பசுபதீஸ்வரர் கோயில்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: ) |
||
Line 12: | Line 12: | ||
==தொன்மம்== | ==தொன்மம்== | ||
*குரு பகவான் சிவபெருமானை வணங்கி அருள் பெற்ற நான்கு தலங்களில் ஒன்று. | *குரு பகவான் சிவபெருமானை வணங்கி அருள் பெற்ற நான்கு தலங்களில் ஒன்று. | ||
*சிவபெருமான் பார்வதி தேவியை பூமியில் பசு வடிவில் பிறப்பதாக ஒருமுறை சபித்தார். அவள் மன்னிப்புக் கேட்டபோது, | *சிவபெருமான் பார்வதி தேவியை பூமியில் பசு வடிவில் பிறப்பதாக ஒருமுறை சபித்தார். அவள் மன்னிப்புக் கேட்டபோது, சிவபெருமான் அவளிடம் இந்த சாபத்தை சரியான நேரத்தில் மற்றும் இடத்தில் விடுவிப்பதாக கூறினார். பார்வதி தேவி பசுவின் உருவில் பூமி முழுவதும் சுற்றித் திரிந்தாள். இந்த சாபத்தால் கோபமடைந்து பல இடங்களில் தன் கொம்புகளால் பூமியைக் கிழித்தாள். ஒரு இடத்தில் அவளுடைய கொம்புகள் பூமிக்கு அடியில் இருந்த ஒரு லிங்கத்தின் மீது மோதியபோது அது பிளந்து இரத்தம் கசிந்தது. ரத்தத்தைப் பார்த்த மாடு ரத்தக் கசிவை நிறுத்த பாலை ஊற்றியது. பசு பால் கறக்க ஆரம்பித்தவுடன் சிவன் அதன் முன் தோன்றி சாப விமோசனம் அளித்தார். அது மீண்டும் பார்வதி தேவியாக மாறியது. இந்த லிங்கத்தின் மீது வடு அடையாளத்தை இன்றும் காணலாம். எனவே இங்குள்ள இறைவன் "பசுபதீஸ்வரர்" என்று அழைக்கப்பட்டார். இந்த கோவிலின் தீர்த்தம் க்ஷீர புஷ்கரிணி என அழைக்கப்பட்டது. பார்வதி தேவி இங்கு காமதேனு வடிவில் வணங்கப்படுகிறார். மேலும் இந்த இடம் "கொண்டீச்சரம்" (கொண்டி = கொடூரமான பசு) என அழைக்கப்பட்டது. | ||
*அகஸ்தியர் இத்தலத்திற்குச் சென்றபோது, | *அகஸ்தியர் இத்தலத்திற்குச் சென்றபோது, அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் வடிவில் வந்து அவரைக் குணப்படுத்தியதாக நம்பிக்கை உள்ளது. | ||
==கோவில் பற்றி== | ==கோவில் பற்றி== |
Revision as of 07:49, 17 February 2024
பசுபதீஸ்வரர் கோயில் திருகொண்டீச்சரத்தில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற தலம். இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இடம்
பசுபதீஸ்வரர் கோயில் திருகொண்டீச்சரம் நன்னிலத்திலிருந்து சன்னநல்லூர் (தூத்துக்குடி கிராமத்திற்கு அருகில் உள்ள மாற்றுப்பாதையில்) செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து நாகூர் செல்லும் பாதையில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் நன்னிலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருத்துறைப்பூண்டி (நன்னிலம்) வழியாக இக்கோயிலை அடையலாம்.
வரலாறு
பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாற்றுப் பெயர்கள் வில்வாரண்யம், திருக்கொண்டீச்சரம். திருக்கண்டீஸ்வரம் என அழைக்கப்படுகிறது. பண்டைய காலங்களில், இந்த பகுதி வில்வ மரங்களால் அடர்த்தியாக மூடப்பட்டிருந்தது. அதனால் இத்தலம் வில்வாரண்யம் என்று பெயர் பெற்றது.
