பிரபுத்தபாரதம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:PrabuddhaBharatha.jpg|thumb|பிரபுத்தபாரதம்]]
[[File:PrabuddhaBharatha.jpg|thumb|பிரபுத்தபாரதம் முதல் இதழ்]]
[[File:Prabuddha Bharatha May 2015.jpg|thumb|பிரபுத்தபாரதம் மே 2015]]
[[File:Prabhuuu.jpg|thumb|பிரபுத்தபாரதம் 125 ஆண்டு விழா மலர்]]
பிரபுத்தபாரதம் (The Prabuddha Bharata) (1896) சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தக் கருத்துக்களை பரப்பும்பொருட்டு சென்னையில் இருந்து நடத்தப்பட்ட தத்துவ இதழ். பின்னர் இமாச்சலப்பிரதேசம் அல்மோராவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ் இந்தியாவின் மிகத்தொன்மையான அச்சிதழ்களில் ஒன்று.   
பிரபுத்தபாரதம் (The Prabuddha Bharata) (1896) சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தக் கருத்துக்களை பரப்பும்பொருட்டு சென்னையில் இருந்து நடத்தப்பட்ட தத்துவ இதழ். பின்னர் இமாச்சலப்பிரதேசம் அல்மோராவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ் இந்தியாவின் மிகத்தொன்மையான அச்சிதழ்களில் ஒன்று.   


Line 21: Line 23:


== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
பிரபுத்தபாரதம் முதல் இரண்டு ஆண்டுகளின் இதழ்களில் உள்ளடக்கம் ராஜம் ஐயரால் வடிவமைக்கப்பட்டது. ஆசிரியர் குறிப்பு பகுதியில் வேதாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் கதைகள் அளிக்கப்பட்டன. தலையங்கமாக மெய்ஞானச் செய்திகள் இருந்தன. பரம்பொருளைத் தேடிச்சென்றோர் என்னும் தலைப்பில் பக்தர்கள், ஞானிகள் பற்றிய குறிப்புகள் அளிக்கப்பட்டன. பகவத்கீதை விளக்கம், சிலைவழிபாட்டின் உட்பொருட்களும், வேதாந்த விளக்கக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. வாஸுதேவ சாஸ்திரி என்னும் தொடர்கதையும் பல்வேறு சிறிய கதைகளும் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலானவை ராஜம் ஐயராலேயே வெவ்வேறு பெயர்களில் எழுதப்பட்டன. அவர் எழுதிய வேதாந்தக் குறிப்புகள் வேதாந்த சஞ்சாரம் (Rambles in Vedanta) என்ற பேரில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
== மறுவெளியீடு ==
பி.ஆர்.ராஜம் ஐயர் 1898ல் மறைந்தார். இறுதி இதழில் ‘நிதிசார்ந்து எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும் இதன் ஆசிரியராக இருந்த பி.ஆர்.ராஜம் ஐயரின் மறைவால் இதழ் இத்துடன் நிறுத்தப்படுகிறது’ என்னும் அறிவிப்பு இருந்தது.
1897 ல் இந்தியா வந்த சுவாமி விவேகானந்தர் இமாச்சலப்பிரதேசம் அல்மோராவுக்குச் சென்றுகொண்டிருந்தார். அல்மோராவிலிருந்து பிரபுத்தபாரதம் என்னும் கவிதையை 1898 ஆகஸ்ட் மாதம் எழுதினார். இதழை மீண்டும் தொடங்கும்படி அவர் தன் ஆங்கிலேயச் சீடரான காப்டன் ஜே.எச்.சேவியரிடம் கேட்டுக்கொண்டார். கல்கத்தாவிலிருந்து அச்சுப்பொருட்களை வாங்கிக்கொண்டு அல்மோரா வந்த சேவியர் 1898 ஆகஸ்டில் பிரபுத்தபாரதம் இதழை மீண்டும் தொடங்கினார். விவேகானந்தரின் மாணவர் சுவாமி ஸ்வரூபானந்தா இதழாசிரியராகப் பொறுப்பேற்றார்.
பிரபுத்தபாரதம் இதழ் 1899 மார்ச் மாதம் புதியதாகத் தொடங்கப்பட்ட அத்வைத ஆசிரமம் மாயாவதிக்கு மாற்றப்பட்டது. 1924ல் மாயாவதியில் இருந்து கல்கத்தாவுக்கு இதழின் வெளியீட்டகம் இடமாற்றம் செய்யப்பட்டது.  இப்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
== உள்ளடக்கம் ==
பிரபுத்தபாரதம் இந்தியாவில் ஒன்றரை நூற்றாண்டுக்காலம் நிகழ்ந்த வேதாந்த, கலாச்சார விவாதங்களின் மாபெரும் ஆவணப்பதிவாக உள்ளது. கார்ல் யுங் தியானம் பற்றி எழுதிய கட்டுரை அதில் வெளியானது. இந்தியாவின் முதன்மையான தத்துவ அறிஞர்களின் விரிவான கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
== ஆவணம் ==
2010 ல் பிரபுத்தபாரதம் இதழின் 114 ஆண்டு இதழ்கள் (1896- 2009)  அடங்கிய ஆவணக்காப்பகம் உருவாக்கப்பட்டது. இதழ்கள் மின்வடிவில் டிவிடியாக வெளியிடப்பட்டன.
பிரபுத்தபாரதம் இணைய ஆவணக்காப்பகம் 2021ல் தொடங்கப்பட்டது. ( [https://prabuddhabharataarchives-advaitaashrama-org.translate.goog/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc இணைய ஆவணக்காப்பகம் இணைப்பு])
பிரபுத்தபாரதம் 125 ஆவது ஆண்டுவிழா 2021ல் மாயாவதியில் கொண்டாடப்பட்டது.


