being created

மர்ரே பான்சன் எமனோ: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மர்ரே பான்சன் எமனோ (பிப்ரவரி 28, 1904 - ஆகஸ்ட் 29, 2005) திராவிட மொழியியல் ஆய்வாளர். == பிறப்பு, கல்வி == மர்ரே பான்சன் எமனோ கனடாவிலுள்ள லுனென்பர்க் நகரில் பிப்ரவரி 28, 1904இல் பிறந்தார். இளமையில்...")
 
No edit summary
Line 3: Line 3:
மர்ரே பான்சன் எமனோ கனடாவிலுள்ள லுனென்பர்க் நகரில் பிப்ரவரி 28, 1904இல் பிறந்தார். இளமையில் தந்தையை இழந்தார். தாயின் உழைப்பில் வறுமைச் சூழலில் வளர்ந்தார். உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போதே லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் கற்றார். 1923இல் டல்ஹெளஸி பல்கலைக் கழகத்தில் இளங்கலைப்பட்டம்(ஆனர்ஸ்) பெற்றார். நான்காண்டுகள் இவருக்கு உதவித்தொகை கிடைத்தது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்லியோல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பட்டம் பெற்றார். 1931இல் ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  
மர்ரே பான்சன் எமனோ கனடாவிலுள்ள லுனென்பர்க் நகரில் பிப்ரவரி 28, 1904இல் பிறந்தார். இளமையில் தந்தையை இழந்தார். தாயின் உழைப்பில் வறுமைச் சூழலில் வளர்ந்தார். உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போதே லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் கற்றார். 1923இல் டல்ஹெளஸி பல்கலைக் கழகத்தில் இளங்கலைப்பட்டம்(ஆனர்ஸ்) பெற்றார். நான்காண்டுகள் இவருக்கு உதவித்தொகை கிடைத்தது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்லியோல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பட்டம் பெற்றார். 1931இல் ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.  
உலக அளவில் மொழியியல் துறையிலும் மானுடவியல் துறையிலும் புகழ்பெற்ற அறிஞர்களான பிராங்கிளின் எட்கெர்டன், எட்வர்டு சப்பர் உள்ளிட்டோரிடம் கல்வி கற்றவர்.  
உலக அளவில் மொழியியல் துறையிலும் மானுடவியல் துறையிலும் புகழ்பெற்ற அறிஞர்களான பிராங்கிளின் எட்கெர்டன், எட்வர்டு சப்பர் உள்ளிட்டோரிடம் கல்வி கற்றவர்.  
==  
== ஆசிரியர் வாழ்க்கை ==
1926இல் யேல் பல்கலைக்கலைக்கழகத்தில் இலத்தீன் மொழி கற்பிக்கப் பணியில் சேர்ந்தார். அதே நேரத்தில் சமற்கிருதம் கற்பதிலும் இந்தோ ஐரோப்பிய மொழிகளை ஆய்வதிலும் கவனம் செலுத்தினார். 1931இல் சமற்கிருதம் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்று வரைந்துள்ளார். வேலை வாய்ப்பு அரிதான காலம் ஆதலின் எமனோ நியூகவனில் (New Haven) தங்கி சிறு சிறு உதவித் தொகைகளைப் பெற்றவண்ணம் பணியிலும் ஆய்விலும் ஈடுபட்டிருந்தார். 1933இல் 'மொழி' என்ற தலைப்பில் லெனார்டு பூளூம்பீல்டு (Leonard Bloomfield) வெளியிட்ட நூல் ஏல் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. கட்டமைப்பு மொழியியல்துறை பிற்காலத்தில் எமனோவின் போதனை களுக்கும் இந்திய , திராவிட மொழியியல் ஆய்வுகளுக்கும் அடிப்படையாக இருந்தது. பிலிப் கக்கிளாமட்டு (Philip Kahclamat) என்னும் அறிஞர் வழியாகத் தோடா , கோடா மொழிகளில் தமக்கிருந்த ஐயங்களைப் போக்கிக்கொண்டார் . தம் ஆசிரியர்கள் அளித்த அறிவின் வழியாக இந்தியாவில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளை ஆராய்வதில் கவனம் செலுத்தினார். அவர்தம் ஆசிரியர்களுள் ஒருவரான சபீர் , அறியப்படாத மலைவாழ் மக்களின் தோடாமொழி பற்றி எடுத்துரைத்தார். இதன்படி நீலகிரி மொழி திராவிட மொழிக்குடும்ப ஆய்வுக்கு உதவும் என்று எடுத்துரைத்தார் . எனவே தோடா, குடகு, கோடா, கோலமி உள்ளிட்ட நான்கு மொழிகளில் மிகப்பெரிய களப்பணி செய்தார். படகு, பிராகூ மொழிகளை அறிவதிலும் களப்பணி செய்தார். 1935-38 இல் இதற்கென இந்தியா வந்து நீலகிரியில் உள்ள தோடர், கோடர், குடகர் உள்ளிட்ட இன மக்கள் பேசும் மொழிகளை ஆராய்ந்து இந்த மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது என்ற உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தார்.
1926இல் யேல் பல்கலைக்கலைக்கழகத்தில் இலத்தீன் மொழி கற்பிக்கப் பணியில் சேர்ந்தார். ஆசிரியர் மாணவர் உறவை உயர்வாகப் போற்றியவர். தம் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர். அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராக விளங்கியவர். ஓர் ஆய்வுப் பரம்பரையை உருவாக்கி உலகிற்கு வழங்கியவர். 1940இல் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் சமற்கிருத உதவிப் பேராசிரியராகப் பணியேற்றார். 1941 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 1953-58 இல் பெர்கிலியில் தொடங்கப்பெற்ற மொழியியல் துறையில் முதன் முதல் அதன் துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர். 1959-62 வரை செம்மொழித்துறைக்குத் தலைவராக விளங்கியவர். 1950 இல் இளங்கலை வகுப்புகளில் மொழியியல் பாடம் நடத்தியவர். பல்வேறு கல்விசார் அமைப்பு களுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தார். எமனோ சொற்பிறப்பியலுக்கு எனப் பல நெறிமுறைகளை உருவாக்கியவர். எமனோ அவர்களிடம் கற்று மொழியியல் துறையில் புகழ்பெற்றவர்கள் பலராவர். அவர்களுள் இந்தியா வைச் சேர்ந்த கிருட்டினமூர்த்தி, ஆர்.கே.சர்மா (காசி பல்கலைக்கழகம்) உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.  
== ஆய்வு வாழ்க்கை ==
மானுடவியல் அறிஞர் எட்வர்டு சபேர் என்பவரிடம் எமனோ பயின்றதால் சொல்லியல், மொழியியலில் நல்ல அடித்தளம் இருந்தது. மேலும் நீலகிரியில் டேவிட் மேன்டல்போர்ன் என்பவருடன் இணைந்து பணிசெய்ததால் மானுடவியல் துறையில் ஆர்வம் இருந்தது.  


இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள கோலமி மக்களின் மொழியையும் ஆராய அம்மக்களுடன் நீண்ட நாள் தங்கி ஆய்வு செய்தார் . 1940 இல் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் சமற்கிருத உதவிப் பேராசிரியராகப் பணியேற்றார் . 1941 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார் . 1953-58 இல் பெர்கிலியில் தொடங்கப்பெற்ற மொழியியல் துறையில் முதன் முதல் அதன் துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் . 1959-62 வரை செம்மொழித்துறைக்குத் தலைவராக விளங்கியவர் . 1950 இல் இளங்கலை வகுப்புகளில் மொழியியல் பாடம் நடத்தியவர் . பல்வேறு கல்விசார் அமைப்பு களுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தார் . இவரின் அறிவுத்திறன் கண்டு சிகாகோ பல்கலைக்கழகம் ( 1968 ) , டல்கௌசிப் பல்கலைக்கழகம் ( 1970 ) ஐதராபாத் பல்கலைக்கழகம் ( 1987 ) வி.கே.காமேசுவர் இப்தர்பங்கா பல்கலைக்கழகம் ( 1997 ) ஆகியன இவருக்குச் சிறப்புநிலை முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளன . 2004 இல் 32 வது அனைத்து இந்திய திராவிட மொழியியல் மாநாட்டில் ( வாரங்கல்லில் நடைபெற்றது ) எமனோ பற்றிய கட்டுரைகள் படிக்கப்பெற்றன . இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 31.02.2005 இல் பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகச் சிறப்பிதழ் வெளிவந்தது . இதில் எமனோ அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு , வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன . மைசூரில் உள்ள இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் எமனோவைச் சிறப்பிக்கும்பொருட்டு அவர்தம் ஆய்வுகள் , படைப்புகள் பற்றி பல கட்டுரைகள் படிக்கப்பட்டுள்ளன . எமனோ சொற்பிறப்பியலுக்கு எனப் பல நெறிமுறைகளை உருவாக்கியவர் . எமனோ அவர்களிடம் கற்று மொழியியல் துறையில் புகழ்பெற்றவர்கள் பலராவர் . அவர்களுள் இந்தியா வைச் சேர்ந்த கிருட்டினமூர்த்தி , ஆர்.கே.சர்மா ( காசிப் பல்கலைக்கழகம் ) உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . நூற்று ஒரு அகவை வரை தனியாகவே வாழ்ந்து உலகம் போற்றும் அறிஞராகத் தம்பணியில் புகழப்பெற்ற எமனோ அவர்கள் அவரின் 29.08.2005 இல் மறைந்தார் . நோவாசுகாட்டியா மனைவி கல்லறை அருகே அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது . எமனோவின் கட்டுரைகள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பேங்ராபட்டு நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன . ஏல் பல்கலைக்கழகத்தில் 1931 இல் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சம்பலதத்தா இயற்றிய ' வேதாளம் சொன்ன 25 கதைகள் ' என்ற நூல் பற்றி ஆராய்ந்தார் . 1935 இல் இதனை விரிவுபடுத்தி நூலாக்கினார் . பழைய சிந்துச் சமவெளி சார்ந்த நாகரிகங்கள் பற்றி அறிய உதவும் நூல் இது . இந்தியா பற்றி அறிய உதவும் பல நூல்களை எமனோ இக்காலத்தில் எழுதியுள்ளார் . 1962 இல் காளிதாசரின் சாகுந்தலத்தை ஆங்கிலத்தில் விளக்கத்துடன் பதிப்பித்துள்ளார் . இந்திய நாட்டுப்புறவியல் கதைகள் பற்றிய ஆய்வு நிகழ்த்தி 1943-47 இல் எழுதியுள்ளார் . 1941 இல் சமற்கிருத மூக்கொலிகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார் . 1952 இல் சமற்கிருத சந்தி மாற்றுப்பெயர்கள் என்ற சிறு நூலையும் வெளியிட்டுள்ளார் . 1958 இல் இந்திய வேர்ச்சொற்கள் பற்றி எழுதியுள்ளார்.இராம்கரன் சர்மா அவர்கள் எமனோ மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர் . இவர் அனைத்துலகச் சமற்கிருத கழகத்தலைவராக உள்ளார் . எமனோ இந்தியாவில் களப்பணியில் இருந்தபொழுது எழுத்துவடிவம் பெறாத மொழிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டி ருந்தார் . கோடோ , கோலமி ( மத்தியபிரதேசத்தில் வழங்குவது ) , குடகு ( கன்னடம் ) , படகுமொழி , பலுசித்தானத்தில் உள்ள பிராகூயி உள்ளிட்ட மொழிகளை ஆய்வு செய்தார் . 1944-46 இல் நான்கு தொகுதிகளாக வெளியிட்டார்.இதன் பெயர் கோடா படிகள் ( Kota Text ) என்பதாகும் . 1955 இல் கோலமி ஒரு திராவிடமொழி என்ற ஆய்வை வெளியிட்டார் . ஆறு வாரம் இதற்குக் களப்பணி செய்துள்ளார் . 112 பக்கத்தில் வேர்ச்சொல் அகராதியுடன் விளக்கமான இலக்கண நூலாக இதனை வெளியிட்டுள்ளார் . அறிஞர் பர்ரோ அவர் களுடன் இணைந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள் என்ற நூலை 1961 இல் முதற்பதிப்பையும் 1984 இல் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டார் . இரண்டாம் பதிப்பில் ஒலியன்கள் பற்றிய அட்டவணைகள் இணைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்க ஒன்றாகும் . மூல திராவிடம் பற்றியும் ஒலியன்கள் பற்றியும் கவனமுடன் ஆராய்ந்து எழுதியுள்ளனர் . திராவிட மொழியியலில் புதிய அத்தியாயத்தை இந்த அகராதி தொடங்கியது எனலாம் . 1988 இல் மூல திராவிடமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில்
1926இல் சமற்கிருதம் கற்பதிலும் இந்தோ ஐரோப்பிய மொழிகளை ஆய்வதிலும் கவனம் செலுத்தினார். 1931இல் சமற்கிருதம் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்று எழுதினார். வேலை வாய்ப்பு அரிதான காலம் ஆதலின் எமனோ நியூகவனில் (New Haven) தங்கி சிறு சிறு உதவித் தொகைகளைப் பெற்றவண்ணம் பணியிலும் ஆய்விலும் ஈடுபட்டார்.  


