பரணீதரன்: Difference between revisions
(Para Added) |
|||
Line 4: | Line 4: | ||
பரணீதரன், டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், [[டி.என். சேஷாசலம்]]-ருக்மிணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சேஷாசலம் சிறந்த தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், ‘கலாநிலயம்’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். நாடகத்திலும் ஆர்வம் உடைய தந்தை சேஷாசலம், ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றி வந்தார். | பரணீதரன், டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், [[டி.என். சேஷாசலம்]]-ருக்மிணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சேஷாசலம் சிறந்த தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், ‘கலாநிலயம்’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். நாடகத்திலும் ஆர்வம் உடைய தந்தை சேஷாசலம், ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றி வந்தார். | ||
வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சூழலில் பரணீதரன் வளர்ந்தார். எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச் சூழல்களால் இலக்கியத்தின் பாலும் நாடகத்தின் பாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார் பரணீதரன். | வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சூழலில் பரணீதரன் வளர்ந்தார். எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச் சூழல்களால் இலக்கியத்தின் பாலும் நாடகத்தின் பாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார் பரணீதரன். வீட்டிற்கு வந்த சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் உள்ளிட்ட இதழ்களை வாசித்தும், புரசைவாக்கத்தில் இருந்த ரீடிங் ரூமிற்குச் சென்று படித்தும் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். | ||
கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற பரணீதரன், உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா பள்ளியிலும் படித்தார். திடீரெனத் தந்தை காலமானதால் பரணீதரனின் கல்வி தடைப்பட்டது. அண்ணன் மற்றும் உறவினர்களின் உறுதுணையால் லயோலா கல்லூரியில் பி.கா.ம் படிப்பை நிறைவு செய்தார் | கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற பரணீதரன், உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா பள்ளியிலும் படித்தார். திடீரெனத் தந்தை காலமானதால் பரணீதரனின் கல்வி தடைப்பட்டது. அண்ணன் மற்றும் உறவினர்களின் உறுதுணையால் லயோலா கல்லூரியில் பி.கா.ம் படிப்பை நிறைவு செய்தார் | ||
Line 10: | Line 10: | ||
படிப்பை முடித்ததும் வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார். | படிப்பை முடித்ததும் வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார். | ||
சிறுவனாக இருந்தபோது ‘கலாநிலயம்’ இதழுக்காக அச்சடிக்கப்பட்ட வெள்ளைக் காகிதங்களில் பொழுது போக்காக கேலிச் சித்திரங்கள் வரைவார் பரணீதரன். அனைவரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டவே, விகடனில் மாலி வரைந்திருக்கும் கார்டூன்களைப் பார்த்து அதே மாதிரி வரைய முயல்வார். அதுவே அவர் | சிறுவனாக இருந்தபோது ‘கலாநிலயம்’ இதழுக்காக அச்சடிக்கப்பட்ட வெள்ளைக் காகிதங்களில் பொழுது போக்காக கேலிச் சித்திரங்கள் வரைவார் பரணீதரன். அனைவரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டவே, விகடனில் மாலி வரைந்திருக்கும் கார்டூன்களைப் பார்த்து அதே மாதிரி வரைய முயல்வார். அதுவே பிற்காலத்தில் அவர் கார்டூனிஸ்ட் ஆக உதவியது. | ||
