under review

தாண்டவமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 1: Line 1:
தாண்டவமூர்த்தி (தாண்டவராய ஸ்வாமிகள்) (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், துறவி. கைவல்ய நவநீதம் என்ற வேதாந்த மெய்யியல் நூலை எழுதினார்.
தாண்டவமூர்த்தி (தாண்டவராய ஸ்வாமிகள்) (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், துறவி. கைவல்ய நவநீதம் என்ற வேதாந்த மெய்யியல் நூலை எழுதினார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
தாண்டவமூர்த்தி நன்னிலத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என [[கா.சுப்ரமணிய பிள்ளை|கா. சுப்பிரமணியபிள்ளை]] கூறினார்.  தாண்டவமூர்த்தி நாராயணசாமி தேசிகரின் மாணவர். பதிசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். துறவறம் பெற்று தாண்டவராய ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். தமிழ், சமஸ்கிருதத்தில் புலமை உடையவர்.
தாண்டவமூர்த்தி நன்னிலத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என [[கா.சுப்ரமணிய பிள்ளை|கா. சுப்பிரமணியபிள்ளை]] கூறினார்.  தாண்டவமூர்த்தி நாராயணசாமி தேசிகரின் மாணவர். பதிசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். துறவறம் பெற்று தாண்டவராய ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். தமிழ், சமஸ்கிருதத்தில் புலமை உடையவர்.

Latest revision as of 11:15, 24 February 2024

தாண்டவமூர்த்தி (தாண்டவராய ஸ்வாமிகள்) (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், துறவி. கைவல்ய நவநீதம் என்ற வேதாந்த மெய்யியல் நூலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தாண்டவமூர்த்தி நன்னிலத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என கா. சுப்பிரமணியபிள்ளை கூறினார். தாண்டவமூர்த்தி நாராயணசாமி தேசிகரின் மாணவர். பதிசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். துறவறம் பெற்று தாண்டவராய ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். தமிழ், சமஸ்கிருதத்தில் புலமை உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

தாண்டவமூர்த்தி கைவல்ய நவநீதம் எனும் நூலை எழுதினார். கைவல்ய நவநீதம் குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான உரையாடலாக அமைந்துள்ளது. இந்நூலில் ஏழு(7) பாயிரங்கள், தத்துவ விளக்கப்படலத்தில் 101 பாடல்கள், சந்தேகம் தெளிதற் படலத்தில் 185 பாடல்கள் ஆக மொத்தம் இருநூற்று தொண்ணூற்று மூன்று(293) பாடல்கள் உள்ளன. இதற்குப் பிறைசை அருணாசல சுவாமி உரை எழுதினர்.

பாடல் நடை

  • கைவல்ய நவநீதம்

பொன்னில மாத ராசை
பொருந்தினர் பொருந்தா ருள்ளந்
தன்னிலந் தரத்திற் சீவ
சாட்சிமாத் திரமாய் நிற்கும்
எந்நிலங் களினு மிக்க
வெழுநில மவற்றின் மேலாம்
நன்னில மருவு மேக
நாயகன் பதங்கள் போற்றி

நூல் பட்டியல்

உசாத்துணை


✅Finalised Page