ஆய்வுசெய்து வந்தார் . 1939 இல் நீலகிரியில் களப்பணி செய்து படகர்களின் உயிர் ஒலிகள் பற்றி ஆராய்ந்து எழுதியது குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.படகர்கள் பற்றி பின்னாளில் ஆராய்ந்த ஆய்வாளர்கள் எமனோவின் படகர்கள் குறித்த கருத்தை ஏற்பதில்லை . 1971 இல் தோடர்கள் பாடிய பாடல்களை வெளியிட்டார் . 260 பாடல்கள் மொழிபெயர்ப்புடன் வெளிவந்துள்ளன . இனக்குழு விளக்கமும் வெளிவந்துள்ளது . 1004 பக்கத்தில் இந்த நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தகுந்தது . 1974 இல் தோடர்களின் சடங்கும் வழிபாடும் பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார் . தோடர்களின் இலக்கணமும் பிரதியும் என்று 1984 இல் வெளியிட்ட நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் . எமனோ அவர்கள் மொழியியல் துறைக்கு ஆற்றிய பணிகளைப் போலவே நாட்டுப்புறவியல் துறைக்கும் மிகப்பெரிய பங்களிப்பு ய்துள்ளார் . மொழிக்கூறுகளை ஆராயும் அதே நேரத்தில் அந்த மொழிபேசும் மக்களின் அனைத்து வகையான நடவடிக்கை களையும் ஆராய்ந்துள்ளார் . மலையின மக்களிடம் இருந்து பாடல்கள் , கதைகள் யாவற்றையும் தம் ஆய்வுக்குரிய தரவுகளாகத் தொகுத்துள்ளார் . அவ்வகையில் அவர் தொகுத்த நாட்டுப்புறவியல் தரவுகள் கோடா பிரதிகள் ( 1944-46 ) , கோலமி நாட்டுபுறக் கதைகள் ( 1955 ) , தோடாமொழி நாட்டுப்புற இலக்கியங்கள் ( 1984 ) , நாட்டுப்புறக் கதைகள் என்று வெளியிடப்பட்டுள்ளன . இந்தியா ஒரு மொழிப்பகுதி என்று உருவாக்கிய கோட்பாடு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . 1935-38 இல் இந்தியாவில் களப்பணி செய்தபொழுது இந்திய வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்கள் பற்றி அறியும் சூழல் எமனோவுக்கு அமைந்தது . சர் வில்லியம்சு சோன்சு போன்ற இந்தியவியல் ஆய்வு முன்னோடிகள் செய்த , விட்ட பணிகளை நான் முடிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் எமனோ பணிசெய்துள்ளார் . தமிழ்நாட்டுக் கோயில்கள் , ஒரிசா , மைசூர் சமண நினைவுச்சின்னங்கள் , அசந்தா , எல்லோரா ஓவியம் , காசி , சென்னை , கல்கத்தா , மும்பை , வங்காளத்தில் காணப்படும் பார்ப்பனர்களின் உணவுமுறைகள் , தென்னாட்டு உணவுமுறைகள் பற்றி ஆராய்ந்து வங்காளத்தில் உள்ள பார்ப்பனர் உணவுமுறை கண்டு வியந்தவர் .  
1933இல் 'மொழி' என்ற தலைப்பில் லெனார்டு பூளூம்பீல்டு (Leonard Bloomfield) வெளியிட்ட நூல் ஏல் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. கட்டமைப்பு மொழியியல்துறை பிற்காலத்தில் எமனோவின் போதனைகளுக்கும் இந்திய, திராவிட மொழியியல் ஆய்வுகளுக்கும் அடிப்படையாக இருந்தது.  