== ஆசிரியர்கள் ==
== ஆசிரியர்கள் ==
Line 178: Line 198:
|சுவாமி வீரானந்தா
|சுவாமி வீரானந்தா
|}
|}
இலக்கிய இடம்
 
== அறிவியக்க இடம் ==
பிரபுத்தபாரதம் இதழ் உலகில் தொடர்ச்சியாக நீண்டகாலம் வெளிவரும் இதழ்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மிகத்தொன்மையான இதழ் அது எனப்படுகிறது.
 
பிரபுத்தபாரதம்  இந்திய சிந்தனையில் மூன்றுவகைகளில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியது.
 
அ. சுவாமி விவேகானந்தரால் முன்னெடுக்கப்பட்ட நவவேதாந்தக் கருத்துக்கள் இந்தியாவில் வேரூன்றிப்பரவ விரிவான அறிவுக்களத்தை அது அமைத்தது. நவவேதாந்தம் சார்ந்து விவேகானந்த மரபிலிருந்து கிளைத்த பிற அமைப்புகள் அனைத்துக்குமே பிரபுத்தபாரதத்தின் அறிவுத்தொகையே ஆதாரமாக அமைந்தது. இத்தளத்தின் முதன்மை அறிஞர்கள் அதில் தொடர்ச்சியாக எழுதினர்.
 
ஆ. இந்திய நவதேசிய அடையாளத்தை இந்தியமரபில் இருந்து தொகுத்து உருவாக்கிக் கொள்ளுவதற்கு பிரபுத்தபாரத இதழ் பெரும்பங்களிப்பை ஆற்றியது. இந்தியதேசிய உருவகத்தை நவீன சிந்தனைகளின் அடிப்படையிலும், அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ளும் தாராளவாத நோக்குடனும் அது முன்வைத்தது. மோகன்தாஸ் காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் ராதாகிருஷ்ணன் என பலர் அதன் தொடர்வாசகர்களாகத் திகழ்ந்தனர்.
 
இ. இந்தியப் பண்பாட்டு மறுமலர்ச்சியை உருவாக்கும் அடிப்படைகளை பிரபுத்தபாரத இதழ் விவாதித்தது. இந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்களைச் சார்ந்த பண்பாட்டுக்கூறுகளையும் மதம்சாரா பண்பாட்டுக்கூறுகளையும் அது தொகுத்துக்கொள்ள முயன்றது. இந்திய ஓவியக்கலை, சிற்பக்கலை, இலக்கியம், இசை ஆகிய களங்களில் அது குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியது.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* [https://prabuddhabharataarchives-advaitaashrama-org.translate.goog/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc பிரபுத்தபாரதம் ஆவணக்காப்பகம்]
* [https://testbook.com/ias-preparation/prabuddha-bharata Prabuddha Bharata or Awakened India - A Comprehensive Study]
* [https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1693699 PM's address at the 125th Anniversary celebrations of ‘Prabuddha Bharata’]
* [https://upload.wikimedia.org/wikipedia/commons/2/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜகந்நாதன்]
* [https://upload.wikimedia.org/wikipedia/commons/2/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜகந்நாதன்]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0004421_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf ராஜம் ஐயர் சரிதை- விவேகபோதினி- தமிழிணையம்]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0004421_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf ராஜம் ஐயர் சரிதை- விவேகபோதினி- தமிழிணையம்]
Line 188: Line 221:
*[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11104 பி.ஆர்.ராஜம் ஐயர் = தென்றல் இணைய இதழ்.]
*[http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11104 பி.ஆர்.ராஜம் ஐயர் = தென்றல் இணைய இதழ்.]
*தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கம் பெ.சு.மணி
*தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கம் பெ.சு.மணி
*[https://www-newindianexpress-com.translate.goog/nation/2018/jan/24/prabuddha-bharata-turns-longest-running-monthly-english-magazine-in-india-1762345.html?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc 'பிரபுத்த பாரத' இந்தியாவில் மிக நீண்ட கால ஆங்கில மாத இதழ்]
*[https://www.business-standard.com/article/pti-stories/prabuddha-bharata-turns-longest-running-monthly-english-mag-118012301462_1.html 'Prabuddha Bharata' turns longest-running monthly English mag]
*

