being created

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி: Difference between revisions

From Tamil Wiki
(பெயர்கள் சேர்த்தது)
Line 2: Line 2:
[[File:Dubianski150 09022008.jpg|thumb|நன்றி - [https://muelangovan.blogspot.com/ http][https://muelangovan.blogspot.com/ ://muelangovan.blogspot.com/]]]
[[File:Dubianski150 09022008.jpg|thumb|நன்றி - [https://muelangovan.blogspot.com/ http][https://muelangovan.blogspot.com/ ://muelangovan.blogspot.com/]]]
== பிறப்பு,கல்வி ==
== பிறப்பு,கல்வி ==
இவர் ஏப்ரல் 27, 1941 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.  
இவர் ஏப்ரல் 27, 1941-ஆம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.  


இவர் நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற மகள் பிறந்தார்.
இவர் நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற மகள் பிறந்தார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
இவர் சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர் 1965 ஆம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே உயர் நிலைப்பட்டப்படிப்பையும் முடித்து,1973 ஆம் ஆண்டு விரிவுரையாளராக அங்கேயே பணியில் அமர்ந்தார் பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வும் பெற்று பணியாற்றினார்.
இவர் சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர் 1965-ஆம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே உயர் நிலைப்பட்டப்படிப்பையும் முடித்து,1973- ஆம் ஆண்டு விரிவுரையாளராக அங்கேயே பணியில் அமர்ந்தார் பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வும் பெற்று பணியாற்றினார்.


இவர் ''செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல்'' என்று சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதேக்கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.
இவர் ''செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல்'' என்று சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதேக்கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.


இவர் 1979 ஆம் ஆண்டு இந்தியவிற்கு சென்று சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் பேராசிரியர் சஞ்சீவ் அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.
இவர் 1979-ஆம் ஆண்டு இந்தியவிற்கு சென்று சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் பேராசிரியர் சஞ்சீவ் அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.
பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.[[File:Dubianski bbc.jpg|thumb|நன்றி-bbc.com]]
பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.[[File:Dubianski bbc.jpg|thumb|நன்றி-bbc.com]]
== பங்களிப்பு ==
== பங்களிப்பு ==
Line 17: Line 17:
இவர் தூயத்தமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார் மேலும் பல ரஷ்யப்பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். இவர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், இவற்றில் பல கட்டுரைகள் தமிழ் மொழி குறித்து எழுதியுள்ளார்.
இவர் தூயத்தமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார் மேலும் பல ரஷ்யப்பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். இவர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், இவற்றில் பல கட்டுரைகள் தமிழ் மொழி குறித்து எழுதியுள்ளார்.


இவர் 1979ஆம் ஆண்டில் ''ஓலைச் சுவடியில் தமிழ்ப் பாடல்கள்'' என்ற தலைப்பில் ''எட்டுத்தொகை, பத்துப்பாட்டு'' ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.  
இவர் 1979-ஆம் ஆண்டில் ''ஓலைச் சுவடியில் தமிழ்ப் பாடல்கள்'' என்ற தலைப்பில் ''எட்டுத்தொகை, பத்துப்பாட்டு'' ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.  


இவர் ''தமிழ் இலக்கியம் ஒரு பார்வை'' என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் ஒரு நூலை 1987ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.  
இவர் ''தமிழ் இலக்கியம் ஒரு பார்வை'' என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் ஒரு நூலை 1987-ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.  


இவர் 1989ஆம் ஆண்டு ''பழந்தமிழ் பாடல்களில் சடங்கு,புராண இலக்கிய வேர்கள்'' என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  
இவர் 1989-ஆம் ஆண்டு ''பழந்தமிழ் பாடல்களில் சடங்கு,புராண இலக்கிய வேர்கள்'' என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.  


இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.  
இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.  


இவர் 2000 ஆம் ஆண்டில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து எழுதிய நூல் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பு என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.
இவர் 2000-ஆம் ஆண்டில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து எழுதிய நூல் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பு என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.


இவர் ரஷ்ய மொழியில் இயற்றிய நூல்கள்
இவர் ரஷ்ய மொழியில் இயற்றிய நூல்கள்
Line 45: Line 45:
* செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி
* செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி
* உழிஞைச் செய்திகள்
* உழிஞைச் செய்திகள்
இவர் உலகெங்கிலும் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டில் கோவையில் நடந்த செந்தமிழ் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார்.
இவர் உலகெங்கிலும் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் 2010-ஆம் ஆண்டில் கோவையில் நடந்த செந்தமிழ் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார்.


