under review

பாமா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:பாமா.png|thumb|285x285px|பாமா (நன்றி: விகடன்)]]
[[File:பாமா.png|thumb|285x285px|பாமா (நன்றி: விகடன்)]]
பாமா(பிறப்பு: 1958) எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். வாழ்வியல் எதார்த்தங்களை, சமூக அவலங்களை எதார்த்தமாக பதிவு செய்யும் எழுத்தாளர்.  
பாமா (பிறப்பு: 1958) எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். வாழ்வியல் எதார்த்தங்களை, சமூக அவலங்களை எதார்த்தமாக பதிவு செய்யும் எழுத்தாளர்.  
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
[[File:பாமா2.png|thumb|பாமா ( நன்றி: சொல்வானம்)]]
[[File:பாமா2.png|thumb|பாமா ( நன்றி: சொல்வானம்)]]

Revision as of 16:10, 2 August 2022

பாமா (நன்றி: விகடன்)

பாமா (பிறப்பு: 1958) எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். வாழ்வியல் எதார்த்தங்களை, சமூக அவலங்களை எதார்த்தமாக பதிவு செய்யும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

பாமா ( நன்றி: சொல்வானம்)

பாமா 1958-இல் மதுரை, புதுப்பட்டியில் பிறந்தார். பி.எஸ்.ஸி; பி.எட் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சில வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். கன்னியாஸ்த்ரீ ஆனார். அங்கிருந்து பின் விலகி மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமையாக இருந்தார். உத்திரமேரூர் அருகிலுள்ள ஓங்கூரில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கருக்கு (நன்றி அமேசான்)

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். 1992இல் முதல் நாவலான கருக்கு வெளியானது. 1994இல் சங்கதி வெளியானது. இவரது கருக்கு நாவலை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மேக்மிலன் வெளியீடாக மொழிபெயர்த்துள்ளார். இம்மொழிபெயர்ப்புக்காக லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் 2000இல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான க்ராஸ்வேர்ட் விருதைப் பெற்றார். கருக்கு நாவல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இவரது சங்கதி நாவல் ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தியா டுடே இதழில் வெளியான ‘அண்ணாச்சி’ சிறுகதை பதினாறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இலக்கிய இடம்

”பாமாவின் கருக்கு நாவல் தலித் இலக்கியத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று” என வெங்கட் சாமி நாதன் மதிப்பிடுகிறார்.

"செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். மனத்தைக் குத்துபவற்றை அவை இல்லாதவைபோல் பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டிமுட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிடக் கருக்கு தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்." என கருக்கு நாவலை அம்பை மதிப்பிடுகிறார்.

விருது

  • குரல் விருது
  • தலித் முரசு விருது

நூல்கள் பட்டியல்

சங்கதி நாவல் (நன்றி: பனுவல்)
நாவல்
  • கருக்கு (1992)
  • சங்கதி (1994)
  • வன்மம் (2002)
  • மனுசி
சிறுகதைகள் தொகுப்பு
  • கிசும்புக்காரன் ( (1996)
  • கொண்டாட்டம்
  • ஒரு தாத்தாவும் எருமையும்
  • தவுட்டுக் குருவி

இணைப்புகள்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.