Revision as of 10:41, 7 November 2023

பிரபுத்தபாரதம் முதல் இதழ்
பிரபுத்தபாரதம் மே 2015
பிரபுத்தபாரதம் 125 ஆண்டு விழா மலர்

பிரபுத்தபாரதம் (The Prabuddha Bharata) (1896) சுவாமி விவேகானந்தரின் நவவேதாந்தக் கருத்துக்களை பரப்பும்பொருட்டு சென்னையில் இருந்து நடத்தப்பட்ட தத்துவ இதழ். பின்னர் இமாச்சலப்பிரதேசம் அல்மோராவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் இவ்விதழ் இந்தியாவின் மிகத்தொன்மையான அச்சிதழ்களில் ஒன்று.

தொடக்கம்

பிரபுத்தபாரதம் இதழ் சென்னையில் ஜூலை 1896ல் தொடங்கப்பட்டது. 1893ல் சென்னைக்கு வந்த சுவாமி விவேகானந்தரை சென்னையில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் சந்தித்துப்பேசினர். விவேகானந்தரின் நவவேதாந்தம் சார்ந்த கருத்துக்களை பரப்ப ஆங்கிலத்தில் பிரம்மவாதினி என்னும் இதழ் தொடங்கப்பட்டது. அவ்விதழ் வேதாந்தக் கருத்துக்களை மட்டுமே வெளியிட்டது. இளைஞர்கள் படிப்பதற்குரிய ஓர் இதழ் தொடங்கவேண்டும் என்னும் எண்ணம் இளைஞர்களுக்கு உருவானது.

1896 ல் பி.ஐயாசாமி, பி.ஆர். ராஜம் ஐயர் ,ஜி.ஜி.நரசிம்மாச்சாரியா, பி.வி காமேஸ்வர ஐயர் ஆகியோர் இணைந்து பிரபுத்த பாரதா என்னும் ஆங்கில இதழை தொடங்கினர். 1893 ஜூலையில் முதல் இதழ் வெளிவந்தது

பெயர்

பிரபுத்த பாரதா என்னும் சொல்லுக்கு அறிவுவிழிப்பு கொண்ட பாரதம் என்று பொருள் . இதழின் பெயரை விவேகானந்தர் தன் கடிதம் வழியாக அறிவித்தார்.

நோக்கம்

பிரபுத்தபாரத இதழின் நோக்கம் பற்றி சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தில் “இவ்விதழை நடத்தும்போது கல்வித்திறனைக் காட்டி இதன் நடை கடினமானதாக ஆகாமலிருப்பதற்காக கருத்தூன்ற வேண்டும். அப்படிச்செய்தால் இவ்விதழ் உலகமெங்கும் பரவும் என்பதற்கு ஐயமில்லை. எளியநடையில் எழுதினால்தான் உங்களுக்கு விரைவில் நோக்கம் நிறைவேறும். சனாதன தர்மம் பற்றிய செய்திகளை எளிய கதைகள் வழியாக வெளியிடுவதே உங்கள் முதன்மைநோக்கமாக இருக்கவேண்டும். அத்தகைய கதைகள் சம்ஸ்கிருதமொழியில் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் அழகும் சிறப்பும் மிக உயர்ந்தவை. அவற்றை நீங்கள் பலர் அறியச்செய்யவேண்டும். உங்கள் இதழில் நுட்பமான தத்துவ வேதாந்த விவாதங்கள் மிகுதியாக இருக்கலாகாது. துணிவுடன் செயலை இயற்றுங்கள். விரைவிலேயே உங்களுக்குச் சிறப்பு வந்துசேரும் என்னும் வீண்விருப்புக்கு மட்டும் இடம்கொடாதீர்கள். உளப்பூர்வமாக நீங்கள் உழைத்தால் நாளடைவில் உலகம் உங்களை மதிக்கும்” என்று குறிப்பிடுகிறார்.

