செந்தீ நடராசன்: Difference between revisions
No edit summary |
mNo edit summary |
||
Line 10: | Line 10: | ||
1962 ஆம் ஆண்டு செந்தீ நடராசன் ஊர்ட்டி செண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து மாதம் வேலை பார்த்த பின் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலையில் சேர்ந்தார். 1962 முதல் 1966 வரை அகஸ்தீஸ்வரத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966-ல் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கிருந்த போது பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் அரசு செலவில் எம்.எட். படித்து பட்டம் பெற்றார். பின் அகஸ்தீஸ்வரம் உயர்நிலைப் பள்ளி, எஸ்.எல்.பி உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். | 1962 ஆம் ஆண்டு செந்தீ நடராசன் ஊர்ட்டி செண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து மாதம் வேலை பார்த்த பின் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலையில் சேர்ந்தார். 1962 முதல் 1966 வரை அகஸ்தீஸ்வரத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966-ல் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கிருந்த போது பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் அரசு செலவில் எம்.எட். படித்து பட்டம் பெற்றார். பின் அகஸ்தீஸ்வரம் உயர்நிலைப் பள்ளி, எஸ்.எல்.பி உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். | ||
தற்போது மனைவி கமலாவுடன் நாகர்கோவில் நாகராஜர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். | |||
== பொது வாழ்க்கை == | == பொது வாழ்க்கை == |
Revision as of 13:03, 17 July 2023
செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியல், சமூக மானுடவியல், தொல்லியல், கோயிற்கலை ஆய்வாளர்.
பிறப்பு, கல்வி
செந்தீ நடராசன் ஜூலை 06, 1940 அன்று திருவனந்தபுரத்தில் (அப்போதைய திருவிதாங்கூர்) சுப்பையன், காளியம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். அப்பா சுப்பையன் திருவிதாங்கூர் மாகாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர். செந்தீ நடராசன் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள். செந்தீ நடராசன் அவர்களில் இளையவர்.
செந்தீ நடராசன் ஐந்தாம் வகுப்பு வரை நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் பயின்றார். பின் ஆறாவது பாரம் (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) வரை எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரியில் பி.யூ.சி பட்டம் பெற்றார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் பட்டம் பெற்றார். சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசுக் கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
செந்தீ நடராசன் 1967 ஆம் ஆண்டு கமலாவை திருமணம் செய்துக் கொண்டார். கமலா நடராசன் எம்.எட். வேதியியல் ஆசிரியராக இருந்த ஓய்வு பெற்றவர். செந்தீ நடராசன் கமலா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மகன் செந்தில் குமரன், மகள் - செந்தளிர்.
1962 ஆம் ஆண்டு செந்தீ நடராசன் ஊர்ட்டி செண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து மாதம் வேலை பார்த்த பின் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலையில் சேர்ந்தார். 1962 முதல் 1966 வரை அகஸ்தீஸ்வரத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966-ல் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கிருந்த போது பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் அரசு செலவில் எம்.எட். படித்து பட்டம் பெற்றார். பின் அகஸ்தீஸ்வரம் உயர்நிலைப் பள்ளி, எஸ்.எல்.பி உயர்நிலைப் பள்ளியில் பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1999 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தற்போது மனைவி கமலாவுடன் நாகர்கோவில் நாகராஜர் கோவில் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
பொது வாழ்க்கை
செந்தீ நடராசன் சூரங்குடியில் வேலை செய்த போது அங்கே தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தோடு அறிமுகம் ஏற்பட்டது. நாகர்கோவில் கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினர் ஆனார். அங்கே செந்தீ நடராசனுக்கு நா. வானமாமலையுடன் தொடர்பு ஏற்பட்டது. நா. வானமாமலையுடனான தொடர்பு செந்தீ நடராசனை ஆய்வு பக்கம் மீது திருப்பியது.
செந்தீ நடராசன் தன் ஆய்வை சமூக மானுடவியலிலும், நாட்டார் வழக்காற்றியலிலும் மேற்கொள்ளத் தொடங்கினார். கலை இலக்கிய பெருமன்றம் மூலம் நாடகம், இலக்கியம், பட்டிமன்றம் போன்றவற்றை நாகர்கோவிலில் நிகழ்த்தினார். சில நாடகங்கள் செந்தீ நடராசனே எழுதி அரங்கேறியவை. நாடக நடிகராகவும் இருந்தார்.
பொ.யு. 2000-ல் செந்தீ நடராசனுக்கு தொல்லியலாளர் கோபாலனுடன் அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் ஓய்வுக்கு பின் செந்தீ நடராசனின் ஆய்வை தொல்லியல் துறை பக்கம் திருப்பியது.
தொல்லியல் சார்பாக கருத்தரங்கம் ஆண்டுதோறும் சென்று வருகிறார்.
சுயமாக கல்வெட்டு பிராமி, வட்டெழுத்து,
தொல்லெழுத்துக்கள் ஒரு அறிமுகம். சிற்பம், கோவில், சிற்பம் தொன்மங்கள் புத்தகம். புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடித்திருக்கிறார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.