1942-ல் ஒருமுறை திருவிசைநல்லூருக்குச் சென்றார். | 1942-ல் ஒருமுறை திருவிசைநல்லூருக்குச் சென்றார். அது விகடன் ஓவியர் மாலியின் சொந்த ஊர். மாலியைச் சந்தித்தவர், தான் வரைந்த ஓவியங்களைக் காட்டினார். மாலி ‘தொடர்ந்து வரைந்து கொண்டிரு’ என்று ஆசிர்வதித்தார். | ||
== கார்டூனிஸ்ட் சீலி == | == கார்டூனிஸ்ட் சீலி == | ||
[[File:Seeli catoons.jpg|thumb|சீலியின் கேலிச் சித்திரம்]] | [[File:Seeli catoons.jpg|thumb|சீலியின் கேலிச் சித்திரம்]] | ||
சுதேசமித்திரனில் | சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக ‘நீலம்’ என்ற புனைபெயர் கொண்ட நீலமேகம் பணிபுரிந்து வந்தார். அவரை அணுகி வாய்ப்புக் கேட்டார் பரணீதரன். நீலமும் இதழில் இடம் பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு கேலிச் சித்திரம் வரைந்து தருமாறு கேட்டுக் கொண்டார். தனது செல்லப் பெயரான ‘சீலி’ என்ற புனைபெயரில் சுதேசமித்திரன் இதழுக்குத் தொடர்ந்து பல நகைச்சுவைக் கேலிச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தார் பரணீதரன். அவரது இதழியல் பயணம், சுதேசமித்திரன் மூலம் 1945-ல் தொடங்கியது. | ||
தொடர்ந்து சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, தொடர்களுக்கு சிறு சிறு ஓவியங்கள் வரைந்தார். | |||
தொடர்ந்து சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, தொடர்களுக்கு என்று சிறு சிறு ஓவியங்கள் வரைந்தார். கோமதி ஸ்வாமிநாதனின் சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, [[ய.மகாலிங்க சாஸ்திரி]]யின் “தலை தூபாவளி” என்ற நகைச்சுவைத் தொடர் கதைக்கு, என்.எஸ்.ஸ்ரீ எழுதிய ‘அலமுவின் கடிதங்கள்’ என்ற தொடருக்கு வரைந்திருக்கிறார் பரணீதரன். | |||
== கார்டூனிஸ்ட் ஸ்ரீதர் == | == கார்டூனிஸ்ட் ஸ்ரீதர் == | ||
[[File:Sridhar Cartoon Anadha vikatan.jpg|thumb|ஸ்ரீதரின் கேலிச்சித்திரங்கள் (நன்றி ஆனந்தவிகடன் இதழ்)]] | [[File:Sridhar Cartoon Anadha vikatan.jpg|thumb|ஸ்ரீதரின் கேலிச்சித்திரங்கள் (நன்றி ஆனந்தவிகடன் இதழ்)]] | ||
ரிசர்வ வங்கித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் பரணீதரன். வேலைக்கான உத்தரவும் கையில் வந்தது. ஆனாலும், 1949 ஜனவரியில் ஏதோ | ரிசர்வ வங்கித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் பரணீதரன். வேலைக்கான உத்தரவும் கையில் வந்தது. ஆனாலும், 1949 ஜனவரியில், ஏதோ ஓர் உந்துதலில் விகடனுக்குத் தன்னைப் பற்றி எழுதி அனுப்பினார். உடனே எஸ்.எஸ். வாசனை நேரில் சந்திக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தது. தனது கார்டூன்களையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் எடுத்துக் கொண்டு வாசனைச் சந்தித்தார் பரணீதரன். விகடனில் கார்டூன் வரைய வாய்ப்புத் தந்தார் எஸ்.எஸ். வாசன். | ||
பரணீதரனின் முதல் கார்டூன், ஸ்ரீதர் என்ற அவரது இயற்பெயரில், 23-01-1949 தேதியிட்ட | |||
ஆனந்த விகடனில், பரணீதரனின் முதல் கார்டூன், ஸ்ரீதர் என்ற அவரது இயற்பெயரில், 23-01-1949 தேதியிட்ட இதழில் வெளியானது. தொடர்ந்து உலக அரசியல், இந்திய அரசியல் தொடர்பான பல கார்டூன்களை வரைந்தார் பரணீதரன். சுமார் பத்துவருடங்களில் பல நூற்றுக்கணக்கான கார்டூன்களை வரைந்தார். இதழியல் நுணுக்கங்கள் அனைத்தையும் எஸ்.எஸ். வாசனிடம் கற்றுத் தேர்ந்தார். | |||
1956-ல் விகடனின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் பரணீதரன். அதே ஆண்டில் எஸ்.பாலசுப்பிரமணியனும் விகடனின் ஜே.எம்.டி. ஆகச் சேர்ந்தார். இருவரும் இணைந்து பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தனர். பரணீதரன் இணை | 1956-ல் விகடனின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் பரணீதரன். அதே ஆண்டில் எஸ்.பாலசுப்பிரமணியனும் விகடனின் ஜே.எம்.டி. ஆகச் சேர்ந்தார். இருவரும் இணைந்து பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தனர். பரணீதரன் விகடனின் இணை ஆசிரியர்களுள் ஒருவராக உயர்ந்தார். | ||
== ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன் == | == ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன் == | ||
[[File:Alaya darisanam advt vikatan.jpg|thumb|ஆலய தரிசனம் புத்தக விளம்பரம் (நன்றி : ஆனந்த விகடன்)]] | [[File:Alaya darisanam advt vikatan.jpg|thumb|ஆலய தரிசனம் புத்தக விளம்பரம் (நன்றி : ஆனந்த விகடன்)]] | ||
விகடனில் பரணீதரனின் முதல் ஆன்மிகத் தொடர் ‘சென்னையில் பொன்மாரி’ | ஆனந்த விகடனில் பரணீதரனின் முதல் ஆன்மிகத் தொடர் ‘சென்னையில் பொன்மாரி’ என்பதாகும். 1957-ல், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்தார். மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் சந்திரசேகரர் ஆற்றிய உரைகளைத் தொகுத்து ஆனந்த விகடனில், ‘‘சென்னையில் பொன்மாரி’ என்ற தலைப்பில் தொடராக எழுதினார் பரணீதரன். அதுவே ஆன்மிகம் பற்றி அவர் எழுதிய முதல் தொடர். அதற்கு காஞ்சிப் பெரியவரின் ஆசியும் கிடைத்தது. தொடர்ந்து விகடனில் பல ஆன்மிகக் கட்டுரைகளை, தொடர்களை எழுத ஆரம்பித்தார் பரணீதரன். | ||
1959 -ல் முதல் ஆலய தரிசனக் கட்டுரை ‘நாகலாபுர தரிசனம்’ வெளியானது. 1968-ல் ‘ஆலய தரிசனம்’ என்னும் தலைப்பில் தனது முதல் ஆன்மிகப் பயணக் கட்டுரையை எழுத ஆரம்பித்தார் பரணீதரன். பத்ராசலம், பண்டரிபுரம், நாசிக், ஷீரடி, மந்த்ராலயம் போன்ற இடங்களுக்குச் சென்று அதன் மகத்துவம் பற்றியும் ஷீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்களின் வாழ்க்கை பற்றியும் மிக விரிவாக | |||
1959 -ல் முதல் ஆலய தரிசனக் கட்டுரை ‘நாகலாபுர தரிசனம்’ வெளியானது. 1968-ல் ‘ஆலய தரிசனம்’ என்னும் தலைப்பில் தனது முதல் ஆன்மிகப் பயணக் கட்டுரையை எழுத ஆரம்பித்தார் பரணீதரன். பத்ராசலம், பண்டரிபுரம், நாசிக், ஷீரடி, மந்த்ராலயம் போன்ற இடங்களுக்குச் சென்று அதன் மகத்துவம் பற்றியும் ஷீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்களின் வாழ்க்கை பற்றியும் மிக விரிவாக அத்தொடரில் எழுதியிருந்தார் பரணீதரன். அந்தத் தொடருக்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. பிற்காலத்தில் விகடன் அதனை நூலாகவும் வெளியிட்டது. அதுவும் பல பதிப்புகள் கண்டது. | |||
[[File:Books by Barabeedharan.jpg|thumb|பரணீதரனின் புத்தகங்களில் சில...]] | [[File:Books by Barabeedharan.jpg|thumb|பரணீதரனின் புத்தகங்களில் சில...]] | ||
தொடர்ந்து அருணாசல மகிமை, அன்பே அருளே, திருத்தலப் பெருமை, ஸ்ரீமத்வரும் மடாலயங்களும் எனப் பல ஆன்மிகத் தொடர்களை எழுதினார். | தொடர்ந்து விகடனில் அருணாசல மகிமை, அன்பே அருளே, திருத்தலப் பெருமை, ஸ்ரீமத்வரும் மடாலயங்களும் எனப் பல ஆன்மிகத் தொடர்களை எழுதினார். | ||
== நாடக ஆசிரியர் மெரீனா == | == நாடக ஆசிரியர் மெரீனா == | ||
பரணீதரனின் தந்தை நாடக ஆசிரியராக இருந்தவர். தமிழ்நாடெங்கும் பயணப்பட்டு பல நாடகங்களை மேடையேற்றியவர். அவரது இல்லமே நாடகப் பயிற்சிக் கூடமாக விளங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த காரணத்தாலும் அந்த அனுபவத்தாலும் பரணீதரனுக்கும் நாடகத் துறையின் மீது ஆர்வம் வந்தது. நாடகத்திற்காக ’பரணீதரன்’ சூட்டிக் கொண்ட புனை பெயர் ‘மெரீனா’ | பரணீதரனின் தந்தை நாடக ஆசிரியராக இருந்தவர். தமிழ்நாடெங்கும் பயணப்பட்டு பல நாடகங்களை மேடையேற்றியவர். அவரது இல்லமே நாடகப் பயிற்சிக் கூடமாக விளங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த காரணத்தாலும் அந்த அனுபவத்தாலும் பரணீதரனுக்கும் நாடகத் துறையின் மீது ஆர்வம் வந்தது. நாடகத்திற்காக ’பரணீதரன்’ சூட்டிக் கொண்ட புனை பெயர் ‘மெரீனா’ | ||