கல்வெட்டு
பசுபதீஸ்வரர் கோயிலில் விஜயநகர மன்னர் வீர கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது.
தொன்மம்
- குரு பகவான் சிவபெருமானை வணங்கி அருள் பெற்ற நான்கு தலங்களில் ஒன்று.
- சிவபெருமான் பார்வதி தேவியை பூமியில் பசு வடிவில் பிறப்பதாக ஒருமுறை சபித்தார். அவள் மன்னிப்புக் கேட்டபோது, சிவபெருமான் அவளிடம் இந்த சாபத்தை சரியான நேரத்தில் மற்றும் இடத்தில் விடுவிப்பதாக கூறினார். பார்வதி தேவி பசுவின் உருவில் பூமி முழுவதும் சுற்றித் திரிந்தாள். இந்த சாபத்தால் கோபமடைந்து பல இடங்களில் தன் கொம்புகளால் பூமியைக் கிழித்தாள். ஒரு இடத்தில் அவளுடைய கொம்புகள் பூமிக்கு அடியில் இருந்த ஒரு லிங்கத்தின் மீது மோதியபோது அது பிளந்து இரத்தம் கசிந்தது. ரத்தத்தைப் பார்த்த மாடு ரத்தக் கசிவை நிறுத்த பாலை ஊற்றியது. பசு பால் கறக்க ஆரம்பித்தவுடன் சிவன் அதன் முன் தோன்றி சாப விமோசனம் அளித்தார். அது மீண்டும் பார்வதி தேவியாக மாறியது. இந்த லிங்கத்தின் மீது வடு அடையாளத்தை இன்றும் காணலாம். எனவே இங்குள்ள இறைவன் "பசுபதீஸ்வரர்" என்று அழைக்கப்பட்டார். இந்த கோவிலின் தீர்த்தம் க்ஷீர புஷ்கரிணி என அழைக்கப்பட்டது. பார்வதி தேவி இங்கு காமதேனு வடிவில் வணங்கப்படுகிறார். மேலும் இந்த இடம் "கொண்டீச்சரம்" (கொண்டி = கொடூரமான பசு) என அழைக்கப்பட்டது.
- அகஸ்தியர் இத்தலத்திற்குச் சென்றபோது, அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் வடிவில் வந்து அவரைக் குணப்படுத்தியதாக நம்பிக்கை உள்ளது.
கோவில் பற்றி
- மூலவர்: பசுபதீஸ்வரர்
- அம்பாள்: சாந்த நாயகி
- தீர்த்தம்: க்ஷீர புஷ்கரணி
- ஸ்தல விருட்சம்: வில்வம் மரம்
- பதிகம்: திருநாவுக்கரசர் பாடல்
- இருநூற்று எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
- எழுபத்தியிரண்டாவது சிவஸ்தலம்
- இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
கோவில் அமைப்பு
பசுபதீஸ்வரர் கோயில் முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் உள்ளது. கிழக்கு நோக்கிய இந்த கோவிலின் பிரதான கோபுரத்திற்கு அடுக்குகள் இல்லை. கோபுரத்தின் இடத்தில் சிவன், விநாயகர், முருகன் மற்றும் பார்வதி தேவியின் உருவம் கொண்ட சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலின் நுழைவாயிலில் அழகிய வளைவு உள்ளது. ஒற்றை நடைபாதை உள்ளது. கொடி கம்பம் இல்லை. இந்தக் கோயிலின் குளம் கோயிலைச் சுற்றி அரை வட்ட வடிவில் உள்ளது. இக்கோயிலின் முன் மண்டபம் வௌவால் நெற்றிப் பொட்டு போன்று வடிவமைக்கப்பட்டது.