மானுடவியல் அறிஞர் எட்வர்டு சபேர் என்பவரிடம் எமனோ பயின்றவர் . எனவே சொல்லியல் , மொழியியலில் நல்ல அடித் தளம் இருந்தது . மேலும் நீலகிரியில் டேவிட் மேன்டல்போர்ன் என்பவருடன் இணைந்து பணிசெய்ததால் மானுடவியல் துறையில் நல்ல ஆர்வம் இருந்தது . வாய்மொழி இலக்கியத்திற்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளார் . கதைகள் , பாடல்கள் , சொற்பொழிவுகள் பலவற்றைப் பதிவு செய்துள்ளார் . பஞ்சாப் விடுகதைகள் பற்றி டைலர் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் . திராவிட நாட்டுப்புறக் கதைகளில் உள்ள எதிரொலிச் சொற்கள் பற்றி எழுதியுள்ளார் . 1992 இல் இந்தியாவில் நகைச்சுவை உறவுகள் பற்றி எழுதியுள்ளார் . எமனோ புளூம்பீல்டு கருத்துகளில் நல்ல ஈடுபாடு உடையவர் . புளூம்பீல்டு கருத்துகள் , நூல்களை அடிக்கடி நினைவுகூறும் ஆற்றல் உடையவர்.எமனோ எதனையும் துல்லியமாகச் செய்யக்கூடியவர் . எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர் . அவர் மனைவி வெளிப்படையானவர் . எமனோ அவர்களை வெளியுலகிற்கு கொண்டுவந்தவர் அவர்தம் மனைவியார் ஆவார் . எமனோ அவர்கள் தம் இறுதிக் காலத்திலும் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தவர் . ஆசிரியர் மாணவர் உறவை உயர்வாகப் போற்றியவர் . தம் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர் . அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராக விளங்கியவர் . ஓர் ஆய்வுப் பரம்பரையை உருவாக்கி உலகிற்கு வழங்கியவர் . 1987 இல் தம் மனைவி கிட்டி எமனோ Kitty Emeneau இறந்த பிறகு தனித்தே வாழ்ந்து வந்தார் . இவர் இல்லம் முழுவதும் நூல்கள் நிரம்பியிருக்கும். தொலைக்காட்சியோ, கணிப்பொறியோ இவரிடம் இல்லை. இவர் தம் ஆய்வுகளைத் தம்மிடம் இருந்த எளிய தட்டச்சுப்பொறியில் தாமே தட்டச்சுச் செய்து கொள்வார் . 285 கட்டுரைகளும் 25 நூல்களும் 98 ஆய்வுகளும் வெளியிட்ட பெருமைக்குரியவர் . இவர் தமிழ்மொழி பற்றி அறிந்தவரே தவிர தமிழ் இலக்கியங்களை முழுமையாகக் கற்காமல் போனமை தமிழுக்குப் பெரும் இழப்பு என்றே சொல்லலாம்.  
பிலிப் கக்கிளாமட்டு (Philip Kahclamat) என்னும் அறிஞர் வழியாகத் தோடா, கோடா மொழிகளில் தமக்கிருந்த ஐயங்களைப் போக்கிக்கொண்டார். தம் ஆசிரியர்கள் வழியாக இந்தியாவில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளை ஆராய்வதில் கவனம் செலுத்தினார். அவர்தம் ஆசிரியர்களுள் ஒருவரான சபீர், அறியப்படாத மலைவாழ் மக்களின் தோடாமொழி பற்றி எடுத்துரைத்தார். இதன்படி நீலகிரி மொழி திராவிட மொழிக்குடும்ப ஆய்வுக்கு உதவும் என்று எடுத்துரைத்தார். எனவே தோடா, குடகு, கோடா, கோலமி உள்ளிட்ட நான்கு மொழிகளில் மிகப்பெரிய களப்பணி செய்தார். படகு, பிராகூ மொழிகளை அறிவதிலும் களப்பணி செய்தார். 1935-38 இல் இதற்கென இந்தியா வந்து நீலகிரியில் உள்ள தோடர், கோடர், குடகர் உள்ளிட்ட இன மக்கள் பேசும் மொழிகளை ஆராய்ந்து இந்த மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
 
இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள கோலமி மக்களின் மொழியையும் ஆராய அம்மக்களுடன் நீண்ட நாள் தங்கி ஆய்வு செய்தார்.  
 
இராம்கரன் சர்மா அவர்கள் எமனோ மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர் . இவர் அனைத்துலகச் சமற்கிருத கழகத்தலைவராக உள்ளார்.
 
எமனோ இந்தியாவில் களப்பணியில் இருந்தபொழுது எழுத்துவடிவம் பெறாத மொழிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கோடோ, கோலமி (மத்தியபிரதேசத்தில் வழங்குவது), குடகு ( கன்னடம் ) , படகுமொழி , பலுசித்தானத்தில் உள்ள பிராகூயி உள்ளிட்ட மொழிகளை ஆய்வு செய்தார். 1944-46 இல் நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். இதன் பெயர் கோடா படிகள் (Kota Text) என்பதாகும். 1955 இல் கோலமி ஒரு திராவிடமொழி என்ற ஆய்வை வெளியிட்டார். ஆறு வாரம் இதற்குக் களப்பணி செய்தார். 112 பக்கத்தில் வேர்ச்சொல் அகராதியுடன் விளக்கமான இலக்கண நூலாக இதனை வெளியிட்டார் . அறிஞர் தாமஸ் பர்ரோ இணைந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள் என்ற நூலை 1961 இல் முதற்பதிப்பையும் 1984 இல் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டார். இரண்டாம் பதிப்பில் ஒலியன்கள் பற்றிய அட்டவணைகள் இணைக்கப்பட்டது. மூல திராவிடம் பற்றியும் ஒலியன்கள் பற்றியும் கவனமுடன் ஆராய்ந்து எழுதினார். திராவிட மொழியியலில் புதிய அத்தியாயத்தை இந்த அகராதி தொடங்கியது. 1988இல் மூல திராவிடமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்தார். 1939 இல் நீலகிரியில் களப்பணி செய்து படகர்களின் உயிர் ஒலிகள் பற்றி ஆராய்ந்து எழுதினார். படகர்கள் பற்றி பின்னாளில் ஆராய்ந்த ஆய்வாளர்கள் எமனோவின் படகர்கள் குறித்த கருத்தை ஏற்பதில்லை. 1971இல் தோடர்கள் பாடிய பாடல்களை வெளியிட்டார். 260 பாடல்கள் மொழிபெயர்ப்புடன் வெளிவந்தன. இனக்குழு விளக்கமும் வெளிவந்தது. 1004 பக்கத்தில் இந்த நூல் வெளிவந்தது. 1974இல் தோடர்களின் சடங்கும் வழிபாடும் பற்றி ஆராய்ந்து எழுதினார். தோடர்களின் இலக்கணமும் பிரதியும் என்று 1984இல் வெளியிட்ட நூலும் குறிப்பிடத்தக்கது. எமனோ அவர்கள் மொழியியல் துறைக்கு ஆற்றிய பணிகளைப் போலவே நாட்டுப்புறவியல் துறைக்கும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தார். மொழிக்கூறுகளை ஆராயும் அதே நேரத்தில் அந்த மொழிபேசும் மக்களின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் ஆராய்ந்துள்ளார். மலையின மக்களிடம் இருந்து பாடல்கள், கதைகள் யாவற்றையும் தம் ஆய்வுக்குரிய தரவுகளாகத் தொகுத்தார். அவ்வகையில் அவர் தொகுத்த நாட்டுப்புறவியல் தரவுகள் கோடா பிரதிகள் (1944-46), கோலமி நாட்டுபுறக் கதைகள் (1955), தோடாமொழி நாட்டுப்புற இலக்கியங்கள் (1984), நாட்டுப்புறக் கதைகள் என்று வெளியிடப்பட்டன. இந்தியா ஒரு மொழிப்பகுதி என்று உருவாக்கிய கோட்பாடு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1935-38இல் இந்தியாவில் களப்பணி செய்தபொழுது இந்திய வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்கள் பற்றி அறியும் சூழல் எமனோவுக்கு அமைந்தது. சர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற இந்தியவியல் ஆய்வு முன்னோடிகள் செய்து விட்ட பணிகளை நான் முடிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் எமனோ பணிசெய்தார். தமிழ்நாட்டுக் கோயில்கள், ஒரிசா, மைசூர் சமண நினைவுச்சின்னங்கள், அஜந்தா, எல்லோரா ஓவியம், காசி, சென்னை, கல்கத்தா, மும்பை, வங்காளத்தில் காணப்படும் பார்ப்பனர்களின் உணவுமுறைகள், தென்னாட்டு உணவுமுறைகள் பற்றி ஆராய்ந்து வங்காளத்தில் உள்ள பார்ப்பனர் உணவுமுறை கண்டு எழுதினார்.  
===== நாட்டுப்புரவியல் ஆய்வு ======
வாய்மொழி இலக்கியத்திற்கு நிறைய பங்களிப்பு செய்தார். கதைகள், பாடல்கள், சொற்பொழிவுகள் பலவற்றைப் பதிவு செய்தார்.  
பஞ்சாப் விடுகதைகள் பற்றி டைலர் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். திராவிட நாட்டுப்புறக் கதைகளில் உள்ள எதிரொலிச் சொற்கள் பற்றி எழுதியுள்ளார்.  
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
1987 இல் தம் மனைவி கிட்டி எமனோ Kitty Emeneau இறந்த பிறகு தனித்தே வாழ்ந்து வந்தார் . இவர் இல்லம் முழுவதும் நூல்கள் நிரம்பியிருக்கும். தொலைக்காட்சியோ, கணிப்பொறியோ இவரிடம் இல்லை. இவர் தம் ஆய்வுகளைத் தம்மிடம் இருந்த எளிய தட்டச்சுப்பொறியில் தாமே தட்டச்சுச் செய்து கொள்வார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
திராவிட சொற்பிறப்பியல் அகரமுதலி நூலை தாமஸ் பர்ரோவுடன் இணைந்து உருவாக்கினார்.  
திராவிட சொற்பிறப்பியல் அகரமுதலி நூலை தாமஸ் பர்ரோவுடன் இணைந்து உருவாக்கினார். 285 கட்டுரைகளும் 25 நூல்களும் 98 ஆய்வுகளும் வெளியிட்ட பெருமைக்குரியவர்.
== விருதுகள் ==
 
