மா.சு.சம்பந்தன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:மா.சு.சம்பந்தன்.png|thumb|மா.சு.சம்பந்தன்]] | [[File:மா.சு.சம்பந்தன்.png|thumb|மா.சு.சம்பந்தன்]] | ||
மா. சு. சம்பந்தன் (மே 25, 1923 - செப்டெம்பர் 25, 2011) தமிழ் இலக்கிய வரலாற்றாளர், இதழியல் வரலாற்றாளர், தனித்தமிழ் ஆர்வலர்,பெரியாரியச் சிந்தனையாளர். | மா. சு. சம்பந்தன் (மே 25, 1923 - செப்டெம்பர் 25, 2011) தமிழ் இலக்கிய வரலாற்றாளர், இதழியல் வரலாற்றாளர், தனித்தமிழ் ஆர்வலர், பெரியாரியச் சிந்தனையாளர். | ||
பார்க்க ஈழ எழுத்தாளர் [[சம்பந்தன்]] | பார்க்க ஈழ எழுத்தாளர் [[சம்பந்தன்]] |
Revision as of 14:41, 19 April 2022
மா. சு. சம்பந்தன் (மே 25, 1923 - செப்டெம்பர் 25, 2011) தமிழ் இலக்கிய வரலாற்றாளர், இதழியல் வரலாற்றாளர், தனித்தமிழ் ஆர்வலர், பெரியாரியச் சிந்தனையாளர்.
பார்க்க ஈழ எழுத்தாளர் சம்பந்தன்
பிறப்பும் கல்வியும்
சம்பந்தன் ஆந்திராவின் நகரி அருகில் மாரம்பேடு எனும் ஊரில், சுப்பிரமணியனின் மகனாக மே 25, 1923-ல் பிறந்தார். மாரம்பேடு சுப்பிரமணியன் மகன் சம்பந்தன் என்பதன் சுருக்கமே மா. சு. சம்பந்தன். சென்னை முத்தியாலுப்பேட்டை மேல்நிலைப்பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார். இவருக்கு ஐந்து மகன்கள்.
இலக்கிய வாழ்க்கை
சென்னைக் கன்னிமாரா நூலகத்தில், இளநிலை அலுவலராகப் பணிபுரிந்தார். சி.என் அண்ணாத்துரையுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, மாநகராட்சி உறுப்பினராக ஆனார். சென்னைப் பல்கலைக் கழகத்தின், 'செனட்' உறுப்பினராக பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில், அதிகம் பயன்படுத்திய தமிழ் அல்லாத சொற்களான ஸ்ரீ, ஸ்ரீமதி, அபேட்சகர் போன்றவற்றை, முறையே திரு, திருமதி, வேட்பாளர் என்று மாற்றிப் பயன்படுத்த, நடைமுறைகளை கொண்டு வந்தார். தமிழ் பற்றாளரான இவர், தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு கூட்டங்களிலும் கலந்து கொண்டு களப்பணி ஆற்றியுள்ளார்
மறைவு
மா.சு.சம்பந்தன் தன் 89-வது வயதில் செப்டெம்பர் 25, 2011-ல் இலக்கியக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும்பொருட்டு வெளியே சென்றார். அதன்பின் காணாமலானார்[1].
விருதுகள்
- 1966-ஆம் ஆண்டு, 'அச்சுக்கலை' என்ற நூலுக்கு, தமிழக அரசின் முதல்வர் பக்தவத்சலம் பரிசு வழங்கினார்.
- 1982-ஆம் ஆண்டு, 'அச்சும் பதிப்பும்' என்ற நூலுக்கு, எம்.ஜி.ஆர். தமிழக அரசின் பரிசை வழங்கினார்.
- 1986-ஆம் ஆண்டு'தமிழ் இதழியல் வரலாறு' என்ற நூலுக்கு, தமிழக அரசின் விருது பெற்றார்.
இலக்கிய இடம்
தமிழிலக்கியம், தமிழ் இதழ்கள் ஆகியவற்றின் வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவர் மா.சு.சம்பந்தன்.
நூல்கள்
- சிறந்த பேச்சாளர்கள் - 1947
- சென்னை மாநகர் - 1949
- திருச்சி விசுவநாதம் - 1949
- அச்சுக்கலை - 1959
- அச்சும் பதிப்பும் - 1980
- எழுத்தும் அச்சும் - 1981
- தமிழ் இதழியல் வரலாறு - 1989
- தமிழ் இதழியல் சுவடுகள் - 1990
- தமிழ் இதழியல் களஞ்சியம் - 1990
- தொடர்பன் கட்டுரைகள் - 1998
உசாத்துணை
- மா.சு.சம்பந்தன் வாழ்க்கைக்குறிப்பு
- மா.சு.சம்பந்தன், தினமணி செய்திl
- அச்சும்பதிப்பும், தமிழ் இணையநூலகம்
- தமிழ் இதழியல் வரலாறு இணையத்தில்
- மா.சு.சம்பந்தன் நூல்கள் இணையநூலகம்
குறிப்பு
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.