தி.வ. தெய்வசிகாமணி: Difference between revisions
(Page Created by ASN) |
(Para Added) |
||
Line 1: | Line 1: | ||
[[File:Thesini.jpg|thumb|தெசிணி]] | [[File:Thesini.jpg|thumb|தெசிணி@தி.வ. தெய்வசிகாமணி]] | ||
தி.வ.தெய்வசிகாமணி (திருப்பாசூர் வச்சிரவேல் தெய்வசிகாமணி) (பிறப்பு: 1930) கவிஞர், எழுத்தாளர். | தி.வ. தெய்வசிகாமணி (திருப்பாசூர் வச்சிரவேல் தெய்வசிகாமணி; தெசிணி) (பிறப்பு: 1930) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர். தமிழக அரசின் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவில் இயக்குநராகப் பணியாற்றினார். வள்ளலார் விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். | ||
== பிறப்பு, கல்வி == | |||
திருப்பாசூர் வச்சிரவேல் தெய்வசிகாமணி என்னும் தி.வ. தெய்வசிகாமணி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூரில், வச்சிரவேல் - அரங்கநாயகி இணையருக்குப் பிறந்தார். திருப்பாசூரிலும் திருவள்ளூரிலும் பள்ளிக்கல்வி கற்றார். பி.காம். (ஆனர்ஸ்), எம்.ஏ.(தமிழ்), பி.எல். பட்டங்களைப் பெற்றார். | |||
== தனி வாழ்க்கை == | |||
தி.வ. தெய்வசிகாமணி மணமானவர். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
தி.வ. தெய்வசிகாமணியின் முதல் கவிதை 1947-ல் வெளியானது. தொடர்ந்து இதழ்களில் பல கவிதைகளை எழுதினார். மரப்புக்கவிதைகளில் தேர்ந்த தி.வ. தெய்வசிகாமணி, ’தெசிணி’ என்ற புனைபெயரில் எழுதினார். சிறார்களுக்காகப் படைப்புகள் பலவற்றை எழுதினார். சங்க இலக்கியங்கள் சிலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். பொருளாதாரம், சமூகம் சார்ந்த சில நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்தார். தி.வ. தெய்வசிகாமணி 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். | |||
தி.வ. தெய்வசிகாமணியின் சான்றுச் சட்டத்தின் முக்கியத்துவத்தைக் கூறும் ‘சான்றுச் சட்டவியல்' ஒரு குறிப்பிடத்தகுந்த சட்டம் சார்ந்த நூலாக அறியப்படுகிறது. | |||
Revision as of 22:13, 14 May 2024
தி.வ. தெய்வசிகாமணி (திருப்பாசூர் வச்சிரவேல் தெய்வசிகாமணி; தெசிணி) (பிறப்பு: 1930) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர். தமிழக அரசின் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவில் இயக்குநராகப் பணியாற்றினார். வள்ளலார் விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
பிறப்பு, கல்வி
திருப்பாசூர் வச்சிரவேல் தெய்வசிகாமணி என்னும் தி.வ. தெய்வசிகாமணி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாசூரில், வச்சிரவேல் - அரங்கநாயகி இணையருக்குப் பிறந்தார். திருப்பாசூரிலும் திருவள்ளூரிலும் பள்ளிக்கல்வி கற்றார். பி.காம். (ஆனர்ஸ்), எம்.ஏ.(தமிழ்), பி.எல். பட்டங்களைப் பெற்றார்.
தனி வாழ்க்கை
தி.வ. தெய்வசிகாமணி மணமானவர்.
இலக்கிய வாழ்க்கை
தி.வ. தெய்வசிகாமணியின் முதல் கவிதை 1947-ல் வெளியானது. தொடர்ந்து இதழ்களில் பல கவிதைகளை எழுதினார். மரப்புக்கவிதைகளில் தேர்ந்த தி.வ. தெய்வசிகாமணி, ’தெசிணி’ என்ற புனைபெயரில் எழுதினார். சிறார்களுக்காகப் படைப்புகள் பலவற்றை எழுதினார். சங்க இலக்கியங்கள் சிலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். பொருளாதாரம், சமூகம் சார்ந்த சில நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்தார். தி.வ. தெய்வசிகாமணி 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
தி.வ. தெய்வசிகாமணியின் சான்றுச் சட்டத்தின் முக்கியத்துவத்தைக் கூறும் ‘சான்றுச் சட்டவியல்' ஒரு குறிப்பிடத்தகுந்த சட்டம் சார்ந்த நூலாக அறியப்படுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.