ஏல் பல்கலைக்கழகத்தில் 1931 இல் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சம்பலதத்தா இயற்றிய 'வேதாளம் சொன்ன 25 கதைகள்' என்ற நூல் பற்றி ஆராய்ந்தார். 1935இல் இதனை விரிவுபடுத்தி நூலாக்கினார். பழைய சிந்துச் சமவெளி சார்ந்த நாகரிகங்கள் பற்றி அறிய உதவும் நூல் இது. இந்தியா பற்றி அறிய உதவும் பல நூல்களை எமனோ இக்காலத்தில் எழுதினார். 1962இல் காளிதாசரின் சாகுந்தலத்தை ஆங்கிலத்தில் விளக்கத்துடன் பதிப்பித்தார். இந்திய நாட்டுப்புறவியல் கதைகள் பற்றிய ஆய்வு நிகழ்த்தி 1943-47இல் எழுதினார். 1941இல் சமற்கிருத மூக்கொலிகள் பற்றி விரிவாக எழுதினார். 1952 இல் சமற்கிருத சந்தி மாற்றுப்பெயர்கள் என்ற சிறு நூலையும் வெளியிட்டார். 1958இல் இந்திய வேர்ச்சொற்கள் பற்றி எழுதினார்.
 
1992 இல் இந்தியாவில் நகைச்சுவை உறவுகள் பற்றி எழுதியுள்ளார். எமனோ புளூம்பீல்டு கருத்துகளில் நல்ல ஈடுபாடு உடையவர். புளூம்பீல்டு கருத்துகள், நூல்களை அடிக்கடி நினைவுகூறும் ஆற்றல் உடையவர்.எமனோ எதனையும் துல்லியமாகச் செய்யக்கூடியவர். எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர். அவர் மனைவி வெளிப்படையானவர். எமனோ அவர்களை வெளியுலகிற்கு கொண்டுவந்தவர் அவர்தம் மனைவியார் ஆவார். எமனோ அவர்கள் தம் இறுதிக் காலத்திலும் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தவர்.  
== சிறப்புகள் ==
* சிகாகோ பல்கலைக்கழகம் (1968), டல்கௌசிப் பல்கலைக்கழகம் (1970) ஐதராபாத் பல்கலைக்கழகம் (1987) வி.கே.காமேசுவர் இப்தர்பங்கா பல்கலைக்கழகம் (1997) ஆகியன இவருக்குச் சிறப்புநிலை முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளன.
* 2004இல் 32 வது அனைத்து இந்திய திராவிட மொழியியல் மாநாட்டில் (வாரங்கல்லில் நடைபெற்றது) எமனோ பற்றிய கட்டுரைகள் படிக்கப்பெற்றன. இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2005 இல் பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகச் சிறப்பிதழ் வெளிவந்தது. இதில் எமனோ அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு, வெளியீடுகள் இடம்பெற்றன.
* மைசூரில் உள்ள இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் எமனோவைச் சிறப்பிக்கும்பொருட்டு  ஆய்வுகள், படைப்புகள் பற்றி பல கட்டுரைகள் படிக்கப்பட்டன.
* எமனோவின் கட்டுரைகள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பேங்ராபட்டு நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
== மறைவு ==
== மறைவு ==
மர்ரே பான்சன் எமனோ ஆகஸ்ட் 29, 2005இல் காலமானார். நோவாசுகாட்டியாவில் அவரின் மனைவியின் கல்லறை அருகே அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
== நூல்கள் ==
== நூல்கள் ==
===== நாவல் =====
* Jambhaladatta's Version of the Vetālapañcavinśati: A Critical Sanskrit Text in Transliteration (1934)
===== சிறுகதைகள் =====
* A Course in Annamese: Lessons in the Pronunciation and Grammar of the Annamese Language (1943)
== உசாத்துணை ==
* The Sinduvāra Tree in Sanskrit Literature (1944)
* Kota Texts (3 vols, 1944–46)
* An Annamese Reader (with Lý-duc-Lâm and Diether von den Steinen, 1944)
* Annamese-English Dictionary (with Diether von den Steinen, 1945)
* The Strangling Figs in Sanskrit Literature (1949)
* Studies in Vietnamese (Annamese) Grammar (1951)
* Kolami, a Dravidian Language (1955)
* A Dravidian Etymological Dictionary (with Thomas Burrow, 1961; 2nd ed. 1984)
* Brahui and Dravidian Comparative Grammar (1962)
* Abhijñāna-Śakuntala: Translated from the Bengali Recension (1962)
* Dravidian Borrowings from Indo-Aryan (with T. Burrow, 1962)
* India and Historical Grammar (1965)
* Sanskrit Sandhi and Exercises (1968)
* Dravidian Comparative Phonology: A Sketch (1970)
* Toda Songs (1971)
* Ritual Structure and Language Structure of the Todas (1974)
* Language and Linguistic Area: Essays (1980)
* Toda Grammar and Texts (1984)
* Dravidian Studies: Selected Papers (1994)
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 11:49, 21 January 2023