ராஜம் ஐயர் பிரபுத்தபாரத இதழுக்கு எழுதிய முன்னோட்டக் குறிப்பில் அவ்விதழ் சாந்தானந்த சுவாமிகளிடம் ஆசி பெற்று தொடங்கப்படுவதாகவும் பிரம்மவாதினி முதியவர்களுக்கு பயன்படுவதுபோல பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைஞர்களுக்கு பிரபுத்தபாரதம் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.

வரவேற்பு

பி.ஆர்.ராஜம் ஐயர் வெளியிட்ட முன்னோட்டமே வரவேற்பைப் பெற்றது என்று அவர் முதல் இதழிலேயே குறிப்பிடுகிறார். “அயல்நாட்டில் உருவாகியுள்ள சனாதனதர்மம் பற்றிய ஆர்வத்தால் நம் தேசம் எழுப்பப்படும் காலத்தில் அதை தெளியும்படிச்செய்ய இவ்விதழ் திகழப்போகிறது’ என்றுகுறிப்பிட்டார். அட்டையில் இந்து துறவி ஒருவர் தவம் செய்வதை அயல்நாட்டவர் வியப்புடன் பார்ப்பதுபோல படம் அச்சிடப்பட்டிருந்தது

பிரபுத்தபாரதம் முதல் இதழுக்கே 1500 சந்தாதாரர்கள் அமைந்தனர். ஓராண்டுக்குள் 4500 சந்தாதாரர்கள் அமைந்தனர். அக்காலகட்டத்தில் இது மிகுதியான எண்ணிக்கையாகும்.

உள்ளடக்கம்

பிரபுத்தபாரதம் முதல் இரண்டு ஆண்டுகளின் இதழ்களில் உள்ளடக்கம் ராஜம் ஐயரால் வடிவமைக்கப்பட்டது. ஆசிரியர் குறிப்பு பகுதியில் வேதாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் கதைகள் அளிக்கப்பட்டன. தலையங்கமாக மெய்ஞானச் செய்திகள் இருந்தன. பரம்பொருளைத் தேடிச்சென்றோர் என்னும் தலைப்பில் பக்தர்கள், ஞானிகள் பற்றிய குறிப்புகள் அளிக்கப்பட்டன. பகவத்கீதை விளக்கம், சிலைவழிபாட்டின் உட்பொருட்களும், வேதாந்த விளக்கக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. வாஸுதேவ சாஸ்திரி என்னும் தொடர்கதையும் பல்வேறு சிறிய கதைகளும் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலானவை ராஜம் ஐயராலேயே வெவ்வேறு பெயர்களில் எழுதப்பட்டன. அவர் எழுதிய வேதாந்தக் குறிப்புகள் வேதாந்த சஞ்சாரம் (Rambles in Vedanta) என்ற பேரில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.

மறுவெளியீடு

பி.ஆர்.ராஜம் ஐயர் 1898ல் மறைந்தார். இறுதி இதழில் ‘நிதிசார்ந்து எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும் இதன் ஆசிரியராக இருந்த பி.ஆர்.ராஜம் ஐயரின் மறைவால் இதழ் இத்துடன் நிறுத்தப்படுகிறது’ என்னும் அறிவிப்பு இருந்தது.

1897 ல் இந்தியா வந்த சுவாமி விவேகானந்தர் இமாச்சலப்பிரதேசம் அல்மோராவுக்குச் சென்றுகொண்டிருந்தார். அல்மோராவிலிருந்து பிரபுத்தபாரதம் என்னும் கவிதையை 1898 ஆகஸ்ட் மாதம் எழுதினார். இதழை மீண்டும் தொடங்கும்படி அவர் தன் ஆங்கிலேயச் சீடரான காப்டன் ஜே.எச்.சேவியரிடம் கேட்டுக்கொண்டார். கல்கத்தாவிலிருந்து அச்சுப்பொருட்களை வாங்கிக்கொண்டு அல்மோரா வந்த சேவியர் 1898 ஆகஸ்டில் பிரபுத்தபாரதம் இதழை மீண்டும் தொடங்கினார். விவேகானந்தரின் மாணவர் சுவாமி ஸ்வரூபானந்தா இதழாசிரியராகப் பொறுப்பேற்றார்.