இவர் தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சிவத்தம்பி, வைரமுத்து மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார்.  
இவர் தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சிவத்தம்பி, வைரமுத்து மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார்.  
Line 51: Line 51:
இவர் ஒவ்வொரு ஆண்டும் சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ஒன்றை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்திவந்தார்.  
இவர் ஒவ்வொரு ஆண்டும் சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ஒன்றை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்திவந்தார்.  


இவர் 2016 ஆம் ஆண்டு தமது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய ''தமிழ் தந்த பரிசு'' என்ற 600 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார்.  
இவர் 2016-ஆம் ஆண்டு தமது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய ''தமிழ் தந்த பரிசு'' என்ற 600 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார்.  
== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==
இவர் 2010 ஆண்டு செந்தமிழ் மாநாட்டில் சமர்பித்த தொல்காப்பியம் பற்றிய கட்டுரை பலவிவாதங்களை உருவாக்கியது.  
இவர் 2010-ஆம் ஆண்டு செந்தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த தொல்காப்பியம் பற்றிய கட்டுரை பலவிவாதங்களை உருவாக்கியது.  


இந்த கட்டுரையில் “''தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை''” என்று குறிப்பிட்டிருந்தார்.  
இந்த கட்டுரையில் “''தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை''” என்று குறிப்பிட்டிருந்தார்.  
== விருது ==
== விருது ==
இவருடைய பணியைப் பாராட்டி இவருக்குத் தெற்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013இல் வழங்கியது.
இவருடைய பணியைப் பாராட்டி இவருக்குத் தெற்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013-ல் வழங்கியது.
== மறைவு ==
== மறைவு ==
இவர் நவம்பர் 18, 2020 ஆம் ஆண்டு, தனது 79 ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.
இவர் நவம்பர் 18, 2020-ஆம் ஆண்டு, தனது 79- ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://mutiru-tamilosai.blogspot.com/2011/09/alexander-dubianskiy-tamil-scholar-from.html தமிழ் ஓசை]
[https://mutiru-tamilosai.blogspot.com/2011/09/alexander-dubianskiy-tamil-scholar-from.html தமிழ் ஓசை]

Revision as of 12:22, 23 May 2022

அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (அலெக்சாண்டர் மிகைலுவிச் துபியான்ஸ்கி, Alexander Mikhailovitch Dubiansky, Alexander Dubianskiy, Alexander Dubyanskiy, or Aleksandr Dubiansky)(1941-2020) ரஷ்ய தமிழறிஞராகவும், மொழியியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவர் தமிழின் சங்க நூல்களை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியவர்களில் முன்னோடி.

பிறப்பு,கல்வி

இவர் ஏப்ரல் 27, 1941-ஆம் ஆண்டு ரஷ்யாவில் மிகையல் மற்றும் கெலன் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் நத்தாலியா என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு தான்யா என்ற மகள் பிறந்தார்.

தனிவாழ்க்கை

இவர் சில ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பின்னர் 1965-ஆம் ஆண்டு மாஸ்கோ ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டில் ( Moscow State University's Institute of Oriental Language) தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்து பின்னர் அங்கேயே உயர் நிலைப்பட்டப்படிப்பையும் முடித்து,1973- ஆம் ஆண்டு விரிவுரையாளராக அங்கேயே பணியில் அமர்ந்தார் பின்னர் உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வும் பெற்று பணியாற்றினார்.

இவர் செவ்வியல் தமிழ் இலக்கியத்தின் கவிதையியல் என்று சங்கத்தமிழ் பற்றி ஆய்வு செய்து அதேக்கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் இந்த ஆய்வை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.

இவர் 1979-ஆம் ஆண்டு இந்தியவிற்கு சென்று சென்னை பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதங்கள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் பேராசிரியர் சஞ்சீவ் அவர்களிடம் புறநானூறு கற்றார். பின்னர் பேராசிரியர் பொற்கோ அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார்.

பின்னாளில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையின் தலைவராக பணியில் இருந்தார். மேலும் இவர் பத்திற்கும் மேற்ப்பட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

நன்றி-bbc.com

பங்களிப்பு

இவர் ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட்டில் தமிழ் சொல்லிக்கொடுக்க ஒரு பள்ளியை உருவாக்கினார்.

இவர் தூயத்தமிழில் பேசவும், எழுதவும் பலரை பயிற்றுவித்தார் மேலும் பல ரஷ்யப்பல்கலைக்கழகத்தில் 50 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ளார். இவர் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார், இவற்றில் பல கட்டுரைகள் தமிழ் மொழி குறித்து எழுதியுள்ளார்.

