சுந்தராம்பாள் இளஞ்செல்வன்: Difference between revisions
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது) |
(Removed non-breaking space character) |
||
Line 10: | Line 10: | ||
சுந்தராம்பாள் சுங்கைப்பட்டாணியில் மலேசிய நண்பன் பத்திரிகை முகவராக 1990 முதல் 2005 வரை பணியாற்றினார். பின்னர், தினக்குரல் பத்திரிகையின் துணை ஆசிரியராக 2005 முதல் 2008 வரை பணியாற்றினார். | சுந்தராம்பாள் சுங்கைப்பட்டாணியில் மலேசிய நண்பன் பத்திரிகை முகவராக 1990 முதல் 2005 வரை பணியாற்றினார். பின்னர், தினக்குரல் பத்திரிகையின் துணை ஆசிரியராக 2005 முதல் 2008 வரை பணியாற்றினார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
சுந்தராம்பாளின் முதல் சிறுகதையான 'அகவையில் சிரிப்பு ஒன்றே போதும்' [[தமிழ் நேசன்|தமிழ் நேசனி]]ல் வெளிவந்தது. அப்போது அவருக்கு பதினாறு வயது. தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதினார். பல | சுந்தராம்பாளின் முதல் சிறுகதையான 'அகவையில் சிரிப்பு ஒன்றே போதும்' [[தமிழ் நேசன்|தமிழ் நேசனி]]ல் வெளிவந்தது. அப்போது அவருக்கு பதினாறு வயது. தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதினார். பல இலக்கியப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளார். வானொலிக்கும் எழுதியுள்ளார். | ||
== இலக்கிய செயல்பாடு == | == இலக்கிய செயல்பாடு == | ||
* கெடா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக 2000-ஆம் ஆண்டில் தேர்வு பெற்றார். | * கெடா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக 2000-ஆம் ஆண்டில் தேர்வு பெற்றார். |
Revision as of 14:50, 31 December 2022
சுந்தராம்பாள் (பிப்ரவரி 2, 1957) ஓர் மலேசிய எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். எழில் எனும் புனைபெயராலும் அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
சுந்தராம்பாள் கெடா மாநிலத்தில் உள்ள சுங்கைப்பட்டாணியில் பிப்ரவரி 2, 1957-ல் பிறந்தார். பெற்றோர் சதாசிவம், கண்ணம்மா.ஐந்து சகோதரர்கள் இரண்டு சகோதரிகள் உள்ள குடும்பத்தில் முதல் பிள்ளை.
சுந்தரம்பாள் ஆரம்ப கல்வியை சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை பத்து டூவா இடைநிலை பள்ளியிலும் கற்றார்.
திருமணம், தொழில்
சுந்தராம்பாள் எழுத்தாளர் எம்.ஏ. இளஞ்செல்வனை எப்ரல் 20, 1975-ல் மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள்.
சுந்தராம்பாள் சுங்கைப்பட்டாணியில் மலேசிய நண்பன் பத்திரிகை முகவராக 1990 முதல் 2005 வரை பணியாற்றினார். பின்னர், தினக்குரல் பத்திரிகையின் துணை ஆசிரியராக 2005 முதல் 2008 வரை பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
சுந்தராம்பாளின் முதல் சிறுகதையான 'அகவையில் சிரிப்பு ஒன்றே போதும்' தமிழ் நேசனில் வெளிவந்தது. அப்போது அவருக்கு பதினாறு வயது. தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதினார். பல இலக்கியப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளார். வானொலிக்கும் எழுதியுள்ளார்.
இலக்கிய செயல்பாடு
- கெடா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக 2000-ஆம் ஆண்டில் தேர்வு பெற்றார்.
- எம். ஏ. இளஞ்செல்வன் பெயரில் எழுத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார்.
சமூகச் செயல்பாடு
- கெடா மாநில சமுக வள நல இயக்கத்தின் ஆலோசகர்
பரிசுகள், விருதுகள்
- மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'முருகு சுப்பிரமணியம்' தங்கப் பதக்க விருது அணிவிப்பு
- கெடா சுல்தான் இவருக்கு BKM எனும் விருது வழங்கினார். - 2012
- பொன்கூடு சிறுகதை நூலுக்கு 'கரிகாலன் விருது' - 2013
நூல்கள்
மனசே மனசே (அனுபவக் கட்டுரை நூல்) - 2017
உசாத்துணை
- மனசே மனசே (அனுபவக் கட்டுரை நூல்) - 2017
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.