பிரபுத்தபாரதம் இதழ் 1899 மார்ச் மாதம் புதியதாகத் தொடங்கப்பட்ட அத்வைத ஆசிரமம் மாயாவதிக்கு மாற்றப்பட்டது. 1924ல் மாயாவதியில் இருந்து கல்கத்தாவுக்கு இதழின் வெளியீட்டகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்போதும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

உள்ளடக்கம்

பிரபுத்தபாரதம் இந்தியாவில் ஒன்றரை நூற்றாண்டுக்காலம் நிகழ்ந்த வேதாந்த, கலாச்சார விவாதங்களின் மாபெரும் ஆவணப்பதிவாக உள்ளது. கார்ல் யுங் தியானம் பற்றி எழுதிய கட்டுரை அதில் வெளியானது. இந்தியாவின் முதன்மையான தத்துவ அறிஞர்களின் விரிவான கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

ஆவணம்

2010 ல் பிரபுத்தபாரதம் இதழின் 114 ஆண்டு இதழ்கள் (1896- 2009) அடங்கிய ஆவணக்காப்பகம் உருவாக்கப்பட்டது. இதழ்கள் மின்வடிவில் டிவிடியாக வெளியிடப்பட்டன.

பிரபுத்தபாரதம் இணைய ஆவணக்காப்பகம் 2021ல் தொடங்கப்பட்டது. ( இணைய ஆவணக்காப்பகம் இணைப்பு)

பிரபுத்தபாரதம் 125 ஆவது ஆண்டுவிழா 2021ல் மாயாவதியில் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர்கள்

பிரபுத்த பாரதா இதழின் ஆசிரியர்களின் பட்டியல்

பிரபுத்த பாரதத்தின் ஆசிரியர்கள்
காலம் ஆசிரியர்
1 ஜூலை 1896 முதல் ஜூன் 1898 வரை பி.ஆர்.ராஜம் ஐயர்
2 ஆகஸ்ட் 1898 முதல் ஜூலை 1906 வரை சுவாமி ஸ்வரூபானந்தா
3 ஆகஸ்ட் 1906 முதல் டிசம்பர் 1913 வரை சுவாமி விரஜானந்தா
4 ஜனவரி 1914 முதல் மே 1918 வரை சுவாமி பிரஜ்ஞானந்தா
5 ஜூன் 1918 முதல் டிசம்பர் 1921 வரை சுவாமி ராகவானந்தா
6 ஜனவரி 1922 முதல் டிசம்பர் 1924 வரை சுவாமி யதீஸ்வரானந்தா
7 ஜனவரி 1925 முதல் டிசம்பர் 1926 வரை சுவாமி விவிதிஷானந்தா
8 ஜனவரி 1927 முதல் டிசம்பர் 1930 வரை சுவாமி அசோகானந்தா
9 ஜனவரி 1931 முதல் டிசம்பர் 1934 வரை சுவாமி பவித்ரானந்தா
10 ஜனவரி 1935 முதல் டிசம்பர் 1937 வரை சுவாமி மைதிலியானந்தா
11 ஜனவரி 1938 முதல் டிசம்பர் 1939 வரை சுவாமி தேஜாசானந்தா
12 ஜனவரி 1940 முதல் டிசம்பர் 1941 வரை சுவாமி விபுலானந்தா
13 ஜனவரி 1942 முதல் டிசம்பர் 1944 வரை சுவாமி கம்பீரானந்தா
14 ஜனவரி 1945 முதல் டிசம்பர் 1947 வரை சுவாமி யோகேஸ்வரானந்தா
15 ஜனவரி 1948 முதல் டிசம்பர் 1949 வரை சுவாமி பிரம்மமயானந்தா
16 ஜனவரி 1950 முதல் டிசம்பர் 1954 வரை சுவாமி வந்தானந்தா
17 ஜனவரி 1955 முதல் டிசம்பர் 1956 வரை சுவாமி சத்வரூபானந்தா
18 ஜனவரி 1957 முதல் டிசம்பர் 1958 வரை சுவாமி நிஹ்ஸ்ரேயாசனந்தா
19 ஜனவரி 1959 முதல் டிசம்பர் 1961 வரை சுவாமி அனானந்தா
20 ஜனவரி 1962 முதல் டிசம்பர் 1963 வரை சுவாமி சித்தத்மானந்தா
21 ஜனவரி 1964 முதல் டிசம்பர் 1965 வரை சுவாமி கீர்த்திதானந்தா
22 ஜனவரி 1966 முதல் ஜூலை 1968 வரை சுவாமி ஆதிஸ்வரானந்தா
23 ஆகஸ்ட் 1968 முதல் டிசம்பர் 1968 வரை சுவாமி புத்தானந்தா
24 ஜனவரி 1969 முதல் டிசம்பர் 1970 வரை சுவாமி ரசஞானந்தா
25 ஜனவரி 1971 முதல் டிசம்பர் 1976 வரை சுவாமி தத்ரூபானந்தா
26 ஜனவரி 1977 முதல் பிப்ரவரி 1979 வரை சுவாமி பலராமானந்தா
27 மார்ச் 1979 முதல் டிசம்பர் 1986 வரை சுவாமி பஜானந்தா
28 ஜனவரி 1987 முதல் டிசம்பர் 1989 வரை சுவாமி ஜிதாத்மானந்தா
29 ஜனவரி 1990 முதல் டிசம்பர் 1993 வரை சுவாமி முக்திரூபானந்தா
30 ஜனவரி 1994 முதல் டிசம்பர் 1996 வரை சுவாமி ஆத்மரானந்தா
31 ஜனவரி 1997 முதல் டிசம்பர் 1998 வரை சுவாமி சத்யபிரியானந்தா
32 ஜனவரி 1999 முதல் டிசம்பர் 2001 வரை சுவாமி சுனிர்மலானந்தா
33 ஜனவரி 2002 முதல் டிசம்பர் 2004 வரை சுவாமி யுக்தாத்மானந்தா
34 ஜனவரி 2005 முதல் அக்டோபர் 2010 வரை சுவாமி சத்யஸ்வரூபானந்தா
35 நவம்பர் 2010 முதல் ஜூலை 2014 வரை சுவாமி சத்தியமயானந்தா
36 ஆகஸ்ட் 2014 முதல் ஜூலை 2020 வரை சுவாமி நரசிம்மானந்தா
37 ஆகஸ்ட் 2020 முதல் தற்போது வரை சுவாமி வீரானந்தா

