முத்துராசா குமார்: Difference between revisions
Line 8: | Line 8: | ||
”முத்துராசாகுமாரின் கவிதைகள் பெரும்பாலும் பால்யம் சார்ந்தவைகளாகவும், நீருடனான வெவ்வேறு வகை உறவுகளையும் பற்றியவைகளாகவும் உள்ளன.மண்ணின் வாழ்க்கை சார்ந்த சொல்வளம், உள்ளூர்ப் பண்பாட்டு அனுபவங்கள் என்று வளமிக்க கவிதைகளை முத்து ராசா குமாரின் கவிதை தொகுப்புகள் கொண்டிருக்கின்றன” என ஆசை மதிப்பிடுகிறார் | ”முத்துராசாகுமாரின் கவிதைகள் பெரும்பாலும் பால்யம் சார்ந்தவைகளாகவும், நீருடனான வெவ்வேறு வகை உறவுகளையும் பற்றியவைகளாகவும் உள்ளன.மண்ணின் வாழ்க்கை சார்ந்த சொல்வளம், உள்ளூர்ப் பண்பாட்டு அனுபவங்கள் என்று வளமிக்க கவிதைகளை முத்து ராசா குமாரின் கவிதை தொகுப்புகள் கொண்டிருக்கின்றன” என ஆசை மதிப்பிடுகிறார் | ||
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
===== | ===== கவிதைத் தொகுப்பு ===== | ||
* நீர்ச்சுழி (2020)- சால்ட் & தன்னறம் வெளியீடு | * நீர்ச்சுழி (2020)- சால்ட் & தன்னறம் வெளியீடு | ||
* பிடிமண் (2019)- சால்ட் & தன்னறம் வெளியீடு | * பிடிமண் (2019)- சால்ட் & தன்னறம் வெளியீடு | ||
====== சிறுகதைத் தொகுப்பு ====== | |||
* ஈத்து (2022) | |||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது - 2019இல் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அளித்தது. | * எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது - 2019இல் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அளித்தது. |
Revision as of 16:09, 24 August 2022
தமிழில் (பிறப்பு: 1992)எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்
பிறப்பு,கல்வி
முத்துராசா குமார் மதுரை சோழவந்தான் அருகில் உள்ள தென்கரை கிராமத்தில் 1992இல் குமார், அமுதா இணையருக்குப் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை முள்ளிப்பள்ளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். உயர்நிலைக்கல்வி அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவந்தானில் பயின்றார். சென்னை பல்கலை கழகத்தில் இதழியல் & தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
முத்துராசா குமார் தனது இலக்கிய ஆதர்சங்களாக கி.ராஜநாராயணன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'பிடி மண்' 2019இல் சால்ட் & தன்னறம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியானது. இரண்டாவது தொகுப்பு 'நீர்ச்சுழி' 2020இல் சால்ட் & தன்னறம் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. சூழலியல் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.
இலக்கிய இடம்
”முத்துராசாகுமாரின் கவிதைகள் பெரும்பாலும் பால்யம் சார்ந்தவைகளாகவும், நீருடனான வெவ்வேறு வகை உறவுகளையும் பற்றியவைகளாகவும் உள்ளன.மண்ணின் வாழ்க்கை சார்ந்த சொல்வளம், உள்ளூர்ப் பண்பாட்டு அனுபவங்கள் என்று வளமிக்க கவிதைகளை முத்து ராசா குமாரின் கவிதை தொகுப்புகள் கொண்டிருக்கின்றன” என ஆசை மதிப்பிடுகிறார்
படைப்புகள்
கவிதைத் தொகுப்பு
- நீர்ச்சுழி (2020)- சால்ட் & தன்னறம் வெளியீடு
- பிடிமண் (2019)- சால்ட் & தன்னறம் வெளியீடு
சிறுகதைத் தொகுப்பு
- ஈத்து (2022)
விருதுகள்
- எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது - 2019இல் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அளித்தது.
- தோழர் சுப்புராயலு நினைவு விருது - 2019இல் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் வழங்கியது.
- சௌமா இலக்கிய விருது - 2020இல் சௌமா கல்வி & சமூக நல அறக்கட்டளை வழங்கியது.
- திருப்பூர் இலக்கிய விருது - 2021
- கட்டுரைக்காக ஊடகத்துறையில்'LAADLI' விருது (2018)
இணைப்புகள்
- நூல் வெளி: முத்துராசா குமார்: தமிழின் நீர்க் கவிஞன்!
- பிறப்பு-இறப்பு என்னும் காலவெளியில் நிகழ்கிற பரிமாற்றங்கள்தான் ‘ஈத்து’: முத்துராசா குமார்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.