under review

த. கைலாசபிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
த. கைலாசபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், பதிப்பாளர். சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக இருந்து மேம்படுத்தியவர்.
த. கைலாசபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், பதிப்பாளர். சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக இருந்து மேம்படுத்தியவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
த. கைலாசபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் ஞானப் பிரகாசர் மரபில் தம்பு என்பவருக்கு மகனாகப் பிறந்தார். ஆறுமுக நாவலரால் வண்ணார்பண்ணையில் தொடங்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையில் இளமைக் கல்வி கற்றார். செந்திநாதையரிடம் தமிழ் நூல்களை முறையாகக் கற்றார். உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் கற்றார். ஆறுமுகநாவலரிடம் சித்தாந்தம் கற்றார்.
த. கைலாசபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் ஞானப் பிரகாசர் மரபில் தம்பு என்பவருக்கு மகனாகப் பிறந்தார். [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரால்]] வண்ணார்பண்ணையில் தொடங்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையில் இளமைக் கல்வி கற்றார். செந்திநாதையரிடம் தமிழ் நூல்களை முறையாகக் கற்றார். உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் கற்றார். ஆறுமுகநாவலரிடம் சித்தாந்தம் கற்றார்.
== சைவம் ==
== சைவம் ==
த. கைலாசபிள்ளை ஆகமங்களையும் உபநிடதங்களையும் சைவாசாரமும் கற்றார். சைவசமய வளர்ச்சிக்கான பணிகளை செய்தார். சைவபரிபாலன சபையினர் வெளியிடும் "இந்து சாதனம்" பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
த. கைலாசபிள்ளை ஆகமங்களையும் உபநிடதங்களையும் சைவாசாரமும் கற்றார். சைவசமய வளர்ச்சிக்கான பணிகளை செய்தார். சைவபரிபாலன சபையினர் வெளியிடும் 'இந்து சாதனம்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
== சைவப்பிரகாச வித்தியாசாலை ==
== சைவப்பிரகாச வித்தியாசாலை ==
ச. பொன்னம்பலப் பிள்ளையவர்களுக்குப்பின், சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி புதிய தனிக் கட்டடத்தை அமைத்து நடத்தி வந்தார். அதன் தலைமை ஆசிரியராக சுன்னகம், அ. குமாரசுவாமிப்புலவர் இருந்தார். அவ்வித்தியாசாலையின் ஒரு பகுதியில், ஒரு காவிய பாடசாலையை அமைத்து நடத்தி, அரசினர் உதவிபெறச் செய்தார். அதனை மையமாகக் கொண்டு சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர், மானிப் பாய் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை மாதகல் சு. ஏரம்பையர், மாதகல் அ. அருணுசல ஐயர், நீர்வேலி ச. சிவபிரகாச பண்டிதர், ஊரெழு சு சரவணமுத்துப் புலவர் முதலியோர் உறுப்பினராக அமைந்து ஒரு தமிழ்ச்சங்கத்தினை அமைத்துத் திறம்பட நடத்தி வந்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கம் உருவாவதற்கு முன்னதாக இது அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் உந்தப்பட்டு பாண்டித் துரைத்தேவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை அமைத்தார்.
ச. பொன்னம்பலப் பிள்ளையவர்களுக்குப்பின், சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி புதிய தனிக் கட்டடத்தை அமைத்து நடத்தி வந்தார். அதன் தலைமை ஆசிரியராக சுன்னாகம், அ. குமாரசுவாமிப்புலவர் இருந்தார். அவ்வித்தியாசாலையின் ஒரு பகுதியில், ஒரு காவிய பாடசாலையை அமைத்து நடத்தி, அரசினர் உதவிபெறச் செய்தார். அதனை மையமாகக் கொண்டு சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர், மானிப் பாய் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை மாதகல் சு. ஏரம்பையர், மாதகல் அ. அருணுசல ஐயர், நீர்வேலி ச. சிவபிரகாச பண்டிதர், ஊரெழு சு சரவணமுத்துப் புலவர் முதலியோர் உறுப்பினராக அமைந்து ஒரு தமிழ்ச்சங்கத்தினை அமைத்துத் திறம்பட நடத்தி வந்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கம் உருவாவதற்கு முன்னதாக இது அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் உந்தப்பட்டு பாண்டித் துரைத்தேவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை அமைத்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
த. கைலாசபிள்ளை சிவஞானசித்தியார்-சுபக்கம் நூலை ஆராய்ந்து திருத்தமான பதிப்பாக வெளியிட்டார். ஆறுமுக நாவலரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதி, "ஆறுமுகநாவலர் சரித்திரம்" என்ற நூலை வெளியிட்டார்.  
த. கைலாசபிள்ளை சிவஞானசித்தியார்-சுபக்கம் நூலை ஆராய்ந்து திருத்தமான பதிப்பாக வெளியிட்டார். ஆறுமுக நாவலரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதி, "ஆறுமுகநாவலர் சரித்திரம்" என்ற நூலை வெளியிட்டார்.  
Line 14: Line 14:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:19, 21 October 2022

த. கைலாசபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், பதிப்பாளர். சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக இருந்து மேம்படுத்தியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

த. கைலாசபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் ஞானப் பிரகாசர் மரபில் தம்பு என்பவருக்கு மகனாகப் பிறந்தார். ஆறுமுக நாவலரால் வண்ணார்பண்ணையில் தொடங்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையில் இளமைக் கல்வி கற்றார். செந்திநாதையரிடம் தமிழ் நூல்களை முறையாகக் கற்றார். உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் கற்றார். ஆறுமுகநாவலரிடம் சித்தாந்தம் கற்றார்.

சைவம்

த. கைலாசபிள்ளை ஆகமங்களையும் உபநிடதங்களையும் சைவாசாரமும் கற்றார். சைவசமய வளர்ச்சிக்கான பணிகளை செய்தார். சைவபரிபாலன சபையினர் வெளியிடும் 'இந்து சாதனம்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.

சைவப்பிரகாச வித்தியாசாலை

ச. பொன்னம்பலப் பிள்ளையவர்களுக்குப்பின், சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி புதிய தனிக் கட்டடத்தை அமைத்து நடத்தி வந்தார். அதன் தலைமை ஆசிரியராக சுன்னாகம், அ. குமாரசுவாமிப்புலவர் இருந்தார். அவ்வித்தியாசாலையின் ஒரு பகுதியில், ஒரு காவிய பாடசாலையை அமைத்து நடத்தி, அரசினர் உதவிபெறச் செய்தார். அதனை மையமாகக் கொண்டு சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர், மானிப் பாய் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை மாதகல் சு. ஏரம்பையர், மாதகல் அ. அருணுசல ஐயர், நீர்வேலி ச. சிவபிரகாச பண்டிதர், ஊரெழு சு சரவணமுத்துப் புலவர் முதலியோர் உறுப்பினராக அமைந்து ஒரு தமிழ்ச்சங்கத்தினை அமைத்துத் திறம்பட நடத்தி வந்தனர். மதுரைத் தமிழ்ச் சங்கம் உருவாவதற்கு முன்னதாக இது அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் உந்தப்பட்டு பாண்டித் துரைத்தேவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை அமைத்தார்.

இலக்கிய வாழ்க்கை

த. கைலாசபிள்ளை சிவஞானசித்தியார்-சுபக்கம் நூலை ஆராய்ந்து திருத்தமான பதிப்பாக வெளியிட்டார். ஆறுமுக நாவலரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதி, "ஆறுமுகநாவலர் சரித்திரம்" என்ற நூலை வெளியிட்டார்.

நூல் பட்டியல்

பதிப்பித்தவை
  • சிவஞானசித்தியார்-சுபக்கம்
  • ஆறுமுகநாவலர் சரித்திரம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.