சுழிகுளம்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Corrected text format issues) |
||
Line 22: | Line 22: | ||
திதிமுரு காமா சேமா (பாம்பன் சுவாமிகள், சித்திரகவிகள், ப. 30) | திதிமுரு காமா சேமா (பாம்பன் சுவாமிகள், சித்திரகவிகள், ப. 30) | ||
Revision as of 14:22, 3 July 2023
சுழிகுளம் சித்திர கவிகளில் ஒரு வகை. குளத்தில் எறியப்படும் கல் சுழிசுழியாய் அலைகளைத் தோற்றுவிப்பதைப் போலச் சுழி அமைப்பில் வரையப்படும் சித்திரம் ஒன்றில் உரிய முறையில் எழுத்துகளைப் பொருத்தி இயற்றப்பெறும் செய்யுள் என்று மாறனலங்காரம் சுழிகுளத்துக்கான இலக்கணத்தைக் கூறுகிறது.
தெழித்துஎழு நீர்குளத் தினுள்செறித் ததைக்கொடு
சுழித்துஅடங் குவபோன்று அடங்குதல் சுழிகுளம் (மாறனலங்காரம், 295)
எட்டுட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவது என சாமிநாதம் கூறுகிறது
ஓர்பாட்டு எவ்வெட்டுஎழுத் தாய் நால்வரி இட்டு
ஒழுங்குகி ழ்மேல் மேல்கிழ்புறம் புறம்பார்க்கி னும்
பாட்டு ஒத்தல் சுழி குளம் (சுவாமிநாதம், 197)
எடுத்துக்காட்டுகள்
எடுத்துக்காட்டு-1
மதிமதி மாமா வாவா
திதிதிதி சேயே யோவா
மதியமு மாசே யேமா
திதிமுரு காமா சேமா (பாம்பன் சுவாமிகள், சித்திரகவிகள், ப. 30)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.