being created

பூரம் சத்தியமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
(Para Added)
(Para Added; Book List Added)
Line 4: Line 4:
சத்தியமூர்த்தி, ஏப்ரல் 21, 1937 அன்று, புதுக்கோட்டையில், டி.சீனிவாச ஐயங்கார்- சீதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், மேல் நிலைக் கல்வியை ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயின்று கணிதத்தில் பட்டம் பெற்றார்.
சத்தியமூர்த்தி, ஏப்ரல் 21, 1937 அன்று, புதுக்கோட்டையில், டி.சீனிவாச ஐயங்கார்- சீதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், மேல் நிலைக் கல்வியை ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயின்று கணிதத்தில் பட்டம் பெற்றார்.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
படிப்பை முடித்ததும் சென்னைத் துறைமுக டிரஸ்டில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். திருமணமானது. அமுதன் சீனிவாசன், ராமானுஜன் என்று ஒரு மகன்களும், அனுசூயா, வேதவல்லி என இரு மகள்களும் பிறந்தனர்.
படிப்பை முடித்ததும் சென்னைத் துறைமுக டிரஸ்டில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். திருமணமானது. அமுதன் சீனிவாசன், ராமானுஜன் என்று ஒரு மகன்களும், அனுசூயா, வேதவல்லி என இரு மகள்களும் பிறந்தனர்.  சென்னை துறைமுகத்தின் தலைமை மேலாளராகப் (office superintendent) பதவி உயர்வு பெற்ற பூரம் சத்தியமூர்த்தி, 1992-ல் திடீரென ஏற்பட்ட கண்பார்வைக் குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். பதவி ஓய்வுக்குப் பின், மாணவர்களுக்கு வேதம் போதிக்கும் பணியைச் செய்து வந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
தாய் சீதா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைச் சிறு வயது முதலே வாசித்து வந்தார் பூரம் சத்தியமூர்த்தி. எழுத்தார்வத்தினால், மாமன்னர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சிறார்களுக்கான சிறுகதைகளை எழுத முற்பட்டார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘டிங் டாங்' சிறார் இதழில் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் வெளியாகின. தொடர்ந்து 'கண்ணன்' குழந்தைகள் இதழில் இவரது சிறுகதைகளும் நாடகங்களும் வெளியாகின.
தாய் சீதா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைச் சிறு வயது முதலே வாசித்து வந்தார் பூரம் சத்தியமூர்த்தி. மாமன்னர் கல்லூரியில் படிக்கும் காலத்தில், எழுத்தார்வத்தினால்,  சிறார்களுக்கான சிறுகதைகளை எழுத முற்பட்டார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘டிங் டாங்' சிறார் இதழில் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் வெளியாகின. தொடர்ந்து 'கண்ணன்' குழந்தைகள் இதழில் இவரது சிறுகதைகளும் நாடகங்களும் வெளியாகின.


சென்னைக்கு வந்ததும் தனது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். கோகுலம், ரத்னபாலா, ஆதவன், கல்கண்டு, பாப்பா மஞ்சரி, சின்ன கண்ணன் போன்ற சிறார் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுத விரும்பிய பூரம் சத்தியமூர்த்தி, கலைமகள் வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டார். இவர் எழுதிய `கருவளை” என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. 1990-ம் ஆண்டு அகில இந்திய வானொலி நடத்திய வானொலிப் போட்டியில், இவரது நாடகம் ஒலிபரப்பப்பட்டது.
சென்னைக்கு வந்ததும் தனது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். கோகுலம், ரத்னபாலா, ஆதவன், கல்கண்டு, பாப்பா மஞ்சரி, சின்ன கண்ணன் போன்ற சிறார் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுத விரும்பிய பூரம் சத்தியமூர்த்தி, கலைமகள் வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டார். இவர் எழுதிய `கருவளை” என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. சுதேசமித்திரன் இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகின.  


பூரம் சத்தியமூர்த்தி, சிறார்களுக்காக 51 சிறுகதைகளும், பொது வாசிப்புக்குரிய 54 பொதுச் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் நாடகங்களும் அடக்கம்.
பூரம் சத்தியமூர்த்தியின் சிறுகதைகளை கி.வா.ஜ., அழ.வள்ளியப்பா, கல்கி, கே. ஆர். வாசுதேவன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.