முதலில் ‘மெரீனா’ என்ற பெயரில், ‘காதல் என்ன கத்திரிக்காயா?’ என்ற தொடரை விகடனில் எழுதினார் பரணீதரன். தொடர்ந்து ‘வடபழநியில் வால்மீகி’ என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். தனது தந்தையின் நினைவாக தனது நாடகக்குழுவை ‘கலா நிலையம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்தார் | முதலில் ‘மெரீனா’ என்ற பெயரில், ‘காதல் என்ன கத்திரிக்காயா?’ என்ற தொடரை விகடனில் எழுதினார் பரணீதரன். தொடர்ந்து ‘வடபழநியில் வால்மீகி’ என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். தனது தந்தையின் நினைவாக தனது நாடகக்குழுவை ‘கலா நிலையம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்தார். கலாநிலயத்தாரால் முதன் முதலில் ’வடபழநியில் வால்மீகி’ நாடகமாக மேடையேற்றப்பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பால், ‘தனிக்குடித்தனம்’ என்ற நாடகத்தை எழுதினார் பரணீதரன். அது பல நூற்றுக்கணக்கான முறை மேடையேறியதுடன்’ மெரீனா’வுக்கு ஓரு அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நாடகம் அரங்கேறியது. பின்னர் எல்.பி. ரெகார்ட் ஆகவும் இது வெளியானது. எல்.பி. ரெகார்ட் ஆக வெளியான முதல் தமிழ் நாடகம் ‘தனிக்குடித்தனம்’ தான். இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. | ||
தொடர்ந்து ‘ஊர் வம்பு’, ‘கால்கட்டு’, ‘சாந்தி எங்கே’, ‘மாப்பிள்ளை முறுக்கு’, ‘சாமியாரின் மாமியார்’, ‘அடாவடி அம்மாக்கண்ணு’, ‘கூட்டுக் குடித்தனம்’ போன்ற பல நாடகங்களை எழுதினார். அவையும் மேடையேறி நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘கஸ்தூரி திலகம்’, காந்தியின் மனைவியான கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிப்பதாகும். | |||
== ரசிக ரங்கா == | |||
1979-ல், தனது நண்பர்களுடன் இணைந்து ரசிக ரங்கா என்ற நாடக்குழுவை ஏற்படுத்தினார் பரணீதரன். அக்குழு மூலம் தனது நாடகங்கள் பலவற்றை மேடையேற்றினார். தனது நாடகங்களை 500 தடவைகளுக்கும் மேல் அரங்கேற்றியுள்ள பெருமை இவருக்கு உண்டு. ஒரு வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று இவரது 11 நாடகங்கள் ஒரேநாளில் தொடர்ந்து அரங்கேறியுள்ளன. இவரது ‘எங்கம்மா’ என்ற நாடகம், வானொலியில் தேசிய நிகழ்ச்சியாக ஹிந்தியிலும், பிற மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒலிபரப்பானது. | |||
பரணீதரன் 1985-ல் ஆனந்த விகடனில் இருந்து பணி ஓய்வு பெற்றார். அதன் பின்னும் சில இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளும், சில பதிப்பகங்களுக்கு நூல்களையும் எழுதி வந்தார். விகடன் பிரசுரம், கலைஞன் பதிப்பகம், அல்லயன்ஸ் பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், சிறுவாணி வாசகர் மையம் போன்றவை பரணீதரனின் நூல்களை வெளியிட்டுள்ளன. | |||
== மறைவு == | |||
திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்த பரணீதரன், சென்னையில் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பால் ஜனவரி 3, 2020 அன்று காலமானார். | |||
== வரலாற்று இடம் == | |||
== நூல்கள் == | |||
== உசாத்துணை == | |||
Revision as of 20:33, 12 July 2022
ஆன்மிக எழுத்தாளர், கேலிச் சித்திரக்காரர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர் பரணீதரன் (டி.எஸ். ஸ்ரீதர்: 1925-2020) ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய ‘அருணாசல மகிமை’ தொடர், பலரை ஆன்மிக வாசிப்பு நோக்கி ஈர்த்த தொடராகும். மகான்கள் பலரைப் பற்றிப் பல நூல்களைப் படைத்தவர்.