மர்ரே பான்சன் எமனோ (பிப்ரவரி 28, 1904 - ஆகஸ்ட் 29, 2005) திராவிட மொழியியல் ஆய்வாளர்.

பிறப்பு, கல்வி

மர்ரே பான்சன் எமனோ கனடாவிலுள்ள லுனென்பர்க் நகரில் பிப்ரவரி 28, 1904இல் பிறந்தார். இளமையில் தந்தையை இழந்தார். தாயின் உழைப்பில் வறுமைச் சூழலில் வளர்ந்தார். உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போதே லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் கற்றார். 1923இல் டல்ஹெளஸி பல்கலைக் கழகத்தில் இளங்கலைப்பட்டம்(ஆனர்ஸ்) பெற்றார். நான்காண்டுகள் இவருக்கு உதவித்தொகை கிடைத்தது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்லியோல் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பட்டம் பெற்றார். 1931இல் ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உலக அளவில் மொழியியல் துறையிலும் மானுடவியல் துறையிலும் புகழ்பெற்ற அறிஞர்களான பிராங்கிளின் எட்கெர்டன், எட்வர்டு சப்பர் உள்ளிட்டோரிடம் கல்வி கற்றவர்.

ஆசிரியர் வாழ்க்கை

1926இல் யேல் பல்கலைக்கலைக்கழகத்தில் இலத்தீன் மொழி கற்பிக்கப் பணியில் சேர்ந்தார். ஆசிரியர் மாணவர் உறவை உயர்வாகப் போற்றியவர். தம் மாணவர்களை ஊக்கப்படுத்தியவர். அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராக விளங்கியவர். ஓர் ஆய்வுப் பரம்பரையை உருவாக்கி உலகிற்கு வழங்கியவர். 1940இல் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் சமற்கிருத உதவிப் பேராசிரியராகப் பணியேற்றார். 1941 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 1953-58 இல் பெர்கிலியில் தொடங்கப்பெற்ற மொழியியல் துறையில் முதன் முதல் அதன் துறைத்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர். 1959-62 வரை செம்மொழித்துறைக்குத் தலைவராக விளங்கியவர். 1950 இல் இளங்கலை வகுப்புகளில் மொழியியல் பாடம் நடத்தியவர். பல்வேறு கல்விசார் அமைப்பு களுக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தார். எமனோ சொற்பிறப்பியலுக்கு எனப் பல நெறிமுறைகளை உருவாக்கியவர். எமனோ அவர்களிடம் கற்று மொழியியல் துறையில் புகழ்பெற்றவர்கள் பலராவர். அவர்களுள் இந்தியா வைச் சேர்ந்த கிருட்டினமூர்த்தி, ஆர்.கே.சர்மா (காசி பல்கலைக்கழகம்) உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆய்வு வாழ்க்கை

மானுடவியல் அறிஞர் எட்வர்டு சபேர் என்பவரிடம் எமனோ பயின்றதால் சொல்லியல், மொழியியலில் நல்ல அடித்தளம் இருந்தது. மேலும் நீலகிரியில் டேவிட் மேன்டல்போர்ன் என்பவருடன் இணைந்து பணிசெய்ததால் மானுடவியல் துறையில் ஆர்வம் இருந்தது.

1926இல் சமற்கிருதம் கற்பதிலும் இந்தோ ஐரோப்பிய மொழிகளை ஆய்வதிலும் கவனம் செலுத்தினார். 1931இல் சமற்கிருதம் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்று எழுதினார். வேலை வாய்ப்பு அரிதான காலம் ஆதலின் எமனோ நியூகவனில் (New Haven) தங்கி சிறு சிறு உதவித் தொகைகளைப் பெற்றவண்ணம் பணியிலும் ஆய்விலும் ஈடுபட்டார்.

1933இல் 'மொழி' என்ற தலைப்பில் லெனார்டு பூளூம்பீல்டு (Leonard Bloomfield) வெளியிட்ட நூல் ஏல் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. கட்டமைப்பு மொழியியல்துறை பிற்காலத்தில் எமனோவின் போதனைகளுக்கும் இந்திய, திராவிட மொழியியல் ஆய்வுகளுக்கும் அடிப்படையாக இருந்தது.