கருவறையின் கோபுரத்தில், சிவலிங்கத்தின் மீது பசு தனது பாலை வார்ப்பது போன்ற சிற்பம் உள்ளது. மகாலட்சுமி தேவியின் சகோதரியான ஜ்யேஷ்டா தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இவளை வழிபடுவதன் மூலம், பக்தர்களுக்கு திருமண வரம், குழந்தை வரம் கிடைப்பதாகவும், பில்லி, சூன்யம், ஏவல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதாகவும் நம்பிக்கை உள்ளது.
சிற்பங்கள்
சிவன், பார்வதி தேவியின் சன்னதிகள் உள்ளன. மாடவீதிகளில் விநாயகர், முருகன், துணைவியருடன் பிரம்மபுரீஸ்வரர், அகஸ்தீஸ்வரர், விசாலாக்ஷியுடன் காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, ஜேஷ்டாதேவி, சண்டிகேஸ்வரர், பைரவர், நாகர், திருஞானசம்பந்தர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், நவக்கிரகம் ஆகியோரின் சிலைகள் உள்ளன. கருவறைக்கு எதிரே உள்ள பிரதான மண்டபத்தில் தேவார நால்வர், இரண்டு விநாயகர் சிலைகள் உள்ளன. மூலஸ்தானத்தில் திருநாவுக்கரசர் சிலை உள்ளது. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சிலைகள் உள்ளன.
கருவறைக்குப் பின்னால் உள்ள லிங்கோத்பவரின் இருபுறமும், மகாவிஷ்ணு, பிரம்மன் வழிபடும் தோரணையில் சிலைகள் உள்ளன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் சன்னதியும் உள்ளன. நவகிரகத்தில் மற்ற அனைத்து விக்ரகங்களும் சூரியனை நோக்கியவாறு உள்ளன. வொவ்வால் நெத்தி மண்டபத்தில் அபத்சஹாய மகரிஷி, பார்வதி தேவி, பசு வடிவில் இறைவனையும், மூன்று கால்களுடன் ஜுரகேஸ்வரரையும் வணங்கும் திருவுருவங்கள் உள்ளன.
ஓவியங்கள்
ஸ்தல புராணத்தை விளக்கும் ஓவியங்கள் பிரதான மண்டபத்தில் உள்ளன.
சிறப்புகள்
- இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.
- காய்ச்சலால் அவதிப்படும் பக்தர்கள் இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வெந்நீரில் அபிஷேகம் செய்து, பின்னர் சூடான மிளகுத்தூள் ரசம் கொண்டு சமைத்த அரிசியை பிரசாதமாக வழங்கலாம். இவ்வாறு செய்வதால் எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும் என்பது நம்பிக்கை.
- சரம் என முடிவடையும் ஏழு சிவன் கோவில்களில்(முண்டீச்சரம், பட்டேஸ்வரம், நறையூர் சித்தீச்சரம், வர்தமானீச்சரம், ராமதீச்சரம், கேதீச்சரம்) ஒன்று.
திறந்திருக்கும் நேரம்
- காலை 7-12
- மாலை 4-8:30
பண்டிகைகள்
- தீர்த்தவாரி திருவிழா கார்த்திகையில் ஒரு வியாழன் அன்று எமகண்டத்தில் (காலை: 6-7:30) கொண்டாடப்படும்.
- கார்த்திகையில் வரும் வியாழன் கிழமைகள் முக்கியமானதாகக் கருதப்பட்டு இந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
- ஆனி திருமஞ்சனம் ஆனியில்
- ஆடியில் ஆடி பூரம்.
- ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
- புரட்டாசியில் நவராத்திரி
- ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம்.
- கார்த்திகையில் திரு கார்த்திகை
- மார்கழியில் திருவாதிரை
- தையில் மகர சங்கராந்தி, தைபூசம்
- மாசியில் சிவராத்திரி
- பிரதோஷமும் தொடர்ந்து நடைபெறும்
உசாத்துணை
✅Finalised Page