் சில, திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.

பிறப்பு, கல்வி

மகரிஷி, தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், மே 1, 1932 அன்று டி.என்.கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பி.யூ.சி. பயின்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சேலம் மின்சாரவாரியத்தில் பணி கிடைத்தது. ரிகார்ட் க்ளார்க் ஆகப் பணிபுரிந்தார். சேலத்தில் நூலகம் ஒன்றில் பணிபுரிந்த பத்மாவதியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களது மகனின் பெயர் ராமகிருஷ்ணன். மகள் காயத்ரி.

மகரிஷி
ஸ்படிகம் நாவல் - மகரிஷி

இலக்கிய வாழ்க்கை

மின்சாரவாரியத்தில் பணியாற்றிக்கொண்டே ஓய்வுநேரத்தில், ‘மகரிஷி’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். முதல் படைப்பான “பனிமலை” என்னும் நாவல், 1962-ல் வெளியானது. மதுரையைச் சேர்ந்த மீனாட்சி புத்தகநிலையம் இதனை வெளியிட்டது. தொடர்ந்து கல்கி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள் எழுதினார்.

பஞ்சபூதத் தத்துவங்களின் பின்னணியைத் தலைப்பாகக் கொண்டு “மண்ணின் மாண்பு” (நிலம்), “மகாநதி” (நீர்), “அக்னி வளையம்” (நெருப்பு), “எதிர்காற்று” (காற்று), “மேக நிழல்” (ஆகாயம்) போன்ற படைப்புகளைத் தந்திருக்கிறார் மகரிஷி.

இவரது சில படைப்புகள் கல்லூரி, பல்கலைககழக மாணவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளனர். அகில இந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை எழுத ஊக்குவித்தவர், மகரிஷி. பல இளம் எழுத்தாளர்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறார்.

எழுதுவதற்கு வசதியாக, தனக்குக் கிடைத்த பதவி உயர்வுகளையெல்லாம் மறுத்துவிட்டு, இறுதி வரை ஒரே பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்றார் மகரிஷி. நூற்றிற்கும் மேற்பட்ட நாவல்கள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தந்திருக்கிறார் மகரிஷி.

ஸ்படிகம் நாவல் மொழிபெயர்ப்பு

காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் மகரிஷியின் நாவல் ‘ஸ்படிகம்.' இது கல்கியில் காந்தியின் நூற்றாண்டையொட்டி அக்டோபர் 5, 1969 இதழில் வெளியானது. இதனை பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் “Pure As a Crystal" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரே, தெலுங்கிலும் அந்தக் குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் மகரிஷிக்குப் புகழைத் தேடித் தந்தது.

திரைப்படப் பங்களிப்புகள்

மகரிஷியின் முதல் படைப்பான “பனிமலை”, “என்ன தான் முடிவு?” என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாகி ஜனாதிபதியின் பரிசு பெற்றது. “பத்ரகாளி” திரைப்படத்தின் மூலக்கதை மகரிஷியுடையது. நடிகர் ரஜினிகாந்திற்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படமான “புவனா ஒரு கேள்விக்குறி”, ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியைத் தேடிவந்த கடல்’ . ‘வட்டத்துக்குள் சதுரம்’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ போன்ற திரைப்படங்களும் மகரிஷியின் கதைகளின் திரை வடிவங்கள்.

வானொலி, தொலைக்காட்சிப் பங்களிப்புகள்

மகரிஷியின் நாவலான ‘பூர்ணிமா’ தொலைக்காட்சித் தொடராக வெளியாகிப் புகழ்பெற்றது. ’அண்ணா’, ‘பட்டுக்குடை’, ‘செல்லியம்மன் திருவிழா’, ‘சத்தியசோதனை’ போன்றவை இவரது பிற தொலைக்காட்சித் தொடர்கள். ‘சூரியப் பாதை’, ’வீரசுந்ததிரம்’ போன்றவை மகரிஷியின் குறிப்பிடத்தகுந்த வானொலித் தொடர்கள்.

