பா.வெங்கடேசன்: Difference between revisions
(Moved to Standardised) |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 52: | Line 52: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
{{ | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 11:17, 12 February 2022
பா.வெங்கடேசன் (ஆகஸ்ட் 13, 1962) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். கவிஞர். சமகால அரசியலையும் வரலாற்றையும் இணைத்து ஊடுபிரதித்தன்மையுடன் அவர் எழுதிய நாவல்கள் புகழ்பெற்றவை.
பிறப்பு, கல்வி
பா.வெங்கடேசன் மதுரையில் ஆகஸ்ட் 13, 1962 அன்று பாலசுப்பிரமண்யம், ருக்மிணி இணையருக்கு பிறந்தார். மதுரை தானப்பமுதலி தெரு அரசு துவக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியும் மணிநகர் மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் பெருங்குடி சரஸ்வதி நாராயணா கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பும் (இளநிலை வணிகவியல்) படித்தார்
தனிவாழ்க்கை
பா.வெங்கடேசன் நித்யாவை நவம்பர் 05 , 1989-ல் மணந்தார். பரத்வாஜ், கௌஷிக் என இரு மகன்கள். ஓசூர் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
இலக்கியவாழ்க்கை
பா.வெங்கடேசனின் முதல் படைப்பு 1979-ல் இளமையில் தந்தை வேலை செய்த நிறுவனத்தின் தொழிற்சங்க இதழில் வெளியாகியது. போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்தான ஒரு கதை. 1988-ல் கணையாழியில் வெளியான பேறு என்னும் கவிதைதான் முதல் படைப்பு. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்: கநாசுப்ரமணியம், மார்க்வெஸ், மிலன் குந்தேரா, யோஸே சரமாகோ, 1001 இரவு அராபியக் கதைகள், விக்கிரமாதித்யன், மதனகாமராஜன் கதைகள் என்கிறார். தொடக்கத்தில் க.நா.சுப்ரமணியம் மயன் என்னும் பெயரில் எழுதிய கவிதைகளின் பாணியில் கவிதைகளை எழுதினார். பின்னர் ஐரோப்பிய நாவல்களின் தாக்கத்தால் ஊடுபிரதித்தன்மை கொண்ட நாவல்களை எழுதினார். வரலாற்றையும் சமகால அரசியலையும் தனிமனித வாழ்க்கையையும் தனித்தனிக் கதைகளாகப் பின்னி உருவாக்கப்படும் நாவல்கள் அவை.
இலக்கிய இடம்
பா.வெங்கடேசன் வடிவம் மொழி ஆகியவற்றில் புதிய சோதனைகள் செய்யும் படைப்பாளி. “பல்வேறு அர்த்தத் தளங்களையும் யதார்த்தத்தின், கற்பனையின் அனைத்துத் திசைகளையும் அடுக்கிச் செல்லும் வகையில் நீண்ட வாக்கியங்களை எழுதுபவர் பா.வெங்கடேசன். கொஞ்சம் உழைப்பைச் செலுத்தத் தயாராக இருக்கும் வாசகருக்கு இந்த நடை அள்ளிக்கொடுப்பது ஏராளம்.” என்று விமர்சகர் ஆசை குறிப்பிடுகிறார்.[1] ’பா.வெங்கடேசன் மிகச்சிறந்த கவிஞர். நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர். இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் இரண்டும் மிக முக்கியமான நாவல்கள். புனைவெழுத்தில் தனித்துவமிக்க மொழியை,கதையாடலை கைக்கொண்டு வருபவர்’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.[2]
விருதுகள்
- 2017 விளக்கு விருது
- 2018 ஸ்பாரோ விருது
- 2019 தமிழ்திரு விருது
நூல்கள்
நாவல்கள்
- தாண்டவரயன் கதை
- பாகீரதியின் மதியம்
- வாரணாசி
குறுநாவல்
- ராஜா மகள் (மழையின் குரல் தனிமை, ஆயிரம் சாரதா, நீல விதி உட்பட நான்கு குறுநாவல்கள்)
சிறுகதை
- ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள்
கட்டுரைகள்
- உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
உசாத்துணை
- https://www.hindutamil.in/news/literature/704848-book-review.html
- அருஞ்சொல் பேட்டி
- https://www.shankarwritings.com/2019/06/blog-post_29.html#!
- http://www.vasagasalai.com/rajan-makal-book-review/
- விளக்கு விருது அறிவிப்பு
- https://kamaliswaminathan.blogspot.com/2015/07/blog-post_8.html
- https://mayaanakaandam.blogspot.com/2016/04/thaandavaraayan-kathai.html
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.