குலாம் காதிறு நாவலர்: Difference between revisions
(Moved Category Stage markers to bottom) |
m (Reviewed by Je) |
||
Line 51: | Line 51: | ||
{{ready for review}} | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 17:37, 17 April 2022
குலாம் காதிறு நாவலர் (1833-1908) தமிழ் புலவர். உரைநடை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். நான்காம் தமிழ்ச்சங்கம் அமையக் காரணமானவர்களில் ஒருவர்; அதன் முதற்பெரும் புலவர். இவரது நூல்களை தமிழக அரசு 2007இல் நாட்டுடைமையாக்கியது.
பிறப்பு, கல்வி
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் 1833இல் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு ராவுத்தரின் மகனாக குலாம் காதிறு நாவலர் பிறந்தார்.
எழுத்துச்சுவடி, எண்சுவடி, திவாகரம், பிங்கலம், நிகண்டு ஆகியவைகளை திண்ணைப் பள்ளிகளில் கற்றுத்தேர்ந்தார். நாகூர் பெரும்புலவர் நாராயணசுவாமி பண்டிதர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவர் பத்தொன்பது கவிதை நூல்கள், ஏழு உரைநடை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு இலக்கண நூல்கள் எழுதியுள்ளார். காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என பல இலக்கிய வகைகளில் எழுதியுள்ளார். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக் கொண்டு வந்தார். செல்வந்தர் பெ.மா. மதுரைப்பிள்ளையை வாழ்த்தி மதுரைக்கோவை நூலைப் படைத்தார். நான்காவது நக்கீரர் என்று அழைக்கப்படுகிறார். மறைமலை அடிகளார் இவரின் மாணவர்.
விருது
- செல்வந்தர் பெ.மா. மதுரைப்பிள்ளை புலவர் குலாம் காதிறுவுக்கு நாவலர் பட்டத்தை தங்கத் தாம்பாளத்தில் பொறித்து அளித்தார். இது முதல் குலாம் காதிறு நாவலர் என்று அழைக்கப்பட்டார்.
நூல் பட்டியல்
கவிதை
- நாகூர்க் கலம்பகம் (1878)
- நாகூர் புராணம் (1893)
- தர்கா மாலை (1928)
- முகாஷபா மாலை (1899, 1983)
- குவாலீர்க் கலம்பகம் (1882)
- திருமக்காத் திரிபந்தாதி (1895)
- ஆரிபு நாயகம் (1896)
- பதாயிகுக் கலம்பகம் (1900)
- பகுதாதுக் கலம்பகம் (1894)
- புலவராற்றுப்படை (1903, 1968)
- சமுத்திரமாலை
- பிரபந்தத் திரட்டு
- மும்மணிக்கோவை
- சித்திரக்கவித்திரட்டு
உரைநடை
- கன் ஜுல் கராமாத்
- தரீக்குல் ஜன்னாவுக்கு உரை
- ஃபிக்ஹு மாலைக்கு உரை
- அரபுத் தமிழ் அகராதி
- சீறாப்புராண வசன காவியம்
- ஆரிபு நாயக வசனம்
- திருமணிமாலை வசனம்
- நன்னூல் விளக்கம்
- பொருத்த விளக்கம்
- நபிகள் பிரான் நிர்யாண மான்மிய உரை
- உமரு பாஷா யுத்த சரித்திரம்
உசாத்துணை
- https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/97065/1/%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.html
- நாகூர் குலாம் காதிறு நாவலருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா?- Dinamani
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.