விருதுகள்

  • கவியோகி சுத்தானந்த பாரதியார், மகரிஷிக்கு, “நாவல் மகரிஷி” என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
  • Salem Metro Jaycees என்ற அமைப்பு, மகரிஷிக்கு Man of Excellence of Salem என்ற விருதினை வழங்கிப் பாராட்டியுள்ளது.
  • எழுத்துச் சித்தர் விருது
  • நாவல் திலகம்
  • நாவல் மணி

இலக்கிய இடம்

பொதுவாசிப்பிற்குரிய பல படைப்புகளைத் தந்தவர் மகரிஷி. மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது நாவல்கள் பலவற்றில் முன்வைத்தவர். மகரிஷி பற்றி, திருப்பூர் கிருஷ்ணன், “மகரிஷி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்னுமளவு அவரது எழுத்துக்களை அனைத்துப் பத்திரிகைகளும் விரும்பி வெளியிட்டன. அவர் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியான ஆன்மிகவாதியாகத் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிவந்தார் [1] ” என்று குறிப்பிடுகிறார்.

மகரிஷியின் இலக்கிய இடம் பற்றி ஜெயமோகன், “பி.வி.ஆரின் நேரடித் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியவர் மகரிஷி. எழுபது எண்பதுகளில் முக்கியமான பொதுவாசிப்பு எழுத்தாளராக திகழ்ந்தவர். அவருடைய ‘பனிமலை’ ‘வட்டத்திற்குள் ஒரு சதுரம்’ ‘நதியைத்தேடிவந்த கடல்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆக்கங்கள். அவருடைய கதைகள் குமுதம் இதழ் வழியாக வெளிவந்து பெருவாரியாக வாசகர்களைப்பெற்றன. பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.. 'நதியைத் தேடிவந்த கடல்', 'வட்டத்திற்குள் ஒரு சதுரம்' என்னும் இரு ஆக்கங்களும் இலக்கியத் தகுதி கொண்டவை.

மகரிஷியின் ஒரு சில ஆக்கங்கள் இன்றைய வாசகனுக்கும் உரியவை. அவை தமிழ்ச்சூழலில் ஒழுக்கவியலில் ஒர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தின் உளவியல்சிக்கல்களை, உணர்ச்சி மோதல்களை காட்டுபவை. [2]” என்று மதிப்பிடுகிறார்.

மறைவு

உடல்நலக்குறைவால், செப்டம்பர், 28, 2019 அன்று சேலத்தில் காலமானார், மகரிஷி.

மகரிஷி நாவல்கள்-1
மகரிஷி நாவல்கள்-2

நூல்கள்

நாவல்கள்
  • பனிமலை
  • பூர்ணிமா
  • பச்சை வயல்
  • ஜோதி வந்து பிறந்தாள்
  • நதியைத் தேடிவந்த கடல்
  • வட்டத்துக்குள் சதுரம்
  • யாகம்
  • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
  • நிலவைத் தேடி
  • மகாநதி
  • உயிர்த்துடிப்பு
  • மேகநிழல்
  • எதிர்காற்று
  • பனிச்சுவர்
  • ஈரப்புடவை
  • புழுதிப் புயல்
  • கடல் நுரை
  • இலையுதிர்காலம்
  • விழாக் கோலம்
  • ஒரு புதிய பூ
  • காந்தமுனை
  • அக்கினி வளையம்
  • சக்கரம் இனி சுழலும்
  • அண்ணா
  • ஒன்றுக்குள் ஓராயிரம்
  • துயரங்கள் உறங்குவதில்லை
  • ஒரு முன்பனிக்காலம்
  • பனிப்போர்
  • நிழலைத் தேடியவர்கள்
  • அதுவரையில் காஞ்சனா
  • வண்டிச்சக்கரம்
  • பாடிப் பறந்தவள்
  • தேர்க்கால்
  • விட்டில் அணைத்த விளக்கு
  • புதிய அர்த்தங்கள்
  • வேதமடி நீ எனக்கு
குறுநாவல்கள்
  • சுயரூபம்
  • வெண்சங்கு
  • வாழ்ந்து காட்டுவோம்
  • இப்படியே ஒரு வாழ்க்கை
  • அந்தப்பூனை
  • ஸ்படிகம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • பார்வையிலே சேவகனாய்
  • தேர்ந்நெடுத்த முத்துக்கள் (அம்ருதா தொகுத்த மகரிஷியின் 10 சிறுகதைகள் தொகுப்பு)
கட்டுரைகள்

ஒரத்தநாட்டிற்குச் சமர்ப்பணம்

உசாத்துணை

இணைப்புக் குறிப்புகள்

  1. அமைதியான ஆன்மிகவாதியாக தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கியவர்! - Dhinasari Tamil
  2. https://www.jeyamohan.in/126337/

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.