சி.மணி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சி.மணி ((1936 - 2009) ) தமிழில் புதுக்கவிதைகளும் கவிதை பற்றிய கட்டுரைகளும் எழுதிய கவிஞர். நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். எழுத்து இதழில் இருந்து எழுதத்...")
 
No edit summary
Line 8: Line 8:


இலக்கிய வாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில்  கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம்,செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவரும் அவர்தான்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல்.யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான்.அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி.


== விருதுகள் ==
== விருதுகள் ==
Line 39: Line 41:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://www.panuval.com/ezuthum-nadaiyum-10004483
 
* https://www.panuval.com/ezuthum-nadaiyum-10004483
* http://write2maanee.blogspot.com/2018/08/blog-post_10.html

Revision as of 08:50, 16 February 2022

சி.மணி ((1936 - 2009) ) தமிழில் புதுக்கவிதைகளும் கவிதை பற்றிய கட்டுரைகளும் எழுதிய கவிஞர். நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார். எழுத்து இதழில் இருந்து எழுதத் தொடங்கிய சி.மணி பின்னர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தினார்.

பிறப்பு,கல்வி

சி.மணியின் இயற்பெயர் சி.பழனிச்சாமி. சேலத்தில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

சி.மணி ஆங்கிலப்பேராசிரியராக பணிபுரிந்தார்

இலக்கிய வாழ்க்கை

தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில்  கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம்,செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவரும் அவர்தான்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல்.யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான்.அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி.

விருதுகள்

  • இருமுறை தமிழ்ப்பல்கலைக்கழகப் பரிசு
  • ஆசான் கவிதை விருது
  • கவிஞர் சிற்பி விருது
  • “விளக்கு” இலக்கிய விருது
நூல்கள்
கவிதை
  • வரும் போகும்
  • ஒளிச் சேர்க்கை
  • இதுவரை
  • நகரம்
  • பச்சையின்நிலவுப் பெண்
  • நாட்டியக்காளை
  • உயர்குடி
  • அலைவு
  • குகை
  • தீர்வு
  • முகமூடி
  • பழக்கம்
  • பாரி
கவிதையியல்
  • யாப்பும் கவிதையும்

உசாத்துணை