being created

சந்ரு: Difference between revisions

From Tamil Wiki
Line 59: Line 59:
* [https://www.youtube.com/watch?v=Afu6zHtAHdw&ab_channel=ShrutiTV ஓவியர் சந்ரு பேச்சு | வானம் கலைத்திருவிழா]
* [https://www.youtube.com/watch?v=Afu6zHtAHdw&ab_channel=ShrutiTV ஓவியர் சந்ரு பேச்சு | வானம் கலைத்திருவிழா]
* [https://www.youtube.com/watch?v=MhycLQ1BWjg&ab_channel=KalaignarTVNews சமுதாயத்தை மேலும் கூர்ந்து கவனிக்கச் செய்வதுதான் கலை! - ஓவியர் சந்ரு]
* [https://www.youtube.com/watch?v=MhycLQ1BWjg&ab_channel=KalaignarTVNews சமுதாயத்தை மேலும் கூர்ந்து கவனிக்கச் செய்வதுதான் கலை! - ஓவியர் சந்ரு]
* [https://www.youtube.com/watch?v=jJ7HXBLiecI&ab_channel=prithivirajchennai Chandru sir (Art-politics): ஓவியக்கண்காட்சி]
 


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:13, 6 April 2024

சந்ரு

சந்ரு (ஓவியர் சந்ரு)(சந்திரசேகரன் குருசாமி) (G. Chandrasekaran) (பிறப்பு: மே 4, 1951) ஓவியக்கலைஞர், ஓவியக்கலை ஆசிரியர், சிற்பி, கவிஞர், எழுத்தாளர், செயல்பாட்டாளர். தமிழ்வனம் என்ற திறந்தவெளி அருங்காட்சியகத்தின் நிறுவனர். திருநெல்வேலியிலுள்ள லெனின் சிலை, மதுரை உயர்நீதிமன்றத்திலுள்ள காந்தி சிலை, சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள அம்பேத்கர் சிலை, கல்பாக்கத்தில் உள்ள டாக்டர் ரமணா சிலை போன்ற தமிழகத்தின் பல முக்கியமான இடங்களில் இவரது படைப்புகள் வைக்கப்படுள்ளன. தொடர்ந்து கலை சார்ந்த உரையாடலிலும், கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சந்ருவின் இயற்பெயர் சந்திரசேகரன் குருசாமி. சந்ரு விருதுநகர் மாவட்டத்தில் குருசாமி, மாரியம்மாள் இணையருக்கு மே 4, 1951-ல் பிறந்தார். சென்னை கவின்கலை கல்லூரியில் பட்டம் பெற்றார்.

அமைப்புப் பணிகள்

ஓவியப் பயிற்சிக் கல்லூரி

சந்ரு ஆரம்பகாலத்தில் பல பயிற்சிப் பட்டறைகள் மூலம் மாணவர்களுக்கு ஓவியக்கலைப்பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். பின்னர் திரைப்பட எடிட்டர் பி‌. லெனினுடன் இணைந்து 2015-ல் திருநெல்வேலியில் ஓவியப் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். இது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்துடன் இணைந்து செயல்படும் கல்லூரி. இக்கல்லூரியில் சிற்பக்கலை இரண்டாண்டு படிப்பாக உள்ளது. படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கூடுதலாக படிக்க ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளது.

“இது பத்தாவது முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லாமல் போன மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் திட்டம். அதைக்கடந்து உண்மையிலேயே கலையின் மீது இயற்கையான ஆர்வம் கொண்டவர்களுக்கான கல்லூரியாக இது இருக்கும். இதில் படிப்பென்பது குறைவாகவும் செயல்வழி கற்றல் அதிகமாகவும் இருக்கும்.” என சந்ரு குறிப்பிடுகிறார்.

தமிழ் வனம்

தமிழ் வனம் என்பது திறந்தவெளி அருங்காட்சியகம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடிய தலைவர்களின் சிலைகளைச் செய்யலாம் என சந்ரு இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து செயல்பட்டார். முதல்கட்டமாக வ.உ.சி, பாண்டித்துரைத்தேவர், ஆபிரகாம் பண்டிதர், உமறுப்புலவர், தேவநேயப்பாவணர், விளாத்திகுளம் சுவாமிகள், புதுமைப்பித்தன் ஆகியோரின் சிலைகளைச் செய்தார். ஓவியம், நாடகம், இசை சார்ந்த மாணவர்கள் வந்து தங்கிச் செல்ல ஏதுவான ஒரு தங்கும் விடுதியையும் அமைக்கத் திட்டமிட்டார்.

கலை வாழ்க்கை

சந்ரு ஓவிக்கலை மற்றும் சிற்பக்கலையில் ஈடுபாடு கொண்டவர்.

