இன்பகவி: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom) |
(added Category:ஈழத்து ஆளுமைகள்) |
||
Line 27: | Line 27: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] |
Revision as of 17:39, 28 April 2022
இன்பகவி (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சியிலுள்ள மணப்பாறையில் இன்பகவி பிறந்தார். இவரது இயற்பெயர் சவியார் என்றிக் லேயாம். இவர் இலங்கைக்குச் சென்று ஆபிரகாம் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார். பிலிப் ரோட்ரிகோ முத்துக்கிருஷ்ணாவைக் குறித்து குறவஞ்சி என்னும் நாடகத்தினை உருவாக்கினார்.
மறைவு
இன்பகவி 1835-ல் காலமானார்.
நூல்கள் பட்டியல்
குறவஞ்சி
- கச்சேரி முதலியார் குறவஞ்சி
- முத்துக்கிருட்டிணன் குறவஞ்சி
- யாழ்ப்பாணத்துச் செல்வர் குறவஞ்சி
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page