under review

பொய்யாமொழிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added display-text to hyperlinks)
Line 20: Line 20:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luxy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luxy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/7 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* https://thfcms.tamilheritage.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/
* [https://thfcms.tamilheritage.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/ பொய்யாமொழிப் புலவர் – THF – Tamil Heritage Foundation]




{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:35, 14 April 2022

தஞ்சைவாணன் கோவை

பொய்யாமொழிப் புலவர் (பொ.யு. 1268-1311). புலவர் ஒரு தமிழ்ப் புலவர். அபிதான சிந்தாமணி, புலவர் புராணம், தமிழ் நாவலர் சரிதம் போன்ற நூல்களில் இவர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பொய்யாமொழிப் புலவர் தொண்டை மண்டலம் செங்காட்டங் கோட்டத் துறையூரைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் பொ.யு. 1268-1311 ஆம் ஆண்டு என தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். வயிரபுரம் எனும் ஊரிலிருந்த ஆசானிடம் இலக்கியக் கல்வி பயின்றார்.

இலக்கியவாழ்க்கை

பொய்யாமொழிப் புலவர் என்ற பெயர் இவருக்கு இவரின் ஆசிரியரால் வழங்கப்பட்டது. பல தனிப்பாடல்களை இயற்றியுள்ளார். தஞ்சைவாணன் கோவை எனும் அகப்பொருட்கோவை நூலை இயற்றியுள்ளார். இந்நூல் தஞ்சைவாணன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும், தஞ்சைவாணனின் மனைவி பொன்னாலான தேங்காய்களைப் பரிசாக வழங்கினார். அரசன் இத்தேங்காய்களின் மூன்று கண்களிலும் விலையுயர்ந்த இரத்தினங்களை வைத்துப் பரிசளித்தான்.

தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி

இவரைப் பற்றிய திரைப்படம்

பொய்யாமொழிப் புலவரைப் பற்றிய திரைப்படம், 1943இல் “சிவகவி” என்னும் பெயரில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்து வெளிவந்தது.

மறைவு

பொ.யு 1311ஆம் நூற்றாண்டில் தன்னுடைய நண்பர் சீநக்க முதலியாரின் இறப்பிற்குப் பின் துக்கமடைந்து அவருடனேயெ உடன்கட்டை ஏறினார் என நம்பப்படுகிறது.

நூல் பட்டியல்

  • தஞ்சைவாணன் கோவை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.