under review

சி.ஆர். ராஜம்மா: Difference between revisions

From Tamil Wiki
Line 11: Line 11:
===== நாவல் =====
===== நாவல் =====
* நீர்க்கோயில்கள்
* நீர்க்கோயில்கள்
* இரண்டும் ஒன்றும்
===== சிறுகதைகள் =====
===== சிறுகதைகள் =====
* பலியாத ஜோசியம்
* பலியாத ஜோசியம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.

Revision as of 13:30, 26 May 2022

சி.ஆர். ராஜம்மா

சி.ஆர். ராஜம்மா விடுதலைக்கு முந்தைய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். எழுபது நாவல்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

மிகவும் ஏழ்மையான பின்னணியில் வாழ்ந்தவர். கணவர் ஸ்ரீனிவாசன் எவ்வித வேலைக்கும் செல்லாததால் இவர் தான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி ஆனது. அதற்காக, தனக்குத் தெரிந்த எழுத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டார். ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து கதைகளை எழுதி, அவற்றைப் பதிப்பாளர்களிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் புதினம் ”நீர்க்கோயில்கள்”. எழுபது நாவல்களை இவர் எழுதியுள்ளார். சிறுகதைகளை விட நாவல்களை அதிகம் எழுதினார். பெண்களை முதன்மைப்படுத்தி, பெண்களின் வாழ்க்கையையே தனது படைப்புகளில் காட்சிப்படுத்தியுள்ளார். சுதேசமித்திரன், கல்கி உள்ளிட்ட இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

மறைவு

இறுதிக் காலத்தில் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ராஜம்மா, 1981 ல் காலமானார்.

நூல்கள்

நாவல்
  • நீர்க்கோயில்கள்
  • இரண்டும் ஒன்றும்
சிறுகதைகள்
  • பலியாத ஜோசியம்

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.