under review

ச.வைத்தியலிங்கம்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:Vaithi.jpg|thumb|ச.வைத்திலிங்கம் பிள்ளை]]
[[File:Vaithi.jpg|thumb|ச.வைத்திலிங்கம் பிள்ளை]]
'''ச.வைத்தியலிங்கம்பிள்ளை''' (1843 - செப்டெம்பர் 3, 1901) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர். சைவ அறிஞர். பழந்தமிழ் நூல் பதிப்பாளர் மற்றும் தமிழாசிரியர். இயற்றமிழ் போதகர் என அழைக்கப்பட்டார்.  
ச.வைத்தியலிங்கம்பிள்ளை (1843 - செப்டெம்பர் 3, 1901) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர். சைவ அறிஞர். பழந்தமிழ் நூல் பதிப்பாளர் மற்றும் தமிழாசிரியர். இயற்றமிழ் போதகர் என அழைக்கப்பட்டார்.  
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ச.வைத்திலிங்கம் பிள்ளை வல்வெட்டித்துறையில் சங்கரப்பிள்ளைக்கு (சங்கரநாதப்பிள்ளை) மகனாக 1843-ல் (மாசி மாதம் பூர நட்சத்திரம்) பிறந்தார். வல்லுவெட்டித்துறை பாடசாலையில் கல்வி பயின்றார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தென்னிந்தியாவுக்குச் சென்று சமஸ்கிருத நூல்களைப் பயின்றார். தர்க்கம், ஜோதிடம், வானசாஸ்திரம் ஆகிய துறைகளையும் கற்று புலமை பெற்றார். நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவர்களில் ஒருவர்.
ச.வைத்திலிங்கம் பிள்ளை வல்வெட்டித்துறையில் சங்கரப்பிள்ளைக்கு (சங்கரநாதப்பிள்ளை) மகனாக 1843-ல் (மாசி மாதம் பூர நட்சத்திரம்) பிறந்தார். வல்லுவெட்டித்துறை பாடசாலையில் கல்வி பயின்றார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தென்னிந்தியாவுக்குச் சென்று சமஸ்கிருத நூல்களைப் பயின்றார். தர்க்கம், ஜோதிடம், வானசாஸ்திரம் ஆகிய துறைகளையும் கற்று புலமை பெற்றார். நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவர்களில் ஒருவர்.
 
== இலக்கியப்பணி ==
== இலக்கியப்பணி ==
முத்திராட்சரசாலை இதழில் ’வல்வை மாணவன்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். சைவ சமய நூல்களுக்கு உரை எழுதினார். சைவ சமய நூல்கள் பல எழுதினார். பல நூல்களை திருத்தி, அச்சிட்டு வெளியிடார். கள்ளுக்குடிச்சிந்து, மாதரொழுக்க தங்கச்சிந்து ஆகிய சமூகம் பற்றிய நூல்கள் எழுதினார். மட்டக்களப்பில் விரிவுரைகள் பல செய்தார். 1878-ல் "நம்பியகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார்.  
முத்திராட்சரசாலை இதழில் ’வல்வை மாணவன்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். சைவ சமய நூல்களுக்கு உரை எழுதினார். சைவ சமய நூல்கள் பல எழுதினார். பல நூல்களை திருத்தி, அச்சிட்டு வெளியிடார். கள்ளுக்குடிச்சிந்து, மாதரொழுக்க தங்கச்சிந்து ஆகிய சமூகம் பற்றிய நூல்கள் எழுதினார். மட்டக்களப்பில் விரிவுரைகள் பல செய்தார். 1878-ல் "நம்பியகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார்.  
Line 43: Line 41:
* கல்வளையந்தாதியுரை
* கல்வளையந்தாதியுரை
* கந்தரலங்காரவுரை
* கந்தரலங்காரவுரை
===== பதிப்பித்த நூல்கள் =====
===== பதிப்பித்த நூல்கள் =====
* நாற்கவி ராச நம்பியகப் பொருளுரை
* நாற்கவி ராச நம்பியகப் பொருளுரை
* சிவராத்திரி புராணம் (1881)
* சிவராத்திரி புராணம் (1881)
* சூடாமணி நிகண்டு (1875)
* சூடாமணி நிகண்டு (1875)
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.valvettiturai.org/valvaipattidetails.php?id=25 வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ச.வைத்தியலிங்கம் பிள்ளை, வல்வையூர் அப்பாண்ணா, ஞானச்சுடர், மார்கழி 2008]
* [https://www.valvettiturai.org/valvaipattidetails.php?id=25 வல்வை இயற்றமிழ் போதகாசிரியர் ச.வைத்தியலிங்கம் பிள்ளை, வல்வையூர் அப்பாண்ணா, ஞானச்சுடர், மார்கழி 2008]
Line 54: Line 50:
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#57 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)]
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#57 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)]
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 08:02, 16 December 2022

ச.வைத்திலிங்கம் பிள்ளை

ச.வைத்தியலிங்கம்பிள்ளை (1843 - செப்டெம்பர் 3, 1901) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர். சைவ அறிஞர். பழந்தமிழ் நூல் பதிப்பாளர் மற்றும் தமிழாசிரியர். இயற்றமிழ் போதகர் என அழைக்கப்பட்டார்.

