being created

சந்ரு: Difference between revisions

From Tamil Wiki
Line 77: Line 77:
* [http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17969&id1=4&issue=20210411 தமிழ் ஆளுமைகளுக்கான தாமிரபரணி நதிக்கரையில் ஓர் அருங்காட்சியகம்: ஓவியர் சந்ரு]
* [http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17969&id1=4&issue=20210411 தமிழ் ஆளுமைகளுக்கான தாமிரபரணி நதிக்கரையில் ஓர் அருங்காட்சியகம்: ஓவியர் சந்ரு]
* [https://www.youtube.com/watch?v=Afu6zHtAHdw&ab_channel=ShrutiTV ஓவியர் சந்ரு பேச்சு | வானம் கலைத்திருவிழா]
* [https://www.youtube.com/watch?v=Afu6zHtAHdw&ab_channel=ShrutiTV ஓவியர் சந்ரு பேச்சு | வானம் கலைத்திருவிழா]
* சமுதாயத்தை மேலும் கூர்ந்து கவனிக்கச் செய்வதுதான் கலை! - ஓவியர் சந்ரு




{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:45, 5 April 2024

சந்ரு

சந்ரு (ஓவியர்)(சந்திரசேகரன் குருசாமி) கலைஞர், ஓவியக்கலை ஆசிரியர், செயல்பாட்டாளர். தமிழ்வனம் என்ற திறந்தவெளி அருங்காட்சியகத்தின் நிறுவனர்.

வாழ்க்கைக் குறிப்பு

தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சின்ன சங்கரன் கோவிலில் தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் அவரது "குருவனம்" தோட்டம் பரந்து விரிந்திருக்கிறது.


ந்திரசேகரன் குருசாமி என்பவர் கவிஞர், ஓவியர், எழுத்தாளர் மற்றும் சிற்பி என பன்முகம் கொண்டவர். இவரை ஓவியர் சந்ரு, சந்ரு மாஸ்டர் என்றும் அழைப்பார்கள். மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை, கல்பாக்கத்தில் உள்ள டாக்டர் ரமணா சிலை போன்ற தமிழகத்தின் பல இடங்களில் இவரது படைப்புகள் வைக்கப்படுள்ளன.

இவர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை கவின்கலை கல்லூரியில் படித்தார்.

வாழ்க்கை வரலாறு சந்திரசேகர் விருதுநகரில் குருசாமி- மாரியம்மாள் தம்பதிகளுக்கு 04 மே 1951 இல் மகனாகப் பிறந்தார்.

ஓவியப் பயிற்சிக் கல்லூரி 2015 இல் நெல்லையில் ஓவியப் பயிற்சிக் கல்லூரியை தொடங்கினார். இக்கல்லூரி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்துடன்ய இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரி திரைப்பட எடிட்டர் பி‌. லெனின் அவர்களுடன் இணைந்து சந்ரு உருவாக்கியதாகும். [1]

இக்கல்லூரியில் சிற்பக்கலை இரண்டாண்டு படிப்பாக உள்ளது. படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பட்டயச் சான்றிதழ் தரப்படுகிறது. சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கூடுதலாக படிக்க ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளது.

சிலை படைப்புகள் சென்னை நகரின் சாலை ரவுண்டானாக்களில் வைக்க புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மரப்பாச்சி, தெருக்கூத்து, தொழிலாளர் பிரட்சனை ஆகிய சிலைகள் செய்துள்ளார்.

சிலைகள் பகவதி மார்பளவு சிலை, உச்ச நீதிமன்ற நீதிபதி, சோகோ டிரஸ்ட் - மதுரை. மகாத்மா காந்தி முழு உருவச் சிலை - மதுரை உயர்நீதிமன்றத்தில் முழு படம் அயோத்திதாச பண்டிதரின் மார்பளவு சிலை - (சித்தா ஆராய்ச்சி மையம்) டாக்டர் ரமணன் மார்பளவு சிலை, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் அம்பேத்கர் முழு உருவம், உயர்நீதிமன்றம் மதுரை. லெனின் சிலை சந்ரு உருவாக்கிய லெனின் சிலை திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ளது.[2] திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு வருத்தம் கொண்ட நண்பர்களுக்காக,. லெனின் சிலையை சந்ரு உருவாக்கினார். இச்சிலையை கண்டு நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி போன்றோர் பாராட்டியுள்ளனர்.

புத்தகங்கள் செப்பாடி தப்பாடி - தற்கால கலை குறித்த விமர்சன புத்தகம் விண்வெளியில் - நிர்வாணத்தைப் பற்றிய வரைபடங்களைப் பற்றிய புத்தகம் சந்ருவின் கவிதை - கவிதை புத்தகம் ஓவியம் என்றொரு மேஜிக் - ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள் அவன், இவன், வுவன் - சிறுகதைகள் தஞ்சை மாநாடு - புத்தகம் வெளியிடுவதற்கான ஆலோசகராக செயல்பட்டார். சிறுகதைகள், கவிதைகள் புத்தங்களும், கலை மற்றும் பாரம்பரியம் குறித்தான ஆய்வு அறிக்கைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