பிறப்பு, கல்வி
பரணீதரன், டிசம்பர் 25, 1925 அன்று, சென்னை புரசைவாக்கத்தில், டி.என். சேஷாசலம்-ருக்மிணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சேஷாசலம் சிறந்த தமிழறிஞர். வழக்குரைஞருக்குப் படித்திருந்தாலும் அதனைத் தொழிலாகக் கொள்ளாமல், ‘கலாநிலயம்’ என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். நாடகத்திலும் ஆர்வம் உடைய தந்தை சேஷாசலம், ஆங்கில நாடங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றி வந்தார்.
வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சூழலில் பரணீதரன் வளர்ந்தார். எப்போதும் தமிழறிஞர்களும், நாடகக் கலைஞர்களும் நிரம்பியிருந்த இல்லச் சூழல்களால் இலக்கியத்தின் பாலும் நாடகத்தின் பாலும் சிறு வயதிலேயே ஈர்க்கப்பட்டார் பரணீதரன். வீட்டிற்கு வந்த சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் உள்ளிட்ட இதழ்களை வாசித்தும், புரசைவாக்கத்தில் இருந்த ரீடிங் ரூமிற்குச் சென்று படித்தும் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
கார்ப்பரேஷன் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்ற பரணீதரன், உயர்நிலைக் கல்வியை முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியிலும், தி.நகர். ராமகிருஷ்ணா பள்ளியிலும் படித்தார். திடீரெனத் தந்தை காலமானதால் பரணீதரனின் கல்வி தடைப்பட்டது. அண்ணன் மற்றும் உறவினர்களின் உறுதுணையால் லயோலா கல்லூரியில் பி.கா.ம் படிப்பை நிறைவு செய்தார்
தனி வாழ்க்கை
படிப்பை முடித்ததும் வேலைக்கு முயற்சி செய்ய ஆரம்பித்தார்.
சிறுவனாக இருந்தபோது ‘கலாநிலயம்’ இதழுக்காக அச்சடிக்கப்பட்ட வெள்ளைக் காகிதங்களில் பொழுது போக்காக கேலிச் சித்திரங்கள் வரைவார் பரணீதரன். அனைவரும் நன்றாக இருப்பதாகப் பாராட்டவே, விகடனில் மாலி வரைந்திருக்கும் கார்டூன்களைப் பார்த்து அதே மாதிரி வரைய முயல்வார். அதுவே பிற்காலத்தில் அவர் கார்டூனிஸ்ட் ஆக உதவியது.
1942-ல் ஒருமுறை திருவிசைநல்லூருக்குச் சென்றார். அது விகடன் ஓவியர் மாலியின் சொந்த ஊர். மாலியைச் சந்தித்தவர், தான் வரைந்த ஓவியங்களைக் காட்டினார். மாலி ‘தொடர்ந்து வரைந்து கொண்டிரு’ என்று ஆசிர்வதித்தார்.
கார்டூனிஸ்ட் சீலி
சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக ‘நீலம்’ என்ற புனைபெயர் கொண்ட நீலமேகம் பணிபுரிந்து வந்தார். அவரை அணுகி வாய்ப்புக் கேட்டார் பரணீதரன். நீலமும் இதழில் இடம் பெறும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு கேலிச் சித்திரம் வரைந்து தருமாறு கேட்டுக் கொண்டார். தனது செல்லப் பெயரான ‘சீலி’ என்ற புனைபெயரில் சுதேசமித்திரன் இதழுக்குத் தொடர்ந்து பல நகைச்சுவைக் கேலிச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தார் பரணீதரன். அவரது இதழியல் பயணம், சுதேசமித்திரன் மூலம் 1945-ல் தொடங்கியது.
