being created

சீதக்காதி நொண்டிநாடகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:


==ஆசிரியர்==
==ஆசிரியர்==
சீதக்காதி நொண்டி நாடகத்தை எழுதியவர் பெயர் அறியவரவில்லை. எனினும் இவர் இஸ்லாமியர் என்றும் புதியதாக இஸ்லாமிய மார்க்கத்தை எற்றவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.





Revision as of 05:59, 30 October 2024

சீதக்காதி நொண்டிநாடகம் சீதக்காதி வள்ளலைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட நொண்டிநாடகம் என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

சீதக்காதி நொண்டி நாடகத்தை எழுதியவர் பெயர் அறியவரவில்லை. எனினும் இவர் இஸ்லாமியர் என்றும் புதியதாக இஸ்லாமிய மார்க்கத்தை எற்றவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


கதைச்சுருக்கம்

முகலாயப் பேரரசர் ஔரங்கசேபின் உத்தரவுப் படி துல்பகார்கான், இஸ்மாயீல்கான் என்னும் இரு படைத்தலைவர்களின்கீழ் முகலாயச்சேனை செஞ்சிக்கோட்டையை முற்றுகையிட்டது.

நூல் அமைப்பு

சீதக்காதி நொண்டிநாடகத்தில் பூபாளம், நாதநாமக்கிரியை, மோகனம் என்னும் மூன்று ராகங்கள் காணப்படுகின்றன. பாட்டுக்கள் ஆதி தாளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந் நாடகத்தின் நூற்றுஎண்பத்தாறாவது கண்ணியில் தம்புரா, மத்தளம் முதலிய இசைக்கருவிகள் கூறப்பட்டிருக்கின்றன.

பாடல் நடை

மாறுகால் மாறுகை வாங்குதல்

கோட்டைக்கப்புற நடத்தி யவரவர்
    குழுவுங்கடைத் தெருவும் வழியும்விட்டுப்
பேட்டைத்தெருவிலிருத் தியம் பட்டப்
    பிரமனை யழைப்பித்தா ரரண்மனை யார்

கருவி பிரமனெடுத் துக் கூர்மையைக்
      காட்டிக்கைச் சாணையிற் றீட்டிக் கொண்டு
வரையுங் குறியுங் குறித்தே சுறுக்கினில்
      வலக்காலு மிடக்கையும் வாங்கினானே

கீழக்கரையில் சீதக்காதி கொலுவிருத்தல்

வரிசைச்செய்யிது நயினான் சிருஷ்டித்த
      வாலமன்மதனொரு பாலிருக்க
அரசர்க டொழுசரணன் குட்டி
      யாலிப் பிள்ளையொரு பாலிருக்க
....
சங்கநிதி பத்மநிதிபோல் நிதிவாரிச்
         சடையாமலிருகையுங் கொடைகொடுக்க
இங்கித சௌந்தரிய மின்னார் ஆலாத்தி
        யேந்தி யிருபுறமுஞ் சேர்ந்து நிற்க
...
நிறைந்த கலைமதி வந்தே சமுகத்தில்
        நின்றதென்ன வெள்ளை வட்டமொன்று நிழற்றச்
சிறந்த சிங்காசனத் தில் செய்தக்காதி
        சிலைமதனைப் போலக் கொலுவிருந்தான்
...
விஞ்சையற் கனுகூ லன் காயலில்
           விசயரகுநாதப் பெரியதம்பிக்
 கஞ்சமலர்ப்பாதத் தைக் கண்ணாரக்
           கண்டுகளி கூர்ந்து நான் தெண்டனிட்டேன்

சீதக்காதி நொண்டியை ஹஜ் செய்யப் பணித்தல்

படித்துப் *பறலு சுன்னத்து* நவிலுடன்*
            *பாத்திகாவோதிசல வாத்த *றிந்து
         முடித்துக் கலா* தொழு தே னிவனல்ல
            முசிலிமெனச் சொன்னா ரிசுலாமானோர்

தொழுகையு நோன்பையு மே* சக்காத்தையு*ந்
            தொகுத்தபடி முடித்து நடத்திடென் றார்
         பழுதறு கஜ்ஜு செயவே போவென்றார்
            பக்கத்திலிருந்தோர்கள் மக்கமதற்கு

உசாத்துணை

வள்ளல் செய்தக்காதி நொண்டி நாடகம், தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.