standardised

சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில்: Difference between revisions

From Tamil Wiki
(Standardised)
(Moved to Standardised)
Line 20: Line 20:
* https://www.tagavalaatruppadai.in/temple-detail.php?temp_id=jZY9lup2kZl6TuXGlZQdjZh7&tag1=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%20(%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
* https://www.tagavalaatruppadai.in/temple-detail.php?temp_id=jZY9lup2kZl6TuXGlZQdjZh7&tag1=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%20(%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D


{{ready for review}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:11, 28 February 2022

சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில்

சந்திரப்ரபா (சந்திரநாதர்) கோயில் (பொ.யு. 8-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) காஞ்சிபுரத்தில் அமைந்த சமணக் கோயில். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது.

இடம்

காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ளது. திரைலோக்யநாதர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

வரலாறு

சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில் பொ.யு. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் இராஜசிம்மனின்(பொ.யு. 690-728) ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயில் பொ.யு. 8-ஆம் நூற்றாண்டிற்குரிய கட்டட கலையம்சங்களை ஆங்காங்கே கொண்டு விளங்குகிறது. இராஜசிம்மன் தன்னுடைய கைலாசநாதர் கோயிலில் முந்நூறு பட்டப்பெயர்களைக் கொண்டுள்ளான். அவன் எல்லா சமயங்களையும் ஆதரித்துள்ளான் என்பதற்கு இந்தப் பெயர்களே சாட்சியாக விளங்குகின்றன. எனவே அப்பல்லவ மன்னன் சந்திரநாதர் என்னும் சமணசமய தீர்த்தங்கரருக்கு கோயில் எடுப்பித்துள்ளான் என்பது அவனது சமயப்பொறையைக் காட்டுகிறது.

அமைப்பு

சந்திரநாதர் கோயில் கருவறை, அந்தராளம், முன்மண்டபம், அதனுடன் இணைந்த உள்திருச்சுற்றாலை ஆகிய பகுதிகளைக் கொண்டது. திருச்சுற்றாலைச் சுவரின் அடித்தளத்தில் ஒரு வரிசை மட்டும் கருங்கல்லாலும், பிறபகுதிகள் மணற் கல்லாலும் கட்டப்பட்டுள்ளது. பல்லவர் காலத்துக் கட்டடக் கோயில்கள் பெரும்பாலானவற்றில் இப்பொதுத் தன்மையினைக் காணலாம். இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது.

மூலவர்

சமணத் தீர்த்தங்கரர் சந்திரநாதர் மூலவராக உள்ளார்.

சிற்பங்கள்

சந்திரநாதர் என்னும் சமணத்தீர்த்தங்கரரின் சிற்பம் உள்ளது.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.