தொடர்ந்து சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, தொடர்களுக்கு என்று சிறு சிறு ஓவியங்கள் வரைந்தார். கோமதி ஸ்வாமிநாதனின் சிறுகதைகளுக்கு, நாடகங்களுக்கு, ய.மகாலிங்க சாஸ்திரியின் “தலை தூபாவளி” என்ற நகைச்சுவைத் தொடர் கதைக்கு, என்.எஸ்.ஸ்ரீ எழுதிய ‘அலமுவின் கடிதங்கள்’ என்ற தொடருக்கு வரைந்திருக்கிறார் பரணீதரன்.
கார்டூனிஸ்ட் ஸ்ரீதர்
ரிசர்வ வங்கித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார் பரணீதரன். வேலைக்கான உத்தரவும் கையில் வந்தது. ஆனாலும், 1949 ஜனவரியில், ஏதோ ஓர் உந்துதலில் விகடனுக்குத் தன்னைப் பற்றி எழுதி அனுப்பினார். உடனே எஸ்.எஸ். வாசனை நேரில் சந்திக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தது. தனது கார்டூன்களையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் எடுத்துக் கொண்டு வாசனைச் சந்தித்தார் பரணீதரன். விகடனில் கார்டூன் வரைய வாய்ப்புத் தந்தார் எஸ்.எஸ். வாசன்.
ஆனந்த விகடனில், பரணீதரனின் முதல் கார்டூன், ஸ்ரீதர் என்ற அவரது இயற்பெயரில், 23-01-1949 தேதியிட்ட இதழில் வெளியானது. தொடர்ந்து உலக அரசியல், இந்திய அரசியல் தொடர்பான பல கார்டூன்களை வரைந்தார் பரணீதரன். சுமார் பத்துவருடங்களில் பல நூற்றுக்கணக்கான கார்டூன்களை வரைந்தார். இதழியல் நுணுக்கங்கள் அனைத்தையும் எஸ்.எஸ். வாசனிடம் கற்றுத் தேர்ந்தார்.
1956-ல் விகடனின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் பரணீதரன். அதே ஆண்டில் எஸ்.பாலசுப்பிரமணியனும் விகடனின் ஜே.எம்.டி. ஆகச் சேர்ந்தார். இருவரும் இணைந்து பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தனர். பரணீதரன் விகடனின் இணை ஆசிரியர்களுள் ஒருவராக உயர்ந்தார்.
ஆன்மிக எழுத்தாளர் பரணீதரன்
ஆனந்த விகடனில் பரணீதரனின் முதல் ஆன்மிகத் தொடர் ‘சென்னையில் பொன்மாரி’ என்பதாகும். 1957-ல், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னையில் தங்கியிருந்தார். மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் சந்திரசேகரர் ஆற்றிய உரைகளைத் தொகுத்து ஆனந்த விகடனில், ‘‘சென்னையில் பொன்மாரி’ என்ற தலைப்பில் தொடராக எழுதினார் பரணீதரன். அதுவே ஆன்மிகம் பற்றி அவர் எழுதிய முதல் தொடர். அதற்கு காஞ்சிப் பெரியவரின் ஆசியும் கிடைத்தது. தொடர்ந்து விகடனில் பல ஆன்மிகக் கட்டுரைகளை, தொடர்களை எழுத ஆரம்பித்தார் பரணீதரன்.
1959 -ல் முதல் ஆலய தரிசனக் கட்டுரை ‘நாகலாபுர தரிசனம்’ வெளியானது. 1968-ல் ‘ஆலய தரிசனம்’ என்னும் தலைப்பில் தனது முதல் ஆன்மிகப் பயணக் கட்டுரையை எழுத ஆரம்பித்தார் பரணீதரன். பத்ராசலம், பண்டரிபுரம், நாசிக், ஷீரடி, மந்த்ராலயம் போன்ற இடங்களுக்குச் சென்று அதன் மகத்துவம் பற்றியும் ஷீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் போன்ற மகான்களின் வாழ்க்கை பற்றியும் மிக விரிவாக அத்தொடரில் எழுதியிருந்தார் பரணீதரன். அந்தத் தொடருக்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. பிற்காலத்தில் விகடன் அதனை நூலாகவும் வெளியிட்டது. அதுவும் பல பதிப்புகள் கண்டது.