முறையாக வேதம் கற்றவர். வேதம் பற்றிய ஆவ்ய்க் கட்டுரைகளை ‘சப்தகிரி’ இதழில் எழுதியுள்ளார்.  
இவர் சிறார்களுக்காக எழுதிய முப்பத்தி ஐந்து சிறுவர் கதைகள், ‘அறிவூட்டும் கதைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. முறையாக வேதம் கற்றவர். வேதம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘சப்தகிரி’ இதழில் எழுதியுள்ளார். இவரது சில சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘பூரம் சிறுகதைகள்’ என்ற தலைபில் வெளியாகியுள்ளது. பத்திரிகைகளுக்காகவும் வானொலிக்காகவும் நாடகங்கள் பல எழுதியுள்ளார்.


பூரம் சத்தியமூர்த்தி, சிறார்களுக்காக 51 சிறுகதைகளும், பொது வாசிப்புக்குரிய 54 பொதுச் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் நாடகங்களும் அடக்கம். ஜோதிடம், ஆன்மிகம் சார்ந்து தனி நூல்கள் சிலவற்றையும் இவர் எழுதியுள்ளார்.
====== பூரம் சிறுகதை மன்றம் ======
வாசகர்களிடையே சிறுகதை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், சிறுகதை பற்றிய புதிய பார்வைக்கும், விமர்சன வளர்ச்சிக்கும் வித்திடுவதற்காகவும், சென்னை திருவல்லிக்கேணியில், தனது இல்லத்தில், 'பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதில் சிறுகதை ஆர்வலர்களையும், எழுத்தாளர்களையும் வாரந்தோறும் வரவழைத்து, சிறுகதைகளை வாசிக்கச் சொல்லி, திறனாய்வு செய்யும் பணியினை மேற்கொண்டார்.
====== ஒலி நூல் ======
இவரது தேர்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள் ‘நலம் தரும் சொல்’ மற்றும் ‘கருவளை’ என்ற அவரது சிறுகதைகளின் பெயரிலேயே ஒலி நூலாக வெளியாகியுள்ளன. பாம்பே கண்ணன்,  அவற்றைத் தயாரித்திருந்தார்.
== பரிசுகள்/விருதுகள் ==
== பரிசுகள்/விருதுகள் ==
சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான நாடகப் போட்டியில் முதல் பரிசு


சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும்
* சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான நாடகப் போட்டியில் முதல் பரிசு
* சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும்
* கண்ணன் இதழ் நடத்திய தொடர்கதைப் போட்டியில் முதல் பரிசு (கறுப்புக்கண்ணாடி தொடர்கதை, 1958)
* கலைமகள் ‘வண்ணச் சிறுகதைப் போட்டி’யில் முதல் பரிசு
* கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் பரிசு
* பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியில் பரிசு
* அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
* அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' விருது
* 'வித்யா வேத ரத்னா' பட்டம்
 
== மறைவு ==
உடல்நலக்குறைவு காரணமாக, பூரம் எஸ். சத்தியமூர்த்தி, 12 மே 2016 அன்று, சென்னை திருவல்லிக்கேணியில் காலமானார்.
ஆவணம்
 
பூரம் சத்தியமூர்த்தியைப் பற்றி ‘எழுத்துலக இமயம் பூரம் சத்தியமூர்த்தி’ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை திருச்சியைச் சேர்ந்த முனைவர் தாமோதரக் கண்ணன் தயாரித்துள்ளார்
 
வரலாற்று இடம்
 
கி.வா.ஜகந்நாதன், ஆர்வி. வரிசையில் வைத்து மதிப்பிடத்தகுந்தவர் பூரம் சத்தியமூர்த்தி. தன்னுடைய சிறுகதைகள் பற்றி இவர், ““இலக்கியங்கள் என்பவை சாதாரண பொழுதுபோக்கிற்கு அல்ல; அவை சமூகத்தைச் செம்மைப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த சாதனங்கள்” என்று கூறும் சத்தியமூர்த்தி, “மொழியில் இலக்கிய வளர்ச்சி இருந்தால்தான் அந்த மொழி வளர்கிறது என்று பொருள். இலக்கியங்கள் வளரவில்லை என்றால் நாட்டிலே எந்த வளர்ச்சியும் இருக்காது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் .
 