இவர் 1979-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியில் தமிழ்ப் பாடல்கள் என்ற தலைப்பில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழ் இலக்கியம் ஒரு பார்வை என்ற தலைப்பில் பத்தொன்பதாவது நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கியங்கள் குறித்து ரஷ்ய மொழியில் ஒரு நூலை 1987-ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

இவர் 1989-ஆம் ஆண்டு பழந்தமிழ் பாடல்களில் சடங்கு,புராண இலக்கிய வேர்கள் என்னும் இரு நூல்களை ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இந்த நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இவர் புறநானூற்றை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இவர் 2000-ஆம் ஆண்டில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சடங்குகள், தொன்மங்கள் குறித்து எழுதிய நூல் தமிழுக்கு அவர் அளித்த முக்கியமான பங்களிப்பு என்று பழ. நெடுமாறன் வரையறுக்கிறார்.

இவர் ரஷ்ய மொழியில் இயற்றிய நூல்கள்

  • தமிழ் இலக்கியம் ஒரு பார்வை
  • பனை ஒலையில் பாடல்கள்
  • பழந்தமிழ் இலக்கியங்களில் சடங்குகளும் தொல்புனைகதைகளும் (Ritual and Mythological Sources of the Early Tamil Poetry)

இவர் தமிழ் குறித்து ரஷ்ய மொழியில் எழுதி வெளியிட்டுள்ள குறிப்பிடத்தகுந்த கட்டுரைகள்

  • பத்துப்பாட்டு
  • தமிழின் அகப்பொருள் பாடல்களின் அமைப்பு
  • பத்தினி வழிபாடு
  • சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம்
  • உலக இலக்கியங்களில் ஒன்றான தமிழ் இலக்கியம்
  • பாரதியின் தேசபக்திப் பாடல்கள்

இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட கட்டுரைகள்

  • சிலப்பதிகாரக் கதையும் அமைப்பும்
  • குறிஞ்சிப் பாட்டு
  • சங்க நெய்தல் பாடல்கள்
  • பழந்தமிழில் காஞ்சி
  • செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் நொச்சி
  • உழிஞைச் செய்திகள்

இவர் உலகெங்கிலும் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு ஆய்வரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் 2010-ஆம் ஆண்டில் கோவையில் நடந்த செந்தமிழ் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி உரையாற்றினார்.

இவர் தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், சிவத்தம்பி, வைரமுத்து மற்றும் பலருடன் நல்ல தொடர்பில் இருந்தார்.

இவர் ஒவ்வொரு ஆண்டும் சங்கப் பாடல்கள் குறித்த வாசிப்புப் பட்டறை ஒன்றை ரஷ்ய ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடத்திவந்தார்.

இவர் 2016-ஆம் ஆண்டு தமது 75-வது பிறந்தநாளின்போது பல்வேறு தமிழறிஞர்களின் கட்டுரைகளடங்கிய தமிழ் தந்த பரிசு என்ற 600 பக்கங்கள் கொண்ட நூலை வெளியிட்டார்.

விவாதங்கள்

இவர் 2010-ஆம் ஆண்டு செந்தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த தொல்காப்பியம் பற்றிய கட்டுரை பலவிவாதங்களை உருவாக்கியது.

இந்த கட்டுரையில் “தொல்காப்பியத்தை ஆராய்ந்த அறிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய சாஸ்திரி தொல்காப்பியத்தின் பல பகுதிகள் சம்ஸ்கிருத நூல்களின் நேரடி மொழிபெயர்ப்புகள் என்று கூறியுள்ளார். நான் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அந்தக் காலத்தில் பிரதிகளுக்கிடையே இருந்த உறவு என்பது மொழிபெயர்ப்பு என்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக, ஒரு மொழியில் இருப்பதை இன்னொன்றில் வழங்குவது என்ற விதத்தில்தான் இருந்தது. ஒன்றிலிருந்து கடன் பெறுவதையோ, ஒன்றன் கருத்தாக்கத்தை இன்னொரு மொழியில் பயன்படுத்துவதையோ அப்போது யாரும் தவறாக நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

விருது

இவருடைய பணியைப் பாராட்டி இவருக்குத் தெற்காசியக் கல்விச் சங்கம் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013-ல் வழங்கியது.

மறைவு

இவர் நவம்பர் 18, 2020-ஆம் ஆண்டு, தனது 79- ஆம் வயதில் கொரோனாவினால் உயிரிழந்தார்.

உசாத்துணை

தமிழ் ஓசை

முனைவர் இளங்கோவன் பதிவு

பழ. நெடுமாறன் குறிப்பு

தி இந்து கருத்துப்பேழை - அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி: தமிழ் தந்த பரிசு! - ரவிக்குமார், ‘மணற்கேணி’ இலக்கிய ஆய்விதழின் ஆசிரியர்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.