under review

சம்சுனா ஆதம்பாவா: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: {{ready for review}})
Line 20: Line 20:




{{ready for review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:48, 25 February 2024

சம்சுனா ஆதம்பாவா (பிறப்பு: ஜூலை 12, 1980) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், நாடகக் கலைஞர், பாடலாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சம்சுனா ஆதம்பாவா இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் ஜூலை 12, 1980-ல் பிறந்தார். சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் பள்ளிக்கல்வி கற்றார்.

நாடக வாழ்க்கை

"மாப்பிள்ளைச் சந்தை" என்ற நாடகத்தை தயாரித்து சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய இலக்கிய மன்றத்தில் அரங்கேற்றினார். "மாறியது நெஞ்சம்", "வரிக்கொள்ளை" போன்ற நாடகங்களைத் தயாரித்து போட்டி நிகழ்ச்சிகளில் அரங்காற்றுகை செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார், பாடினார். வில்லுப்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

சம்சுனா ஆதம்பாவா ”உன் பெயர் குறிக்கும் எழுத்துக்களில்” கவிதை தொகுப்பை 2012-ல் வெளியிட்டார். ஒன்பதாம் வகுப்பு முதல் பாடல்கள் இயற்றினார். கவிதை, விவாதம், அறிவிப்பு, ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டார். மாணவர்களின் கற்றலுக்காக ”இலக்கிய இதயங்கள்”, ”பதமும் பொருளும்” நூலை வெளியிட்டுளளார். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் ”அறுவடை” நூலின் நூலாசியர். அதன் வரவேற்பு கீத பாடலாசிரியர்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • உன் பெயர் குறிக்கும் எழுத்துக்களில்
பிற
  • இலக்கிய இதயங்கள்
  • பதமும் பொருளும்
  • அறுவடை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.