சடையன் சிவஞானம்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 16: | Line 16: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/75/7475/7475.pdf ”இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு” செல்லையா - மெற்றாஸ்மயில்] | * [https://noolaham.net/project/75/7475/7475.pdf ”இசை நாடகக் கூத்து - மூத்த கலைஞர் வரலாறு” செல்லையா - மெற்றாஸ்மயில்] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 17:49, 23 June 2022
சடையன் சிவஞானம் (பிறப்பு:ஜனவரி 3, 1953) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். காத்தவராயன் கூத்துக்காகப் புகழ்பெற்றார். சமூக, சரித்திர புராண நாடகங்கள் பலவற்றில் நடித்ததோடு பல நாடகங்களை நெறியாள்கை செய்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை கைதடியில் ஜனவரி 3, 1953 அன்று பிறந்தார். மனைவியின் தந்தை சிவலைவேலன் இவருடைய கலை வாழ்க்கைக்கு அடித்தளமிட்டார்.
கலை வாழ்க்கை
சமூக, சரித்திர புராண நாடகங்கள் பலவற்றில் நடித்ததோடு பல நாடகங்களை நெறியாள்கை செய்தார். 196-இல் ”சதானந்த சந்திரவதனி” சரித்திர நாடகத்தில் முதல் முறையாக நடித்தார். 1967-ல் வீரசொர்க்கம் சரித்திர நாடகத்தில் நடித்தார். 1975-ல் ”முதலியார்” என்னும் சமூக நாடகத்திலும், 1980-ல் ”மதனா” எனும் சரித்திர நாடகத்திலும், 1981-ல் ”சூடு” என்னும் சமூக நாடகத்திலும் நடித்தார்.
பாரம்பரிய கலைகளை பரம்பரை பரம்பரையாக வளர்த்து வந்த அவரது மாமனார் அண்ணாவியார் சிவலைவேலனைக் குருவாகக் கொண்டு அவரது ”காத்தவராயன்” நாட்டுக்கூத்தில் 1981-ல் நடித்தார். அந்நாடகம் பல மேடைகளில் ஏறியதோடு அவரை ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாற்றியது. மாமனார் காலமான பின்னர் 1989-ல் முதல் முறையாக நாவற்குளி சந்தியில் இருந்த சில கலைஞர்களை ஒன்றிணைத்து காத்தவராயன் நாடகத்தைப் பழக்கி மேடையேற்றினார். 1990-ல் கைதடி தெற்கு மின்னொளி நாடகமன்றமும், 1993-ல் நீர்வேலி கலையகமும், 1994-ல் பூம்புகார் நாடகமன்ற ஆண் பெண் கலைஞர்களும், 1995-ல் கைதடி கிழக்கு நாடகமன்றமும் சிவஞானத்தி நாடகங்களில் நடித்தனர். 1996-ல் வன்னி மண்ணுக்கு இடம்பெயர்ந்து சென்றிருந்த வேளையில் அங்கும் இந்த நாடகத்தை மேடையேற்றினார். 1997-ல் கைதடிக்கு திரும்பிவந்த பின் வளர்மதி நாடகமன்றக் கலை உள்ளங்களுக்கு இந்நாடகத்தைப் பயிற்றுவித்தார். அந்நாடகம் பாரம்பரிய மேம்பாட்டுக் கழகத்தினரால் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட காத்தவராயன் சிந்து நாட்டுக் கூத்தில் முதலிடம் பெற்றது.
நடித்த கூத்துகள்
- சதானந்த சந்திரவதனி
- முதலியார்
- மதனா
- காத்தவராயன்
பழக்கிய நாட்டுக்கூத்துக்கள்
- காத்தவராயன்
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.