== நூல்கள் ==
 
====== சிறுகதைத் தொகுப்புகள் ======
 
* அறிவூட்டும் கதைகள்
* பூரம் சிறுகதைகள்
 
====== கட்டுரை நூல்கள் ======


கண்ணன் இதழ் நடத்திய தொடர்கதைப் போட்டியில் முதல் பரிசு
* எகிப்து நாட்டு பிரமிடுகள்
* ஓடு மனச்சக்தி
* சோதிடக்கலையைப் புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
* கைரேகை சோதிடம் –புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
* பாரத நாட்டு இசைக்கருவிகள்


கலைமகள் ‘வண்ணச் சிறுகதைப் போட்டி’யில் முதல் பரிசு
====== ஒலி நூல்கள் ======


கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் பரிசு
* நலம் தரும் சொல் (ஒலி நூல்)
* கருவளை (ஒலி நூல்)


பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியில் பரிசு
====== ஆங்கில நூல் ======


அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
* The Musical Instruments of India


அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' விருது
உசாத்துணை


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:44, 1 September 2022

பூரம் எஸ். சத்தியமூர்த்தி

சிறார் கதைகள், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள், நாடகங்கள் என்று எழுத்துலகில் செயல்பட்டவர் எஸ். சத்தியமூர்த்தி (பூரம் சத்தியமூர்த்தி; 1937 - 2016) மக்களிடையே சிறுகதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ’சென்னை பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்திப் பல சிறுகதை விமர்சனக் கூட்டங்களை நடத்தியவர். ‘எழுத்துலக இமயம் பூரம் சத்தியமூர்த்தி’ என்ற தலைப்பில், இவரைப் பற்றிய ஆவணப்படத்தை திருச்சியைச் சேர்ந்த முனைவர் தாமோதரக் கண்ணன் தயாரித்து அளித்துள்ளார்.

பிறப்பு, கல்வி

சத்தியமூர்த்தி, ஏப்ரல் 21, 1937 அன்று, புதுக்கோட்டையில், டி.சீனிவாச ஐயங்கார்- சீதா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை, ஸ்ரீ குலபதி பாலையாப் பள்ளியிலும், மேல் நிலைக் கல்வியை ஸ்ரீ பிரஹதாம்பாள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பயின்று கணிதத்தில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சென்னைத் துறைமுக டிரஸ்டில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். திருமணமானது. அமுதன் சீனிவாசன், ராமானுஜன் என்று ஒரு மகன்களும், அனுசூயா, வேதவல்லி என இரு மகள்களும் பிறந்தனர். சென்னை துறைமுகத்தின் தலைமை மேலாளராகப் (office superintendent) பதவி உயர்வு பெற்ற பூரம் சத்தியமூர்த்தி, 1992-ல் திடீரென ஏற்பட்ட கண்பார்வைக் குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். பதவி ஓய்வுக்குப் பின், மாணவர்களுக்கு வேதம் போதிக்கும் பணியைச் செய்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தாய் சீதா சேகரித்து வைத்திருந்த புத்தகங்களைச் சிறு வயது முதலே வாசித்து வந்தார் பூரம் சத்தியமூர்த்தி. மாமன்னர் கல்லூரியில் படிக்கும் காலத்தில், எழுத்தார்வத்தினால், சிறார்களுக்கான சிறுகதைகளை எழுத முற்பட்டார். புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘டிங் டாங்' சிறார் இதழில் இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் வெளியாகின. தொடர்ந்து 'கண்ணன்' குழந்தைகள் இதழில் இவரது சிறுகதைகளும் நாடகங்களும் வெளியாகின.

சென்னைக்கு வந்ததும் தனது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளுக்கு எழுதத் தொடங்கினார். கோகுலம், ரத்னபாலா, ஆதவன், கல்கண்டு, பாப்பா மஞ்சரி, சின்ன கண்ணன் போன்ற சிறார் இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. பெரியவர்களுக்காகவும் கதைகள் எழுத விரும்பிய பூரம் சத்தியமூர்த்தி, கலைமகள் வண்ணக் கதைச் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டார். இவர் எழுதிய `கருவளை” என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி, பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசுகளைப் பெற்றன. சுதேசமித்திரன் இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகின.

பூரம் சத்தியமூர்த்தியின் சிறுகதைகளை கி.வா.ஜ., அழ.வள்ளியப்பா, கல்கி, கே. ஆர். வாசுதேவன் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

இவர் சிறார்களுக்காக எழுதிய முப்பத்தி ஐந்து சிறுவர் கதைகள், ‘அறிவூட்டும் கதைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. முறையாக வேதம் கற்றவர். வேதம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘சப்தகிரி’ இதழில் எழுதியுள்ளார். இவரது சில சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ‘பூரம் சிறுகதைகள்’ என்ற தலைபில் வெளியாகியுள்ளது. பத்திரிகைகளுக்காகவும் வானொலிக்காகவும் நாடகங்கள் பல எழுதியுள்ளார்.