விருதுகள் முதற்பரிசு - 1993 இல் தேசிய அளவிலானா விருது - சிறந்த மேடை வடிவமைப்பு - கலாமேளா இரண்டாம் பரிசு - 1996 இல் ஜப்பானில் சர்வதேச பனி சிற்ப திருவிழா சிறுகதை விருது - (என்.எல்.சி 2007) நெய்வேலி முதல் விருது - 1997 இல் கொழும்பில் தெற்காசிய சுற்றுலா மற்றும் வர்த்தக விழா தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர் 2008 (மக்கள் தொலைக்காட்சி)

தனிவாழ்க்கை

கலை வாழ்க்கை

தமிழ்நாட்டில் முதல் சிற்பக்கலை கல்லூரி துவங்கியுள்ளார் சந்ரு மாஸ்டர். சென்னை ஓவியக் கலை கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற சந்ரு தற்போது நெல்லையில் வசிக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஓவியப் பயிற்சிக் கல்லூரியை நெல்லையில் பிரபல திரைப்பட எடிட்டர் பி.லெனின் உடன் இணைந்து துவங்கிய சந்ரு, இந்தக் கல்லூரியை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையுடன் இணைத்துள்ளார். இந்தக் கல்லூரியின் மாணவர்கள் உருவாக்கும் கலைப்பொருள்கள் விற்பனைக்கு இடம் தேர்வு செய்துள்ளதாகவும்

தமிழ்நாட்டில் இரண்டு கல்லூரிகளில் மட்டுமே சிற்பக்கலை ஒரு பாடமாக உள்ளது. அதற்கு அடுத்து எங்களின் கல்லூரியில் மட்டுமே அதைப் பாடமாக வைத்துள்ளோம். ஓவியக்கலை பல்வேறு தனியார் நிறுவனங்கள் சொல்லிக்கொடுத்தாலும் சிற்பக்கலையை கற்பிப்பதில்லை. முதன்முதலாகத் தனியார் கல்லூரியான அவ்வையில் மட்டுமே சிற்பக்கலை இடம் பெற்றுள்ளது

இது பத்தாவது முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க வாய்ப்பில்லாமல் போன மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதான் திட்டம். அதைக்கடந்து உண்மையிலேயே கலையின் மீது இயற்கையான ஆர்வம் கொண்டவர்களுக்கான கல்லூரியாக இது இருக்கும். இதில் படிப்பென்பது குறைவாகவும் செயல்வழி கற்றல் அதிகமாகவும் இருக்கும்.

அமைப்புச் செயல்பாடுகள்

தமிழ் வனம்

தமிழ் வனம் என்பது திறந்தவெளி அருங்காட்சியகம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடிய தலைவர்களின் சிலைகளைச் செய்யலாம் என சந்ரு இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து செயல்பட்டார். முதல்கட்டமாக வ.உ.சி, பாண்டித்துரைத்தேவர், ஆபிரகாம் பண்டிதர், உமறுப்புலவர், தேவநேயப்பாவணர், விளாத்திகுளம் சுவாமிகள், புதுமைப்பித்தன் ஆகியோரின் சிலைகளைச் செய்தார். ஓவியம், நாடகம், இசை சார்ந்த மாணவர்கள் வந்து தங்கிச் செல்ல ஏதுவான ஒரு தங்கும் விடுதியையும் அமைக்கத் திட்டமிட்டார்.

ilakiya idam

ஓவியர் சந்துரு எழுதிய ’திருத்தப்பட்ட பதிப்பு ‘என்னும் நூல். அவருடைய ஓவியங்களைப் பற்றிய உதிரிக் கருத்துக்களும் ஓவியத்துக்கான முன்குறிப்புகளும் கொண்டது.

இந்நூல் சந்துருவின் ஓவியங்களின் இடைவெளியை நிரப்புவது. அவருடைய ஓவியங்களை புரிந்துகொள்வதற்கான ஒரு மேலதிக துணை. அந்நூலில் அவர் போகிற போக்கில் பல குறிப்புகளை எழுதிச் செல்கிறார்.எல்லாமே கிறுக்கல்கள். ஓவியக் கிறுக்கல்கள். மொழிக் கிறுக்கல்கள்.அவருடைய உள்ளம் செயல்படுவதை காட்டுவது இந்நூல். அவருடைய ஆழுளம் பதிவானது.

இந்த நூலுக்கு இணையான நூல்களை டாவின்சி போன்றவர்கள் வரைந்துள்ளனர். அதில் ஏராளமான ஓவியக்கிறுக்கல்கள் உள்ளன. அவர் எண்ணிய ஓவியங்கள், பின்னர் வரைந்த ஓவியங்கள்,அவருடைய கனவுகள். குழந்தைத்தனமாக வெளிப்படும் அவருடைய ஆழ்மனத்தின் சிதைவும் சிதறலும். ஓவியம் வரைந்த பின் ஓவியர் தூங்கும்போது உளறுவதுபோன்ற நூல். அதைப்போன்ற ஒன்று சந்துருவின் நூல்.

விருதுகள்

நூல் பட்டியல்

  • திருத்தப்பட்ட பதிப்பு
கவிதைத் தொகுப்பு
  • சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள் (வம்சி பதிப்பகம்)


உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.