குதிரை மறம்: Difference between revisions
(Created page with "குதிரை மறம் நொச்சித் திணையின் துறைகளில் ஒன்று. குதிரையின் மறப்பண்பையும், வீரத்தையும் கூறும் துரை. == விளக்கம் == ======புறப்பொருள் வெண்பாமாலை====== புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு...") |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
குதிரை மறம் [[ | குதிரை மறம் [[நொச்சித்திணை]]யின் துறைகளில் ஒன்று. குதிரையின் மறப்பண்பையும், வீரத்தையும் கூறும் துரை. | ||
== விளக்கம் == | == விளக்கம் == | ||
Revision as of 04:07, 11 March 2025
குதிரை மறம் நொச்சித்திணையின் துறைகளில் ஒன்று. குதிரையின் மறப்பண்பையும், வீரத்தையும் கூறும் துரை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அம்பினை எய்யும் தொழிலால் சிறப்புப் பெற்ற நெடிய எயிலகத்தே, நொச்சியாரது தாவும் இயல்புடைய குதிரையின் மறத்தை விரிவாகச் சொல்வது குதிரை மறம் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஏமாண்ட நெடும்புரிசை
வாமானது வகைஉரைத்தன்று(5.5)
வெண்பா
தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறல் மறவர்
ஓங்கல் மதிலுள் ஒருதனிமா - ஞாங்கர்
மயிரணியப் பாங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய ஓடிவரும் (90)
பொருள்: மலைபோல் உயர்ந்த மதில்மேல் ஒப்பனை செய்யப் பெற்ற குதிரை ஒன்று, உழிஞையாரின் உயிரை உண்ண மேகம்போல் ஓடி வருகின்றது. அதனைத் தடுக்காதீர்.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.