அறிவியக்க இடம்

பிரபுத்தபாரதம் இதழ் உலகில் தொடர்ச்சியாக நீண்டகாலம் வெளிவரும் இதழ்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மிகத்தொன்மையான இதழ் அது எனப்படுகிறது.

பிரபுத்தபாரதம் இந்திய சிந்தனையில் மூன்றுவகைகளில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியது.

அ. சுவாமி விவேகானந்தரால் முன்னெடுக்கப்பட்ட நவவேதாந்தக் கருத்துக்கள் இந்தியாவில் வேரூன்றிப்பரவ விரிவான அறிவுக்களத்தை அது அமைத்தது. நவவேதாந்தம் சார்ந்து விவேகானந்த மரபிலிருந்து கிளைத்த பிற அமைப்புகள் அனைத்துக்குமே பிரபுத்தபாரதத்தின் அறிவுத்தொகையே ஆதாரமாக அமைந்தது. இத்தளத்தின் முதன்மை அறிஞர்கள் அதில் தொடர்ச்சியாக எழுதினர்.

ஆ. இந்திய நவதேசிய அடையாளத்தை இந்தியமரபில் இருந்து தொகுத்து உருவாக்கிக் கொள்ளுவதற்கு பிரபுத்தபாரத இதழ் பெரும்பங்களிப்பை ஆற்றியது. இந்தியதேசிய உருவகத்தை நவீன சிந்தனைகளின் அடிப்படையிலும், அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ளும் தாராளவாத நோக்குடனும் அது முன்வைத்தது. மோகன்தாஸ் காந்தி, பி.ஆர்.அம்பேத்கர், டாக்டர் ராதாகிருஷ்ணன் என பலர் அதன் தொடர்வாசகர்களாகத் திகழ்ந்தனர்.

இ. இந்தியப் பண்பாட்டு மறுமலர்ச்சியை உருவாக்கும் அடிப்படைகளை பிரபுத்தபாரத இதழ் விவாதித்தது. இந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்களைச் சார்ந்த பண்பாட்டுக்கூறுகளையும் மதம்சாரா பண்பாட்டுக்கூறுகளையும் அது தொகுத்துக்கொள்ள முயன்றது. இந்திய ஓவியக்கலை, சிற்பக்கலை, இலக்கியம், இசை ஆகிய களங்களில் அது குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியது.

உசாத்துணை