under review

அணிலாடு முன்றிலார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அணிலாடு முன்றிலார்")
 
No edit summary
Line 1: Line 1:
அணிலாடு முன்றிலார்
அணிலாடு முன்றிலார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவரது பெயர் தெரியாத நிலையில் குறுந்தொகையில் உள்ள பாடல்களைத் தொகுத்த அரசப்புலவர் பூரிக்கோ என்பவரே இவருக்கு அணிலாடு முன்றிலார் என்னும் பெயரைச் சூட்டியுள்ளார்.
== இலக்கிய வாழ்க்கை ==
குறுந்தொகையில் 41வது பாடல் பாடினார். பாலைத்திணையில் தலைவி கூற்று பாடலாக அமைந்துள்ளது. தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவழிந்த வேறுபாடு கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப்பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியதாக பாடல் அமைந்துள்ளது.
===== உவமைச் சிறப்பு =====
* அணிலாடு மூன்றில்
தலைவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில் பாலைநிலத்திற் பொருந்திய அழகிய குடியையுடைய சிறிய ஊரில் மனிதர் நீங்கிச் சென்றபின் அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப்போல பொலிவழிந்து வருந்துவேன்.
== பாடல் நடை ==
* குறுந்தொகை: 41
<poem>
காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.
</poem>
== உசாத்துணை ==
* புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 5: பெண்பாற் புலவர்கள்]
 
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 10:24, 24 July 2022

அணிலாடு முன்றிலார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இவரது பெயர் தெரியாத நிலையில் குறுந்தொகையில் உள்ள பாடல்களைத் தொகுத்த அரசப்புலவர் பூரிக்கோ என்பவரே இவருக்கு அணிலாடு முன்றிலார் என்னும் பெயரைச் சூட்டியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

குறுந்தொகையில் 41வது பாடல் பாடினார். பாலைத்திணையில் தலைவி கூற்று பாடலாக அமைந்துள்ளது. தலைவன் பிரிந்த காலத்தில் தலைவியின் மேனியிற் பொலிவழிந்த வேறுபாடு கண்டு கவலையுற்ற தோழியை நோக்கி, “தலைவர் உடனிருப்பின் நான் மகிழ்வுற்று விளங்குவேன்; பிரியின் பொலிவழிந்தவளாவேன்” என்று கூறியதாக பாடல் அமைந்துள்ளது.

உவமைச் சிறப்பு
  • அணிலாடு மூன்றில்

தலைவர் என்னைப் பிரிந்து சென்ற காலத்தில் பாலைநிலத்திற் பொருந்திய அழகிய குடியையுடைய சிறிய ஊரில் மனிதர் நீங்கிச் சென்றபின் அணில் விளையாடுகின்ற முற்றத்தையுடைய தனிமையுள்ள வீட்டைப்போல பொலிவழிந்து வருந்துவேன்.

பாடல் நடை

  • குறுந்தொகை: 41

காதலர் உழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழியவர் அகன்ற ஞான்றே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.