சௌந்தரா கைலாசம்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) (Created page with "சௌந்தரா கைலாசம் தமிழ்க்கவிஞர். {{Being created}} Category:Tamil Content") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
சௌந்தரா கைலாசம் தமிழ்க்கவிஞர். | சௌந்தரா கைலாசம் தமிழ்க்கவிஞர்(பெப்ரவரி 28, 1927 - அக்டோபர் 15 2010) தமிழக எழுத்தாளர். எளிதாகப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் பல கவிதைகளை எழுதியவர். சிலேடைகளைக் கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர். | ||
== பிறப்பு, கல்வி == | |||
திருச்சி மாவட்டம், செட்டிபாளையம் எனும் சிற்றூரில் 28-2-1927 அன்று தேசிய பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்தார்.தமிழைச் சொந்த முயற்சியில் படித்து மரபுச் செய்யுள்கள் | |||
பாடும் ஆற்றல் பெற்றவர். | |||
== தனி வாழ்க்கை == | |||
தனது 14 வது ஆண்டில்,சௌந்திரா திரு. பி.எஸ். கைலாசத்தை மணந்து கொண்டார் . பி.எஸ்.கைலாசம் ,அப்போது புகழ் பெற்ற வழக்கறிஞர் வி .எல் .எத்திராஜ் வழிகாட்டுதலின் கீழ் ஜூனியர் வக்கீலாய் வேலை பார்த்தார் .பி.எஸ். கைலாசம் சௌந்தராவின் இலக்கிய நடவடிக்கைகளை ஊக்குவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். மாணாக்கர்கள் அவரை ஒரு வாய்வீச்சு போட்டியில் ஒரு நீதிபதியாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு விரிவுரையை வழங்கும்படி நிர்பந்திக்கப்பட்டார், அவரது முதல் பேச்சு உரையாட அனைவரின் பாராட்டையும் பெற்றார் .இதுவே முதல் தூண்டுகோல் ஆயிற்று . | |||
== இலக்கியப்பணி == | |||
வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல், பல்வேறு சந்தங்கள் எனப் பற்பல செய்யுள் வடிவங்களையும் ஆற்றோட்டமாக, எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடப் பொழிந்துள்ளார், இவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்துடன் தொடர்புள்ள இவர், இயல்பாகவே அதிக எதிர்பார்ப்பைத் தூண்டினார்.ஆயினும் பெரும்பாலும் கடவுளர் துதியாகவும் மனிதரைப் போற்றுவதாகவும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. ஒருவரின் பெற்றோர், ஊர், அவருடைய சிறப்புகள் அனைத்தையும் செய்யுள் வடிவில் அடுக்கியுள்ளார். எதுகை மோனைகளையும் சந்தத்தையும் உருவிவிட்டால் அவை, கவிதை மதிப்பை அன்று ; உரைநடையின் மதிப்பைக்கூட பெறா. இறைத்துதியில் வருணனையும் தலபுராணமும் தாயே நீயே துணை என்பது போன்ற மரபார்ந்த வழிபாடும் வேண்டுதல்களுமே மிகுந்துள்ளன. | |||
இராணனின் '''ஈஸ்வர மாலை'''யைத் தமிழாக்கியுள்ளார் | |||
Revision as of 00:32, 20 August 2022
சௌந்தரா கைலாசம் தமிழ்க்கவிஞர்(பெப்ரவரி 28, 1927 - அக்டோபர் 15 2010) தமிழக எழுத்தாளர். எளிதாகப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் பல கவிதைகளை எழுதியவர். சிலேடைகளைக் கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.
பிறப்பு, கல்வி
திருச்சி மாவட்டம், செட்டிபாளையம் எனும் சிற்றூரில் 28-2-1927 அன்று தேசிய பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்தார்.தமிழைச் சொந்த முயற்சியில் படித்து மரபுச் செய்யுள்கள்
பாடும் ஆற்றல் பெற்றவர்.
தனி வாழ்க்கை
தனது 14 வது ஆண்டில்,சௌந்திரா திரு. பி.எஸ். கைலாசத்தை மணந்து கொண்டார் . பி.எஸ்.கைலாசம் ,அப்போது புகழ் பெற்ற வழக்கறிஞர் வி .எல் .எத்திராஜ் வழிகாட்டுதலின் கீழ் ஜூனியர் வக்கீலாய் வேலை பார்த்தார் .பி.எஸ். கைலாசம் சௌந்தராவின் இலக்கிய நடவடிக்கைகளை ஊக்குவித்தார். பச்சையப்பன் கல்லூரியில் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். மாணாக்கர்கள் அவரை ஒரு வாய்வீச்சு போட்டியில் ஒரு நீதிபதியாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு விரிவுரையை வழங்கும்படி நிர்பந்திக்கப்பட்டார், அவரது முதல் பேச்சு உரையாட அனைவரின் பாராட்டையும் பெற்றார் .இதுவே முதல் தூண்டுகோல் ஆயிற்று .
இலக்கியப்பணி
வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல், பல்வேறு சந்தங்கள் எனப் பற்பல செய்யுள் வடிவங்களையும் ஆற்றோட்டமாக, எதுகையும் மோனையும் கொஞ்சி விளையாடப் பொழிந்துள்ளார், இவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்துடன் தொடர்புள்ள இவர், இயல்பாகவே அதிக எதிர்பார்ப்பைத் தூண்டினார்.ஆயினும் பெரும்பாலும் கடவுளர் துதியாகவும் மனிதரைப் போற்றுவதாகவும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. ஒருவரின் பெற்றோர், ஊர், அவருடைய சிறப்புகள் அனைத்தையும் செய்யுள் வடிவில் அடுக்கியுள்ளார். எதுகை மோனைகளையும் சந்தத்தையும் உருவிவிட்டால் அவை, கவிதை மதிப்பை அன்று ; உரைநடையின் மதிப்பைக்கூட பெறா. இறைத்துதியில் வருணனையும் தலபுராணமும் தாயே நீயே துணை என்பது போன்ற மரபார்ந்த வழிபாடும் வேண்டுதல்களுமே மிகுந்துள்ளன.
இராணனின் ஈஸ்வர மாலையைத் தமிழாக்கியுள்ளார்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.