பிலிப் கக்கிளாமட்டு (Philip Kahclamat) என்னும் அறிஞர் வழியாகத் தோடா, கோடா மொழிகளில் தமக்கிருந்த ஐயங்களைப் போக்கிக்கொண்டார். தம் ஆசிரியர்கள் வழியாக இந்தியாவில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளை ஆராய்வதில் கவனம் செலுத்தினார். அவர்தம் ஆசிரியர்களுள் ஒருவரான சபீர், அறியப்படாத மலைவாழ் மக்களின் தோடாமொழி பற்றி எடுத்துரைத்தார். இதன்படி நீலகிரி மொழி திராவிட மொழிக்குடும்ப ஆய்வுக்கு உதவும் என்று எடுத்துரைத்தார். எனவே தோடா, குடகு, கோடா, கோலமி உள்ளிட்ட நான்கு மொழிகளில் மிகப்பெரிய களப்பணி செய்தார். படகு, பிராகூ மொழிகளை அறிவதிலும் களப்பணி செய்தார். 1935-38 இல் இதற்கென இந்தியா வந்து நீலகிரியில் உள்ள தோடர், கோடர், குடகர் உள்ளிட்ட இன மக்கள் பேசும் மொழிகளை ஆராய்ந்து இந்த மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே நல்ல தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள கோலமி மக்களின் மொழியையும் ஆராய அம்மக்களுடன் நீண்ட நாள் தங்கி ஆய்வு செய்தார்.

இராம்கரன் சர்மா அவர்கள் எமனோ மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர் . இவர் அனைத்துலகச் சமற்கிருத கழகத்தலைவராக உள்ளார்.

எமனோ இந்தியாவில் களப்பணியில் இருந்தபொழுது எழுத்துவடிவம் பெறாத மொழிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கோடோ, கோலமி (மத்தியபிரதேசத்தில் வழங்குவது), குடகு ( கன்னடம் ) , படகுமொழி , பலுசித்தானத்தில் உள்ள பிராகூயி உள்ளிட்ட மொழிகளை ஆய்வு செய்தார். 1944-46 இல் நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். இதன் பெயர் கோடா படிகள் (Kota Text) என்பதாகும். 1955 இல் கோலமி ஒரு திராவிடமொழி என்ற ஆய்வை வெளியிட்டார். ஆறு வாரம் இதற்குக் களப்பணி செய்தார். 112 பக்கத்தில் வேர்ச்சொல் அகராதியுடன் விளக்கமான இலக்கண நூலாக இதனை வெளியிட்டார் . அறிஞர் தாமஸ் பர்ரோ இணைந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள் என்ற நூலை 1961 இல் முதற்பதிப்பையும் 1984 இல் இரண்டாம் பதிப்பையும் வெளியிட்டார். இரண்டாம் பதிப்பில் ஒலியன்கள் பற்றிய அட்டவணைகள் இணைக்கப்பட்டது. மூல திராவிடம் பற்றியும் ஒலியன்கள் பற்றியும் கவனமுடன் ஆராய்ந்து எழுதினார். திராவிட மொழியியலில் புதிய அத்தியாயத்தை இந்த அகராதி தொடங்கியது. 1988இல் மூல திராவிடமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்தார். 1939 இல் நீலகிரியில் களப்பணி செய்து படகர்களின் உயிர் ஒலிகள் பற்றி ஆராய்ந்து எழுதினார். படகர்கள் பற்றி பின்னாளில் ஆராய்ந்த ஆய்வாளர்கள் எமனோவின் படகர்கள் குறித்த கருத்தை ஏற்பதில்லை. 1971இல் தோடர்கள் பாடிய பாடல்களை வெளியிட்டார். 260 பாடல்கள் மொழிபெயர்ப்புடன் வெளிவந்தன. இனக்குழு விளக்கமும் வெளிவந்தது. 1004 பக்கத்தில் இந்த நூல் வெளிவந்தது. 1974இல் தோடர்களின் சடங்கும் வழிபாடும் பற்றி ஆராய்ந்து எழுதினார். தோடர்களின் இலக்கணமும் பிரதியும் என்று 1984இல் வெளியிட்ட நூலும் குறிப்பிடத்தக்கது. எமனோ அவர்கள் மொழியியல் துறைக்கு ஆற்றிய பணிகளைப் போலவே நாட்டுப்புறவியல் துறைக்கும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தார். மொழிக்கூறுகளை ஆராயும் அதே நேரத்தில் அந்த மொழிபேசும் மக்களின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் ஆராய்ந்துள்ளார். மலையின மக்களிடம் இருந்து பாடல்கள், கதைகள் யாவற்றையும் தம் ஆய்வுக்குரிய தரவுகளாகத் தொகுத்தார். அவ்வகையில் அவர் தொகுத்த நாட்டுப்புறவியல் தரவுகள் கோடா பிரதிகள் (1944-46), கோலமி நாட்டுபுறக் கதைகள் (1955), தோடாமொழி நாட்டுப்புற இலக்கியங்கள் (1984), நாட்டுப்புறக் கதைகள் என்று வெளியிடப்பட்டன. இந்தியா ஒரு மொழிப்பகுதி என்று உருவாக்கிய கோட்பாடு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1935-38இல் இந்தியாவில் களப்பணி செய்தபொழுது இந்திய வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்கள் பற்றி அறியும் சூழல் எமனோவுக்கு அமைந்தது. சர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற இந்தியவியல் ஆய்வு முன்னோடிகள் செய்து விட்ட பணிகளை நான் முடிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் எமனோ பணிசெய்தார். தமிழ்நாட்டுக் கோயில்கள், ஒரிசா, மைசூர் சமண நினைவுச்சின்னங்கள், அஜந்தா, எல்லோரா ஓவியம், காசி, சென்னை, கல்கத்தா, மும்பை, வங்காளத்தில் காணப்படும் பார்ப்பனர்களின் உணவுமுறைகள், தென்னாட்டு உணவுமுறைகள் பற்றி ஆராய்ந்து வங்காளத்தில் உள்ள பார்ப்பனர் உணவுமுறை கண்டு எழுதினார்.

