being created

வி.கே. ராமசாமி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
வி.கே. ராமசாமி (வி.கே.ஆர்) (1926 – டிசம்பர் 24, 2002) நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்.  
வி.கே. ராமசாமி (வி.கே.ஆர்) (ஜனவரி 1, 1926 – டிசம்பர் 24, 2002) நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வி.கே. ராமசாமி 1926-ல் கந்தன் செட்டியாருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். 1969-ல் நடிகை ரமணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மூன்று மகள்கள். வி.கே.ஆர்.ரகு என்ற மகன் சில படங்களில் நடித்தார்.
வி.கே. ராமசாமி ஜனவரி 1, 1926-ல் கந்தன் செட்டியாருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். 1969-ல் நடிகை ரமணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மூன்று மகள்கள். வி.கே.ஆர்.ரகு என்ற மகன் சில படங்களில் நடித்தார்.
== நாடக வாழ்க்கை ==
== நாடக வாழ்க்கை ==
வி.கே. ராமசாமி வி.கே.ராமசாமியின் ஒன்றுவிட்ட அண்ணனான மாரியப்பன் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் நடிகராகவும், பாடகராகவும் இருந்தார். அந்த நாடகக் குழு நாடகம் நடத்த விருதுநகருக்கு வந்தபோது. எட்டாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு புதுக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பொன்னமராவதிக்கு பஸ் ஏறினார். அப்போது யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அங்கேதான் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். மீண்டும் வீட்டிலிருந்த யாருக்கும் தெரியாமல் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவை நோக்கி ஓடினார் வி.கே.ஆர். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியாக வந்த வி.கே.ராமசாமியின் அண்ணன் மாரியப்பன், டி..கே.ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ண பாகவதர் ஆகியோர் இணைந்து ‘ஸ்ரீலஷ்மி பால கான  சபா’ என்ற பெயரிலே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் வி.கே.ராமசாமியை இணைத்துக் கொண்டார் மாரியப்பன்.
வி.கே.ராமசாமியின் ஒன்றுவிட்ட அண்ணனான மாரியப்பன் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் நடிகராகவும், பாடகராகவும் இருந்தார். அந்த நாடகக் குழு நாடகம் நடத்த விருதுநகருக்கு வந்தபோது அவர்கள் நடத்திய நாடகக் குழுவில் இணைய விரும்பினார். தந்தை மறுத்ததால் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு புதுக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பொன்னமராவதிக்கு பஸ் ஏறினார். அப்போது யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அங்கேதான் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். மீண்டும் வீட்டிலிருந்த யாருக்கும் தெரியாமல் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவை நோக்கி ஓடினார் வி.கே.ஆர். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியாக வந்த வி.கே.ராமசாமியின் அண்ணன் மாரியப்பன், டி..கே.ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ண பாகவதர் ஆகியோர் இணைந்து ‘ஸ்ரீலஷ்மி பால கான  சபா’ என்ற பெயரிலே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் வி.கே.ராமசாமியை இணைத்துக் கொண்டார் மாரியப்பன்.


ஏழுவயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்தார். பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார். தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற அறுபது வயது ஆளாக நடித்தார்.
ஏழுவயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்தார். பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார். தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற அறுபது வயது ஆளாக நடித்தார்.

Revision as of 12:36, 7 April 2023

வி.கே. ராமசாமி (வி.கே.ஆர்) (ஜனவரி 1, 1926 – டிசம்பர் 24, 2002) நாடக நடிகர், திரைப்பட நடிகர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

வி.கே. ராமசாமி ஜனவரி 1, 1926-ல் கந்தன் செட்டியாருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். 1969-ல் நடிகை ரமணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள் மூன்று மகள்கள். வி.கே.ஆர்.ரகு என்ற மகன் சில படங்களில் நடித்தார்.

நாடக வாழ்க்கை

வி.கே.ராமசாமியின் ஒன்றுவிட்ட அண்ணனான மாரியப்பன் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவில் நடிகராகவும், பாடகராகவும் இருந்தார். அந்த நாடகக் குழு நாடகம் நடத்த விருதுநகருக்கு வந்தபோது அவர்கள் நடத்திய நாடகக் குழுவில் இணைய விரும்பினார். தந்தை மறுத்ததால் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிந்ததும் நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு புதுக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பொன்னமராவதிக்கு பஸ் ஏறினார். அப்போது யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அங்கேதான் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். மீண்டும் வீட்டிலிருந்த யாருக்கும் தெரியாமல் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் குழுவை நோக்கி ஓடினார் வி.கே.ஆர். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியாக வந்த வி.கே.ராமசாமியின் அண்ணன் மாரியப்பன், டி..கே.ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ண பாகவதர் ஆகியோர் இணைந்து ‘ஸ்ரீலஷ்மி பால கான சபா’ என்ற பெயரிலே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் வி.கே.ராமசாமியை இணைத்துக் கொண்டார் மாரியப்பன்.

ஏழுவயதில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் இணைந்தார். பதினைந்து வருடங்கள் நாடகங்களில் நடித்தார். தியாக உள்ளம் நாடகத்தில் பேங்கர் சண்முகம் பிள்ளை என்ற அறுபது வயது ஆளாக நடித்தார்.

திரை வாழ்க்கை

1940களில் பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவிலிருந்து திரையுலகிற்குள் நுழைந்தார். 1947-ல் தியாக உள்ளம் நாடகததை ஏ.வி.எம் செட்டியார் ’நாம் இருவர்’ என்ற திரைப்படமாக எடுத்த போது அறுபது வயது வயோதிகனாக நடித்தார். ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். பதினைந்து திரைப்படங்களை தயாரித்தார். இவர் கடைசியாக நடித்த படம் டும் டும் டும்.

விருது

  • வி.கே. ராமசாமி 1970-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.

மறைவு

வி.கே. ராமசாமி டிசம்பர் 24, 2002-ல் சென்னையில் காலமானார்.

இவரைப்பற்றிய நூல்கள்

  • எனது கலைப்பயணம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.