இ. நாகேசையர்: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom) |
(added Category:ஈழத்து ஆளுமைகள்) |
||
Line 24: | Line 24: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] |
Revision as of 17:40, 28 April 2022
இ. நாகேசையர் (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை, யாழ்ப்பாணம், வட்டுக் கோட்டையில் இராமசாமி ஐயருக்கு மகனாக நாகேசையர் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். வட்டுக் கோட்டையில் கோவில் கொண்டுள்ள கந்தசுவாமியை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ’நாணிக்கண் புதைத்தல்’ எனும் துறைமேல் நூறு செய்யுள்கள் பாடினார். அமுத நுணுக்கம் எனும் பெயருடன் ஒரு விஷ வைத்திய நூலினை எழுதினார்.
மறைவு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 1862-ல் இ. நாகேசையர் காலமானார்.
நூல்கள் பட்டியல்
கோவை
- அடைக்கலங் கோவை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந.வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page