நாட்டுப்புரவியல் ஆய்வு =

வாய்மொழி இலக்கியத்திற்கு நிறைய பங்களிப்பு செய்தார். கதைகள், பாடல்கள், சொற்பொழிவுகள் பலவற்றைப் பதிவு செய்தார். பஞ்சாப் விடுகதைகள் பற்றி டைலர் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். திராவிட நாட்டுப்புறக் கதைகளில் உள்ள எதிரொலிச் சொற்கள் பற்றி எழுதியுள்ளார்.

தனிவாழ்க்கை

1987 இல் தம் மனைவி கிட்டி எமனோ Kitty Emeneau இறந்த பிறகு தனித்தே வாழ்ந்து வந்தார் . இவர் இல்லம் முழுவதும் நூல்கள் நிரம்பியிருக்கும். தொலைக்காட்சியோ, கணிப்பொறியோ இவரிடம் இல்லை. இவர் தம் ஆய்வுகளைத் தம்மிடம் இருந்த எளிய தட்டச்சுப்பொறியில் தாமே தட்டச்சுச் செய்து கொள்வார்.

இலக்கிய வாழ்க்கை

திராவிட சொற்பிறப்பியல் அகரமுதலி நூலை தாமஸ் பர்ரோவுடன் இணைந்து உருவாக்கினார். 285 கட்டுரைகளும் 25 நூல்களும் 98 ஆய்வுகளும் வெளியிட்ட பெருமைக்குரியவர்.

ஏல் பல்கலைக்கழகத்தில் 1931 இல் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சம்பலதத்தா இயற்றிய 'வேதாளம் சொன்ன 25 கதைகள்' என்ற நூல் பற்றி ஆராய்ந்தார். 1935இல் இதனை விரிவுபடுத்தி நூலாக்கினார். பழைய சிந்துச் சமவெளி சார்ந்த நாகரிகங்கள் பற்றி அறிய உதவும் நூல் இது. இந்தியா பற்றி அறிய உதவும் பல நூல்களை எமனோ இக்காலத்தில் எழுதினார். 1962இல் காளிதாசரின் சாகுந்தலத்தை ஆங்கிலத்தில் விளக்கத்துடன் பதிப்பித்தார். இந்திய நாட்டுப்புறவியல் கதைகள் பற்றிய ஆய்வு நிகழ்த்தி 1943-47இல் எழுதினார். 1941இல் சமற்கிருத மூக்கொலிகள் பற்றி விரிவாக எழுதினார். 1952 இல் சமற்கிருத சந்தி மாற்றுப்பெயர்கள் என்ற சிறு நூலையும் வெளியிட்டார். 1958இல் இந்திய வேர்ச்சொற்கள் பற்றி எழுதினார்.

1992 இல் இந்தியாவில் நகைச்சுவை உறவுகள் பற்றி எழுதியுள்ளார். எமனோ புளூம்பீல்டு கருத்துகளில் நல்ல ஈடுபாடு உடையவர். புளூம்பீல்டு கருத்துகள், நூல்களை அடிக்கடி நினைவுகூறும் ஆற்றல் உடையவர்.எமனோ எதனையும் துல்லியமாகச் செய்யக்கூடியவர். எதனையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர். அவர் மனைவி வெளிப்படையானவர். எமனோ அவர்களை வெளியுலகிற்கு கொண்டுவந்தவர் அவர்தம் மனைவியார் ஆவார். எமனோ அவர்கள் தம் இறுதிக் காலத்திலும் எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தவர்.

சிறப்புகள்

  • சிகாகோ பல்கலைக்கழகம் (1968), டல்கௌசிப் பல்கலைக்கழகம் (1970) ஐதராபாத் பல்கலைக்கழகம் (1987) வி.கே.காமேசுவர் இப்தர்பங்கா பல்கலைக்கழகம் (1997) ஆகியன இவருக்குச் சிறப்புநிலை முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளன.
  • 2004இல் 32 வது அனைத்து இந்திய திராவிட மொழியியல் மாநாட்டில் (வாரங்கல்லில் நடைபெற்றது) எமனோ பற்றிய கட்டுரைகள் படிக்கப்பெற்றன. இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2005 இல் பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகச் சிறப்பிதழ் வெளிவந்தது. இதில் எமனோ அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு, வெளியீடுகள் இடம்பெற்றன.
  • மைசூரில் உள்ள இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தில் எமனோவைச் சிறப்பிக்கும்பொருட்டு ஆய்வுகள், படைப்புகள் பற்றி பல கட்டுரைகள் படிக்கப்பட்டன.
  • எமனோவின் கட்டுரைகள் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பேங்ராபட்டு நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

மறைவு

மர்ரே பான்சன் எமனோ ஆகஸ்ட் 29, 2005இல் காலமானார். நோவாசுகாட்டியாவில் அவரின் மனைவியின் கல்லறை அருகே அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நூல்கள்

  • Jambhaladatta's Version of the Vetālapañcavinśati: A Critical Sanskrit Text in Transliteration (1934)
  • A Course in Annamese: Lessons in the Pronunciation and Grammar of the Annamese Language (1943)
  • The Sinduvāra Tree in Sanskrit Literature (1944)
  • Kota Texts (3 vols, 1944–46)
  • An Annamese Reader (with Lý-duc-Lâm and Diether von den Steinen, 1944)
  • Annamese-English Dictionary (with Diether von den Steinen, 1945)
  • The Strangling Figs in Sanskrit Literature (1949)
  • Studies in Vietnamese (Annamese) Grammar (1951)
  • Kolami, a Dravidian Language (1955)
  • A Dravidian Etymological Dictionary (with Thomas Burrow, 1961; 2nd ed. 1984)
  • Brahui and Dravidian Comparative Grammar (1962)
  • Abhijñāna-Śakuntala: Translated from the Bengali Recension (1962)
  • Dravidian Borrowings from Indo-Aryan (with T. Burrow, 1962)
  • India and Historical Grammar (1965)
  • Sanskrit Sandhi and Exercises (1968)
  • Dravidian Comparative Phonology: A Sketch (1970)
  • Toda Songs (1971)
  • Ritual Structure and Language Structure of the Todas (1974)
  • Language and Linguistic Area: Essays (1980)
  • Toda Grammar and Texts (1984)
  • Dravidian Studies: Selected Papers (1994)

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.