under review

வே. சிதம்பரப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 14: Line 14:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஆளுமை:சிதம்பரப்பிள்ளை, வே: நூலகம்
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88,_%E0%AE%B5%E0%AF%87. ஆளுமை:சிதம்பரப்பிள்ளை, வே: நூலகம்]
 
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:35, 7 November 2022

வே. சிதம்பரப்பிள்ளை (இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி) ஈழத்து தமிழ்ப்புலவர். ஆசிரியர். உரைகள் பல எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வே. சிதம்பரப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். தன் பதின்மூன்றாவது வயதில் கண்பார்வையை முற்றாக இழந்தார். பிறர் வாசிக்கக் கேட்டும் அறிஞர் படிப்பிக்கும் இடங்களிலும், புராணபடனம் நடைபெறும் இடங்களிலும் போய்க் கேட்டும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வே. சிதம்பரப்பிள்ளை புராணங்களுக்குப் பொருள் கூறுவதிலும் பாக்கள் இயற்றுவதிலும் புலமை பெற்றவர். மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைக் கற்பிப்பதற்காகத் திண்ணைப் பள்ளிக்கூடத்தை நடத்தினார். கந்தபுரணத்துச் சூரபன்மன் வதைப்படலத்திற்கு உரை எழுதினார். கந்தபுராணத்துக்கும் தெய்வானை திருமணப்படலத்துக்கும், திருவானைக்காப்புராணத்துக்கும் உரை எழுதியுள்ளார்.

மறைவு

வே. சிதம்பரப்பிள்ளை நவம்பர் 15,1955-ல் காலமானார்.

நூல் பட்டியல்

உரைகள்
  • கந்தபுரணத்துச் சூரபன்மன் வதைப்படலம்
  • கந்தபுராணம்
  • தெய்வானை திருமணப்படலம்
  • திருவானைக்காப்புராணம்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.