எருமை (ஊர்): Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
Line 10: | Line 10: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் | * சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|03-Jun-2024, 07:49:22 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:01, 13 June 2024
எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர்.
எருமை ஊர் பற்றி
- மைசூர் நாடும், அதன் தலை நகர் மைசூரும் சங்ககாலத்தில் 'எருமை ஊர்' என்று அழைக்கப்பட்டன.
- எருமையூரன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன்
- ”நாரறி நறவின் எருமையூரன்; வடுகர் பெருமை பேரிசை எருமை” என நக்கீரர் குறிப்பிட்டார்.
- எருமையூரில் அயிரியாறு ஓடியதாக சங்கப்பாடலில் குறிப்புள்ளது.
- எருமைக்குரிய நாடு குடநாடு என்றார் மாமூலனார்
சங்கப் புலவர்
எருமை வெளியனார், எருமை வெளியனார் மகனார் கடலனார் ஆகிய சங்ககாலப் புலவர்களின் பெயரின் முன்னொட்டாக எருமை ஊரின் பெயர் உள்ளது.
உசாத்துணை
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Jun-2024, 07:49:22 IST