தொடர்ந்து விகடனில் அருணாசல மகிமை, அன்பே அருளே, திருத்தலப் பெருமை, ஸ்ரீமத்வரும் மடாலயங்களும் எனப் பல ஆன்மிகத் தொடர்களை எழுதினார்.
நாடக ஆசிரியர் மெரீனா
பரணீதரனின் தந்தை நாடக ஆசிரியராக இருந்தவர். தமிழ்நாடெங்கும் பயணப்பட்டு பல நாடகங்களை மேடையேற்றியவர். அவரது இல்லமே நாடகப் பயிற்சிக் கூடமாக விளங்கியது. அதைப் பார்த்து வளர்ந்த காரணத்தாலும் அந்த அனுபவத்தாலும் பரணீதரனுக்கும் நாடகத் துறையின் மீது ஆர்வம் வந்தது. நாடகத்திற்காக ’பரணீதரன்’ சூட்டிக் கொண்ட புனை பெயர் ‘மெரீனா’
முதலில் ‘மெரீனா’ என்ற பெயரில், ‘காதல் என்ன கத்திரிக்காயா?’ என்ற தொடரை விகடனில் எழுதினார் பரணீதரன். தொடர்ந்து ‘வடபழநியில் வால்மீகி’ என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். தனது தந்தையின் நினைவாக தனது நாடகக்குழுவை ‘கலா நிலையம்’ என்ற பெயரிலேயே தொடர்ந்தார். கலாநிலயத்தாரால் முதன் முதலில் ’வடபழநியில் வால்மீகி’ நாடகமாக மேடையேற்றப்பட்டது. அதற்குக் கிடைத்த வரவேற்பால், ‘தனிக்குடித்தனம்’ என்ற நாடகத்தை எழுதினார் பரணீதரன். அது பல நூற்றுக்கணக்கான முறை மேடையேறியதுடன்’ மெரீனா’வுக்கு ஓரு அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நாடகம் அரங்கேறியது. பின்னர் எல்.பி. ரெகார்ட் ஆகவும் இது வெளியானது. எல்.பி. ரெகார்ட் ஆக வெளியான முதல் தமிழ் நாடகம் ‘தனிக்குடித்தனம்’ தான். இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது.
தொடர்ந்து ‘ஊர் வம்பு’, ‘கால்கட்டு’, ‘சாந்தி எங்கே’, ‘மாப்பிள்ளை முறுக்கு’, ‘சாமியாரின் மாமியார்’, ‘அடாவடி அம்மாக்கண்ணு’, ‘கூட்டுக் குடித்தனம்’ போன்ற பல நாடகங்களை எழுதினார். அவையும் மேடையேறி நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘கஸ்தூரி திலகம்’, காந்தியின் மனைவியான கஸ்தூரிபா காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிப்பதாகும்.
ரசிக ரங்கா
1979-ல், தனது நண்பர்களுடன் இணைந்து ரசிக ரங்கா என்ற நாடக்குழுவை ஏற்படுத்தினார் பரணீதரன். அக்குழு மூலம் தனது நாடகங்கள் பலவற்றை மேடையேற்றினார். தனது நாடகங்களை 500 தடவைகளுக்கும் மேல் அரங்கேற்றியுள்ள பெருமை இவருக்கு உண்டு. ஒரு வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று இவரது 11 நாடகங்கள் ஒரேநாளில் தொடர்ந்து அரங்கேறியுள்ளன. இவரது ‘எங்கம்மா’ என்ற நாடகம், வானொலியில் தேசிய நிகழ்ச்சியாக ஹிந்தியிலும், பிற மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஒலிபரப்பானது. பரணீதரன் 1985-ல் ஆனந்த விகடனில் இருந்து பணி ஓய்வு பெற்றார். அதன் பின்னும் சில இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளும், சில பதிப்பகங்களுக்கு நூல்களையும் எழுதி வந்தார். விகடன் பிரசுரம், கலைஞன் பதிப்பகம், அல்லயன்ஸ் பதிப்பகம், கிழக்கு பதிப்பகம், சிறுவாணி வாசகர் மையம் போன்றவை பரணீதரனின் நூல்களை வெளியிட்டுள்ளன.
மறைவு
திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்த பரணீதரன், சென்னையில் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பால் ஜனவரி 3, 2020 அன்று காலமானார்.
வரலாற்று இடம்
நூல்கள்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.