வி.மரிய அந்தோனி: Difference between revisions
Manobharathi (talk | contribs) mNo edit summary |
(Category:கிறிஸ்தவம் சேர்க்கப்பட்டது) |
||
Line 35: | Line 35: | ||
[[Category:கவிஞர்கள்]] | [[Category:கவிஞர்கள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கிறிஸ்தவம்]] |
Revision as of 20:11, 23 December 2022
வி.மரிய அந்தோனி (அக்டோபர் 23, 1915- ஆகஸ்ட் 25, 1986 ) தமிழ்க் கவிஞர். கிறிஸ்தவ காவியமான அருளவதாரம் நூலை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
வி.மரிய அந்தோனி நாகர்கோயில் அருகே மறவன்குடியிருப்பு என்னும் ஊரில் அக்டோபர் 23, 1915-ல் பிறந்தார்.
தனிவாழ்க்கை
வி.மரிய அந்தோனி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 1939 முதல் 1949 வரையிலும், திருச்சி புனித வளனார் கல்லூரியில் 1941 முதல் 1951 வரையிலும், விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரியில் 1951 முதல் 1970 வரையிலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1970 முதல் 1976 வரையிலும் முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
வி. மரிய அந்தோனி கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தேம்பாவணி, மனோன்மணியம் நூல்களுக்கு உரை எழுதினார். இவர் எழுதிய அருளவதாரம் சமகாலக் கிறிஸ்தவ காப்பியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று.
இலக்கிய இடம்
மரிய அந்தோனி சமகால கிறிஸ்தவக் காப்பியமான அருளவதாரத்தின் ஆசிரியராக மதிக்கப்படுகிறார். அருளவதாரம் அண்மைக்கால கிறிஸ்தவக் காப்பியங்களில் பெரியது.
மறைவு
மரிய அந்தோனி ஆகஸ்ட் 25, 1986-ல் மறைந்தார்.
நூல்கள்
பொது
- மாரியும் உண்டு
- இலக்கிய உலகம்
- பாடுகளின் கீதம்
காவியம்
- அமரகீதம் (1968), நேருவின் வாழ்க்கை
- அருளவதாரம் (2006), ஏசுவின் வாழ்க்கை
நாவல்கள்
- ஊசிக்கோபுரம்
- சரோஜா
- மணிமலைத் துறவி
- யார் மகள்
உரை
- மனோன்மணியம்
- தேம்பாவணி
மொழியாக்கம்
- வராத வளவன் (ஜூலியஸ் சீசர்)
உசாத்துணை
- கிறிஸ்தவக் காப்பியங்கள் -யோ.ஞானசந்திர ஜான்சன் இணையநூலகம்
- கிறிஸ்தவக் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
✅Finalised Page