பிறப்பு, கல்வி

ச.வைத்திலிங்கம் பிள்ளை வல்வெட்டித்துறையில் சங்கரப்பிள்ளைக்கு (சங்கரநாதப்பிள்ளை) மகனாக 1843-ல் (மாசி மாதம் பூர நட்சத்திரம்) பிறந்தார். வல்லுவெட்டித்துறை பாடசாலையில் கல்வி பயின்றார். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தென்னிந்தியாவுக்குச் சென்று சமஸ்கிருத நூல்களைப் பயின்றார். தர்க்கம், ஜோதிடம், வானசாஸ்திரம் ஆகிய துறைகளையும் கற்று புலமை பெற்றார். நல்லூர் ஆறுமுக நாவலரின் மாணவர்களில் ஒருவர்.

இலக்கியப்பணி

முத்திராட்சரசாலை இதழில் ’வல்வை மாணவன்’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். சைவ சமய நூல்களுக்கு உரை எழுதினார். சைவ சமய நூல்கள் பல எழுதினார். பல நூல்களை திருத்தி, அச்சிட்டு வெளியிடார். கள்ளுக்குடிச்சிந்து, மாதரொழுக்க தங்கச்சிந்து ஆகிய சமூகம் பற்றிய நூல்கள் எழுதினார். மட்டக்களப்பில் விரிவுரைகள் பல செய்தார். 1878-ல் "நம்பியகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார்.

கண்டன இலக்கியம்

சி.வை.தாமோதரம்பிள்ளை எழுதிய "சைவமகத்துவ விளக்கம்" நூலுக்கு எழுந்த கண்டன நூலான சைவ மகத்துவ ஆபாச விளக்கம் என்னும் நூலை மறுத்து "சைவமகத்துவ பானு அல்லது சைவ மகத்துவ ஆபாச விளக்க மறுப்பு’ என்னும் நூலை எழுதியவர்.

மாணவர்கள்

மட்டக்களப்பு வித்வான் ச.பூபாலபிள்ளை இவரது மாணவர். உடுப்பிட்டி போதகர் ரெவெ.ஹோலண்ட் (Rev.Hoaland) இவரிடம் தமிழ் கற்றார். சி.ஆறுமுகம் பிள்ளை (அப்புக்குட்டி உபாத்யாயர்) போன்றவர்கள் இவரது புகழ்பெற்ற மாணவர்கள்

பதிப்பாளர்

சைவாபிமானி பத்திரிக்கையை அச்சிடுவதற்கும், பிற நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதற்கும் தன் ஊரில் ’முத்திராட்சகசாலை’ அச்சகத்தை நிறுவி நடத்தினார். வி. சின்னத்தம்பிப் புலவர் எழுதிய 'கல்வளை அந்தாதி' நூலுக்கு உரை எழுதி சென்னை ரிப்பன் அச்சுக் கூடத்தில் பதிப்பித்து வெளியிட்டார். சி.வை. தாமோதரம்பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய சிவராத்திரி புராணத்தை மெய்ப்பு நோக்கி சென்னை வித்தியாவர்த்தனி அச்சுக் கூடத்தில் 1885இல் பதிப்பித்து வெளியிட்டார்.

இதழியல்

சைவ அபிமானி என்ற பத்திரிகையை பாரதி நிலைய முத்திராக்ஷர சாலை அச்சகம் வெளியீடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார். வல்வை மாணவன் என்ற பெயரில் அதில் கட்டுரைகள் எழுதினார்

விருது

  • ’சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம்’ நூலுக்காக சென்னைப் பேரறிஞர்கள் இவருக்கு ’இயற்றமிழ்ப் போதகாசிரியர்’ பட்டத்தினை அளித்தனர்.
  • 1876-ல் இவர் எழுதிய சிந்தாமணி நிகண்டு இவருடைய முதன்மை நூல். இந்நூலுக்காக சென்னையில் சி.வை.தாமோதரம் பிள்ளை ஒரு விழா எடுத்துப் பாராட்டினார்.

மறைவு

செப்டெம்பர் 3, 1901 அன்று (ஆவணிமாதம் மூலம் நட்சத்திரம்) மறைந்தார்

இலக்கிய இடம்

ச.வைத்திலிங்கம் பிள்ளை யாழ்பாணம் ஆறுமுக நாவலருக்குப் பின்னர் இலங்கையில் உருவான சைவமீட்பு இயக்கம் மற்றும் தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆளுமைகளில் ஒருவர்

நூல்கள்

எழுதியவை
  • செல்வச் சந்நிதி முறை
  • சிந்தாமணி நிகண்டு (1876)
  • வல்வை வைத்தியேசர் பதிகம்
  • வல்வை வைத்தியேசர் ஊஞ்சல்
  • சாதி நிர்ணய புராணம்
  • சைவ மாகாத்மியம்
  • சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம்
  • கள்ளுகுடி சிந்து (இரண்டு பாகங்கள்)
  • மாதரொழுக்க தங்கச் சிந்து
  • கணிதசாரம்
  • நிம்பியாகப் பொருள்
உரைகள்
  • கந்தபுராணத்து அண்டகோசப்படலவுரை
  • கந்தபுராணம்-அண்ட கோசப் படலவுரை
  • கந்தபுராணம்-தெய்வயானை திருமணப் படலவுரை
  • கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப் படலவுரை
  • கந்தபுராணம்-சூரபன்மன் வதைப் படலவுரை(இது முற்றுப்பெறவில்லை)
  • கல்வளையந்தாதியுரை
  • கந்தரலங்காரவுரை
பதிப்பித்த நூல்கள்
  • நாற்கவி ராச நம்பியகப் பொருளுரை
  • சிவராத்திரி புராணம் (1881)
  • சூடாமணி நிகண்டு (1875)

உசாத்துணை


✅Finalised Page