2023-ல் காட்சிக்கு வைக்கப்பட்ட சந்ரு-வின் ஓவியங்களில் ஒன்று
ஓவியம்

சந்ரு தன்னைத் தொந்தரவு செய்யும் அனைத்தையுமே ஓவியமாகத் தீட்டுபவர். அரசியலையும் கலையும் பிரிக்க இயலாது எனும் கருத்தைக் கொண்டிருப்பவர். முதன்முதலாக தன் ஓவியங்களை கல்லூரி காலத்தில் காட்சிக்கு வைத்தார். அதன்பின் 2023-ல் தான் அவரின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வந்தன. நவீன கலைக்கூடங்கள், கலை விற்பனர்கள், கலை விமர்சகர்கள் ஆகியோரின் லாபம் நோக்கின் மீது சந்ரு விமர்சனப்போக்கு கொண்டிருந்ததே இத்தகைய இடைவெளிக்குக் காரணம்.

2023 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் "ART-POLITICS" என்ற தலைப்பில் சரண்ராஜ் க்யூரேட்டராக இருந்து தக்சின சித்ராவில் இவரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இது இவரின் இரண்டாவது ஓவியக்காட்சி. பல வகையான வெளிப்பாட்டு ஊடகங்களை சந்ரு பயன்படுத்தினாலும் கோட்டோவியங்கள் வழியாக அதிகம் வெளிப்படுபவர்.

பார்க்க: ART-POLITICS கண்காட்சி: தக்‌ஷினசித்ரா அருங்காட்சியகம்

சிலை படைப்புகள்

சென்னை நகரின் சாலை ரவுண்டானாக்களில் வைக்க புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மரப்பாச்சி, தெருக்கூத்து, தொழிலாளர் பிரட்சனை ஆகிய சிலைகள் செய்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பகவதியின் மார்பளவு சிலை, சித்தா ஆராய்ச்சி மையத்திலுள்ள அயோத்திதாச பண்டிதரின் மார்பளவு சிலை, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலுள்ள டாக்டர் ரமணன் மார்பளவு சிலை, மதுரை உயர்நீதிமன்றத்திலுள்ள அம்பேத்கர் முழு உருவம், திருநெல்வேலியில் உள்ள லெனின் சிலை ஆகியவை இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.

இலக்கிய வாழ்க்கை

சந்ரு சிறுகதைகள், கவிதைகள், கலை மற்றும் பாரம்பரியம் குறித்தான ஆய்வு நூல்கள் எழுதினார். தஞ்சை மாநாட்டில் புத்தகம் வெளியிடுவதற்கான ஆலோசகராக செயல்பட்டார். இவர் எழுதிய ”திருத்தப்பட்ட பதிப்பு” என்னும் நூல் அவருடைய ஓவியங்களைப் பற்றிய உதிரிக் கருத்துக்களும் ஓவியத்துக்கான முன்குறிப்புகளும் கொண்டது.

மதிப்பீடு

”ஓவியர் சந்துருவின் ”திருத்தப்பட்ட பதிப்பு” என்னும் நூல் ஓவியங்களின் இடைவெளியை நிரப்புவது. அவருடைய ஓவியங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு மேலதிக துணை. அந்நூலில் அவர் போகிற போக்கில் பல குறிப்புகளை எழுதிச் செல்கிறார். எல்லாமே கிறுக்கல்கள். ஓவியக் கிறுக்கல்கள். மொழிக் கிறுக்கல்கள். அவருடைய உள்ளம் செயல்படுவதை காட்டுவது இந்நூல். அவருடைய ஆழுளம் பதிவானது. இந்த நூலுக்கு இணையான நூல்களை டாவின்சி போன்றவர்கள் வரைந்துள்ளனர். அதில் ஏராளமான ஓவியக்கிறுக்கல்கள் உள்ளன. அவர் எண்ணிய ஓவியங்கள், பின்னர் வரைந்த ஓவியங்கள், அவருடைய கனவுகள். குழந்தைத்தனமாக வெளிப்படும் அவருடைய ஆழ்மனத்தின் சிதைவும் சிதறலும். ஓவியம் வரைந்த பின் ஓவியர் தூங்கும்போது உளறுவதுபோன்ற நூல். அதைப்போன்ற ஒன்று சந்துருவின் நூல்.” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

விருதுகள்

  • 1993-ல் கலாமேளாவில் சிறந்த மேடை வடிவமைப்புக்கான தேசிய அளவிலானா விருது
  • 1996-ல் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச பனி சிற்ப திருவிழாவில் இரண்டாம் பரிசு
  • 1997-ல் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா மற்றும் வர்த்தக விழாவில் முதல் பரிசு
  • 2008-ல் மக்கள் தொலைக்காட்சியின் “தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்”

நூல் பட்டியல்

  • திருத்தப்பட்ட பதிப்பு
  • செப்பாடி தப்பாடி (தற்கால கலை குறித்த விமர்சன புத்தகம்)
  • விண்வெளியில் (நிர்வாண வரைபடங்களைப் பற்றிய புத்தகம்)
  • ஓவியம் என்றொரு மேஜிக் (ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்)
  • அவன், இவன், வுவன் (சிறுகதைகள்)
கவிதைத் தொகுப்பு
  • சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள் (வம்சி பதிப்பகம்)
  • சந்ருவின் கவிதை

உசாத்துணை

இணைப்புகள்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.