பூரம் சத்தியமூர்த்தி, சிறார்களுக்காக 51 சிறுகதைகளும், பொது வாசிப்புக்குரிய 54 பொதுச் சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில் நாடகங்களும் அடக்கம். ஜோதிடம், ஆன்மிகம் சார்ந்து தனி நூல்கள் சிலவற்றையும் இவர் எழுதியுள்ளார்.

பூரம் சிறுகதை மன்றம்

வாசகர்களிடையே சிறுகதை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், சிறுகதை பற்றிய புதிய பார்வைக்கும், விமர்சன வளர்ச்சிக்கும் வித்திடுவதற்காகவும், சென்னை திருவல்லிக்கேணியில், தனது இல்லத்தில், 'பூரம் சிறுகதை ரசிகர் மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதில் சிறுகதை ஆர்வலர்களையும், எழுத்தாளர்களையும் வாரந்தோறும் வரவழைத்து, சிறுகதைகளை வாசிக்கச் சொல்லி, திறனாய்வு செய்யும் பணியினை மேற்கொண்டார்.

ஒலி நூல்

இவரது தேர்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகள் ‘நலம் தரும் சொல்’ மற்றும் ‘கருவளை’ என்ற அவரது சிறுகதைகளின் பெயரிலேயே ஒலி நூலாக வெளியாகியுள்ளன. பாம்பே கண்ணன், அவற்றைத் தயாரித்திருந்தார்.

பரிசுகள்/விருதுகள்

  • சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான நாடகப் போட்டியில் முதல் பரிசு
  • சென்னைக் குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும்
  • கண்ணன் இதழ் நடத்திய தொடர்கதைப் போட்டியில் முதல் பரிசு (கறுப்புக்கண்ணாடி தொடர்கதை, 1958)
  • கலைமகள் ‘வண்ணச் சிறுகதைப் போட்டி’யில் முதல் பரிசு
  • கல்கி வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் பரிசு
  • பம்பாய் தமிழ்சங்க வெள்ளிவிழா நாடகப் போட்டியில் பரிசு
  • அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு
  • அறிவூட்டும் கதைகள் - நூலுக்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' விருது
  • 'வித்யா வேத ரத்னா' பட்டம்

மறைவு

உடல்நலக்குறைவு காரணமாக, பூரம் எஸ். சத்தியமூர்த்தி, 12 மே 2016 அன்று, சென்னை திருவல்லிக்கேணியில் காலமானார். ஆவணம்

பூரம் சத்தியமூர்த்தியைப் பற்றி ‘எழுத்துலக இமயம் பூரம் சத்தியமூர்த்தி’ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை திருச்சியைச் சேர்ந்த முனைவர் தாமோதரக் கண்ணன் தயாரித்துள்ளார்

வரலாற்று இடம்

கி.வா.ஜகந்நாதன், ஆர்வி. வரிசையில் வைத்து மதிப்பிடத்தகுந்தவர் பூரம் சத்தியமூர்த்தி. தன்னுடைய சிறுகதைகள் பற்றி இவர், ““இலக்கியங்கள் என்பவை சாதாரண பொழுதுபோக்கிற்கு அல்ல; அவை சமூகத்தைச் செம்மைப்படுத்தக்கூடிய மிகச் சிறந்த சாதனங்கள்” என்று கூறும் சத்தியமூர்த்தி, “மொழியில் இலக்கிய வளர்ச்சி இருந்தால்தான் அந்த மொழி வளர்கிறது என்று பொருள். இலக்கியங்கள் வளரவில்லை என்றால் நாட்டிலே எந்த வளர்ச்சியும் இருக்காது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் .

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • அறிவூட்டும் கதைகள்
  • பூரம் சிறுகதைகள்
கட்டுரை நூல்கள்
  • எகிப்து நாட்டு பிரமிடுகள்
  • ஓடு மனச்சக்தி
  • சோதிடக்கலையைப் புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
  • கைரேகை சோதிடம் –புரிந்து கொள்ளச் சில எளிய வழிகள்
  • பாரத நாட்டு இசைக்கருவிகள்
ஒலி நூல்கள்
  • நலம் தரும் சொல் (ஒலி நூல்)
  • கருவளை (ஒலி நூல்)
ஆங்கில நூல்
  • The Musical Instruments of India

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.